வியாழன், 30 ஜூன், 2016

டிஸ்லெக்ஸ்சியா - நோய் அல்ல

    



  இன்றைய நாள் தீவிர தொண்டைக்கட்டுடன் ஆரம்பித்தது. காலை ௧௦ மணிக்கு அறந்தையில் ஆசிரிய பெருமக்களுக்கு , ஒன்பதாம் வகுப்பில் உள்ள டிஸ்லெக்சியா  குழந்தைகளை கண்டறிவது எப்படி எனபது பற்றிய ( டிஸ்லெக்ஸ்சியா எனபது பற்றி அறிய நீங்கள் ஆமீர் கான் நடித்த தாரே சாமின் பர் என்ற படம் பார்த்தல் நலம் ) பயிற்சி அளித்தாக வேண்டிய சூழ்நிலை. 

  என்னசெய்வதென்று புரியாமல் தவிப்புடன் பயிற்சிக்கு கஸ்தூரி சார் அவர்களுடன் சென்றிருந்தேன். ஒருவேளை அங்கு செல்லும்போது வாயிலிருந்து வெறும் காற்று மட்டும் வந்தால் எல்லாத்தையும் மேலே இருக்கவர் பார்த்துக்கொள்வார் (கஸ்தூரி சார்) என்ற மனநிலையுடன் சென்றுவிட்டேன். ஒரு சின்ன மனதைரியம் என்னவென்றால் ஒரு மணி நேரம் தான் பயிற்சி அளிக்க வேண்டும். 


   எங்கள் வண்டி  பள்ளியின் முன்கேட்டில் நுழைந்தபோதே அங்கு இருந்தவர்கள் நல்ல இரண்டு அடிமைகள் சிக்கிவிட்டதாகவே எங்களை எண்ணியது  அங்கு அமர்ந்த பின்பு என் மரமண்டைக்கு புரிய வந்தது காலம் செய்த கோலம். சரி நடந்தது நடந்துவிட்டது சரி பயிற்சி பற்றிய செய்திக்கு வருகிறேன்.



டிஸ்லெக்ஸ்சியா என்பது  குறைபாடுதான். மாறாக அது நோய் அல்ல என்பது என்னுடைய புரிதல். கற்றலில் அதுவும் வாசித்தலில் , எழுதுதலில் , கணிதத்திறனில் ஏற்படும் ஒருவகை குறைபாடு. இவர்கள் சாதாரணமாக இவர்கள்  பாடங்களை கற்பதில்தான் குறைபாடுடைய மாணவர்கள் மற்றபடி மற்ற மாணவர்களைவிட வேறு சில திறன்களில் முற்போக்கானவர்கள். 


உதாரணமாக இவர்கள் செய்யும் தவறுகள் எழுத்துக்களை மாற்றி எழுதுவது அதாவது (PIT = BID) என எழுதுவது , வாசிக்க தெரியாமல் இருப்பது, சோம்பேறித்தனமாக இருப்பது போன்ற சிலவகை பிரச்சனைகளை மட்டுமே உடையவர்கள். 


இவர்களை சரி செய்வது எப்படி என்பதை பற்றி MDA ( Madras dyslexia assosiation ) ஒரு கையேடை தயாரித்து  பள்ளிக்கல்விதுறையிடம் கொடுத்துள்ளது. டிஸ்லெக்ஸ்சியா பற்றிய இன்னும் விரிவான கட்டுரை மற்றும் அவர்களை சரி செய்யும் வழிமுறைகள் பற்றிய கூறுகளையும் ஆராய்ந்து அது  பற்றிய விரிவான அலசல்களுடன் அடுத்த பதிவில் வருகிறேன் ...

நன்றியுடன் ஸ்ரீ 

புதன், 29 ஜூன், 2016

அவளுக்கானது - கவிதை

உன் ரோபாடிக் 
அசைவுகளில் 
எக்ஸ்டிரா 
அழகூட்டி 
நிற்கிறாய் !!!

உன் மூளையெனும் 
புராஸ்சஸரில் 
மில்லியன் பைட்களாய்
பதிவாகிட 
அலைகிறேன் !!!

உன் நியூரல் ஸ்கீமாவில் 
ஊடுருவ 
இக்கணமே 
இடம் தா !!!


உன் 
பைனரிகளில் 
என்னை 
சேமித்துக்கொள் !!!


இலக்கிய ரோபோ நீ 
உன்னை 
வியக்க 
வைக்கும் 
மலை நான்!!!


ஆக்கிரமித்துக்கொள் !
நம் அடுத்த 
வெர்ஷனை 
அப்கிரேட் 
செய்வோம் !!!


உன் மனமென்னும் 
மோட்டாரின் 
சிக்கல்களை 
டிரபுல்ஷூட் 
செய்துகொள் !!!


அநாவசியத்தை 
அன்னின்ஸ்டால் 
செய்ய 
அனுமதி கொடு !!!


நம்மை 
இங்கே 
டிஸ்மேன்டில் 
செய்ய 
எவராலும் 
முடியாது !!!


என் 
அப்டேட்களுக்காய்
காத்திருக்கும் 
பெண்ணே 
பிடி !!! 


என்
டெராபைட்களில் 
ஐ லவ் யூ

டெடிகேட்டட் டூ மை ஸ்வீட்டி 


- ஸ்ரீ 

செவ்வாய், 28 ஜூன், 2016

லெமூரியக் கண்டத்து மீன்கள் - நூல் அறிமுகம்

லெமூரியக் கண்டத்து மீன்கள் 



      சற்றேறக்குறைய  இந்த வருட்டத்தின் ஆரம்பத்தில் ஆன்மன் சார் அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நுழைந்திருந்தேன். புகழ்ச்சிக்காக அல்ல அவரின் கவிதை வரிகளுக்குள் எப்பொழுதுமே ஏதோ ஒரு காந்த சக்தியை உள்ளே வைத்து புதைத்து வைத்திருப்பார். அது நம்மை இழுத்து அந்த கவிதைக்குள்ளிருந்து வெளியே வரவிடாமல் செய்யும். 


 இப்பொழுதும் அதேதான் நடந்தது. ஆன்மன் சார் அவர்களிடமிருந்து நேற்றுதான் அவருடைய அன்பு பரிசாக லெமூரியக் கண்டத்து மீன்கள் கிடைக்கப்பெற்றேன். பொள்ளாச்சி இலக்கிய வட்ட வெளியீடு. ஒரு கவிதை புத்தகத்தை வாசிக்க குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது நான் எடுத்துக்கொள்வதுண்டு. இது அப்படியான புத்தகம் அல்ல நண்பர்களே. முதல் பக்கத்தை வாசிக்க தொடங்கிவிட்டீர்கள் எனில் அனைத்தையும் வாசித்து, சுவாசித்து முடித்துதான் வைப்பீர்கள். அனைத்தும் அக்மார்க் கவிதைகள். 


 உள்ளே உள்ள ஒவ்வொரு கவிதைக்கான அதிகபட்ச மெனக்கெடல் தெரிகிறது. வாழ்த்துக்கள ஆன்மன் சார். சரி லெமூரியக் கண்டத்து மீன்களில் உள்ள சின்ன சின்ன சுவாரஸ்யங்களை பார்ப்போம்.

உயிர்ப்பு என்ற தலைப்பில் 
காற்றை  
          நிற்பந்திக்காதே 
          நூலைக் கைவிடு 
          பறக்கட்டும் 
          பட்டம் 

இடிந்தகரை பற்றிய ஒரு அருமையான கவிதை 
திமிங்கிலங்களாக 
          உருமாறி 
          கரை ஒதுக்கி 
          நிலம் புகுகின்றது 
          புதைக்க இடம் மறுக்கப்பட்ட 
          அணுக்கழிவு 

தனிமை பற்றிய கவிதை 
அபத்தமாய் 
          இருக்கிறது 
          தனிமையை 
          தனிமையெனச்
          சொல்வது  
     
இப்படி பல்வேறு  தலைப்புகளையும் லெமூரிய கண்டத்து மீன்கலாக்கி நீந்த விட்டிருக்கிறார். வாங்கி படியுங்கள் முடிப்பதற்குள் நீங்களும் நிச்சயம் ஒரு கவிதை எழுதலாம். 
விலை ரூ  50/-. தேங்கியூ ஆன்மன் சார்.

லெமூரியக் கண்டத்து மீன்கள் - கலர் கலராக நீந்துகின்றன .

ஆசிரியர் : ஆன்மன்
தொலைபேசி : 8760052320
இ-மெயில்  : aanmanchennai@gmail.com
விலை : ரூ 50

நன்றியுடன் ஸ்ரீ .

வியாழன், 23 ஜூன், 2016

வைகறை வைகறை !!!

வைகறை வைகறை 

இது அவரின் முகநூல் கணக்கின் பெயர்... இன்றும் தொடர்பில் இருக்கிறார் கணிக்கின் வழி... ஆனால் ?


மணி கிட்டத்தட்ட  மாலை ஆறு...

ஒரு நண்பரின் வீட்டின்முன் நின்றுகொண்டிருந்தேன்... என்னுடன் வந்த நண்பரின் அலைபேசி ஒலித்தது. எடுத்த மறுநொடியே அதிர்ச்சியான வார்த்தைகளை முனுமுனுத்துக்கொண்டிருந்தார்.

என்ன என்ற நான் கேட்ட  அடுத்த நொடியில் வைகறை சார் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்றார் ????

அதிர்சியடைத்து உறுதிபடுத்துவதற்குள் புதுகையை கடந்து உண்மையிலேயே எங்களை பிரிந்து எங்களிடம் சொல்லாமல் அவரின் சொந்தஊரை நெருங்கியிருந்தார் அண்ணன் வைகறை.

என்னை எழுத தூண்டிய மனிதர். முதன்முதலில்  என்னை வீதிக் கூட்டத்தில் கவிதை வாசிக்க வைத்த  மனிதர். விதைக்கலாம் 25 நிகழ்வில்  தானே முன்னின்று  பல முன்னெடுப்புகளை செய்த மனிதர். என்னுடைய சொந்த வாழ்வின் பல நிலைகளில் என்னைப்பற்றி கவலைப்பட்டவர்களில் வைகறை அண்ணனும் ஒருவர். 

இறந்த இரண்டு நாட்களுக்கு முன் அலைபேசியில் பேசிக்கொண்டோம். அப்பொழுதுகூட அவர்  ஏதும் சொல்லவில்லை என்னிடம்?

 மருத்துவமனையில் அவதியுறும்போது அதன் வழியாக பல முறை சென்றேன் அப்பொழுதும் தெரியவில்லை அவர் அங்குதான் இருக்கிறார் என்று ?

எங்களின் கண்முன்னே காலத்திடம்  ஒரு பெறும் கவிஞனை தொலைத்துவிட்டோம் !!! 




எங்களின் நட்பையும் அன்பையும் நிருபிக்கும் வழியாக அந்த மாகவிஞனின் அன்பு மகனுக்கும் அவர் குடும்பத்திற்கும் உதவும் நோக்கில் அவர் மகனின் பெயரில் ஒரு சேமிப்பை ஏற்படுத்த ( FIXED DEPOSIT ) புதுகை வீதி இலக்கியக்களம் மற்றும் கணினி தமிழ்ச்சங்கம் ஒன்றிணைந்து இதுவரை 1,79,000 திரட்டியிருக்கிறது... 

எங்களின் இலக்கு 5,00,000....

இதுவரை வைகறை அண்ணனுக்காக நிதிவழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு நீங்களும் உங்களால் இயன்ற ஒரு தொகையை தருமாறு விழைகிறேன்....

அந்த கவிஞனின் பெயர் நிலைத்திருக்கட்டும் உங்களால்...


நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.

First Name        : MUTHU BASKARAN

Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
vaigaraifamilyfund@gmail.com

மிஸ் யூ வைகறை அண்ணா !!!



செவ்வாய், 21 ஜூன், 2016

தூக்கி எறியப்பட்ட சொற்கள் - வீதி 28

வீதி இலக்கியக் களம்  - புதுக்கோட்டை 


       கடந்த ஞாயிறு (20-06-2016) அன்று நடைபெற்ற வீதி இலக்கியக் கூட்டத்தில் நான் வாசித்த கவிதை :

தூக்கி எறியப்பட்ட சொற்கள் 


ஜென் போன்றதொரு 
ஆழ்ந்த தியானத்தில்
எச்சிலை விழுங்கியப்படியும் 
பேனாவின் பின்புறம் 
பற்களால் சிற்பம் செய்தபடியும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்  ...... 

இரவில் மொட்டைமாடி நடையிலும் 
ஹெட்செட் வழி இசையிலும் 
உறங்காத உறக்கத்திலும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

காலை கனவில்  
மலையில் நடந்தபடியும் 
குளத்தில் கல்லெறிந்தபடியும்
தூரலில் நனைந்தபடியும் 
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...


நினைவுகளை 
பேனாவில் ஊடுருவச்செய்து 
வார்த்தைகளாக்கி 
மைவழி சிதறச்செய்ய   
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

செவிகளில் 
ரீங்காரமிடும் சொற்களை 
பொறிக்கியெடுத்தும் 
சுற்றி வந்து தர்க்கம் செய்யும்
சொற்கள் தாண்டியும்  
காத்திருந்தேன் 
அவளுக்கான சொற்களுக்காய்...

உருண்டு பிரண்டும் 
உருக்கிச் சேர்த்தும்
உன்னதமாய் இல்லையென 
தூக்கியெறிந்தேன் 
உனக்காக எழுதப்பட்ட 
ஆயிரம் சொற்களை....
                                                       --பா . ஸ்ரீமலையப்பன்

திங்கள், 20 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - கடைசி பகுதி

என்ன நண்பர்களே!! இதோ இதோ ஓட்டத்தின் இறுதிப்பகுதிக்கு வந்துவிட்டோம்...

இந்த கடைசி ஓட்டத்தில் நாம் ஓடப்போவது ஆல்ப்ஸ் மலையில்... இந்த ஓட்டத்தை சுருக்கமாக " காட்டான்களின் ஓட்டம் " என்கிறார்கள்... 

ஓடியாங்கோ !!!


டூர் ஆப் ஜயண்ட்ஸ் : ( Tour des geants )


தூரம்        : 336 கிலோ. மீட்டர்


நாள்           : 168 மணி நேரம் 


இடம்         : அசோட்டா, ஆல்ப்ஸ் , இத்தாலி 


இடர்கள்  : குளிர் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் 






                   " உலகம் சுற்றும் காட்டான்கள் " என்கிறார்கள் இதை சுருக்கமாக.


                                இதில் பாதி பயண தூரம் மலையேற்றம்தான். அதாவது 24,000 மீட்டர் மலையை ஏறிக் கடக்க வேண்டும். அதுபோக இதில் மூன்று நாட்களில்  25 மலைகளைக் கடந்து ௨௦௦௦ மீட்டர் ஏறினால் நீங்கள் பாதி வின்னர்.


                              நாம் வெயில் நேரத்தில் பயணப்படும்போது சாலையில் கானல் நீர் தென்படுவதுபோல நீங்கள் மலையேரும்போது பனிச்சரிவுகள் ஏற்படுவதுபோல ஒரு மாயத்தோற்றம் ஏற்படும். கவனமாக இருத்தல் வேண்டும்.


                           நாம் பார்த்தவற்றில் மிகக் குறைந்த நுழைவுக்கட்டணம் உள்ள போட்டி இதுதான்  எனவே நிறைய பர்கேற்பாளர்கள் பெயர்கொடுத்துவிட்டு காத்திருக்கிறார்கள். 700 பேருக்கு மட்டுமே அனுமதி.


                      இதில் ஒரு எலிமினேஷன் செட்டப் உண்டு. மலையை குப்பையாக்கினால் நீங்கள் போட்டியிலிருந்து விளக்கபடுவீர்கள்.


மேலும் அறிய :



நன்றி விகடன் 

படங்கள் கூகிள் 

                                                                  - முடிந்தது -

இதுகாறும் வாசித்து, கருத்திட்டு  ஊக்கம் செய்த நண்பர்கள் 
அனைவருக்கும் நன்றி )



நன்றியுடன் ஸ்ரீ 
                   

ஞாயிறு, 19 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - பகுதி 6

      மறுபடி ஓட தயாராகுங்கள் நண்பர்களே... 


 இந்தமுறை ஓடப்போவது அமெரிக்காவில். ஓட்டம் அதன் பெயருக்கேற்றாற்போல் பொறுமையான ஓட்டம்தான். ஆனால் ஓடி முடிக்கையில் நாக்கு தள்ளிவிடும் என்பது கூடுதல் தகவல்... 


    வாங்க ஓடுவோம் !


ஹார்டுராக்  என்ட்யூரன்ஸ் :


தூரம்          : 160 கிலோ மீட்டர் 


நேரம்          : 48 மணி நேரம் 


இடம்          : கொலாரேடோ, அமெரிக்கா 


இடர்கள்   : புயல் , ஆழமான பள்ளத்தாக்குகள் , அதிக உயரம் 




        கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரமான " சில்வர்டன் " என்ற இடத்தில் இந்தபொட்டி நடைபெறுகிறது.


  கடுங்குளிர், அதீத வெப்பம் போன்றவற்றை சமாளிக்கும் அத்தகைய சூழ்நிலையில் பழக்கப்பட்ட வீரர்கள் மட்டுமே இதை சிறப்பாக செய்ய முடியும்.


          இயற்கைக்  காட்சிகள், வானவில்லை ரசித்து  சில நேரம் நல்ல சில்லென்ற இடத்தில் ஓடி மனதை குளிர்வித்துக்கொள்வதைத் தவிர மற்றவை அனைத்தும் கும்பிபாகம்தான்.


           இந்த போட்டியில் ஓடும் தூரத்தில் கால்வாசி தூரம் அதாவது 10,000 மீட்டர் உயரத்தை ஏறித்தான் கடக்க வேண்டும். நம் சபரிமலை வாசிகளுக்கு கொஞ்சம் சுலபமாய் இருக்கலாம்.


               போட்டியை முடிக்கும் இடத்தில் முத்தமிட்டு அதாவது அங்கே இருக்கும் ஹார்டுராக் என்ற பாறையை முத்தமிட்டுத்தான் நீங்கள் போட்டியை முடிவு செய்யவேண்டும். 


              ஒவ்வொரு வருடமும் இந்த போட்டி ஜூலை மாதம் நடைபெறும்.


மேலதிக விவரங்களுக்கு :



இன்னும் ஒரே ஒரு ஓட்டம் பாக்கி... அதோடு நாளை சந்திப்போம்...
           
                                                                                                                          நன்றியுடன் ஸ்ரீ 




சனி, 18 ஜூன், 2016

FAN - சினிமா விமர்சனம்


      பெரும்பாலும் இந்தி மொழிப்படங்கள் பார்ப்பதில்லை என்றாலும் என்னமோ சமிபத்தில் ஷாருக் நடிப்பில் வெளிவந்த FAN படம் பார்க்கவேண்டும்போல் இருந்தது.

               படம் ஹபிப் பைசலின் திரைக்கதையால் போரடித்தாலும் இன்றைய நிலையில் அதுவும் தமிழகத்தில் சில குறிப்பிடத்தகுந்த ஹீரோக்களின்மீது ரசிகனுக்கு இருக்கும் மனநிலையை அப்படியே பிரதிபலித்திருக்கிறது.

           ஷாருக் கொஞ்சம் மெனக்கட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய உண்மையான ஹீரோ இமேஜிற்கு எந்த பாதிப்பும் வராமல் அதே சமயம் ஒவ்வொரு ஹீரோவிற்கும் பின்னால் இருக்கும் ரசிகன் என்னவெல்லாம் யோசிப்பானோ அந்த உணர்சிகளை படத்தில் கொட்டியிருக்கிறார் மனிதர்.

        கவ்ரவாக வரும் ஷாருக் உண்மையிலேயே மிரட்டுகிறார். செண்டிமெண்ட் காட்சிகள் அருமை. சில காட்சிகள் முகம் சுழிக்கவும் வைக்கிறது.

   மனு ஆனந்த்தின் காமரா நம்முடன் பேசுகிறது. ஒவ்வொரு பிரேமிலும் விளையாண்டிருக்கிறார். சில காட்சிகள் ஹாலிவுட்தரம். வாழ்த்துக்கள் மக்கா.

  நம்ரதா ராவ் எடிட்டிங்கும் அருமை. திரைகதையில் மெனெக்கெட்டு இருந்தால். படம் பக்காவகியிருக்கும். பின்னணி இசை ஓகே. மனீஷ் ஷர்மா இயக்கிய விதத்தை பொறுத்தவரையில் ஷாருக் மற்றும் ஷாருக் ரசிகர்களை ஏமாற்றவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

     என்னடா ஹீரோயினை பத்தி ஒருவார்த்தைகூட இல்லை என்று யோசிக்க வேண்டாம். இதில் யார் ஹீரோயின் என்று எனக்கு இன்னும் புலப்படவில்லை.

பஞ்ச் - FAN - ஷாருக் பேன்களுக்கானது

ஸ்ரீ ரேட்டிங் - 3/5

வியாழன், 16 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - பகுதி 5 (இமயமலை )

         
     இன்று நம்முடைய இமயமலையில் ஒடப்போகிறோம் என்று நேற்றே கூறியிருந்தேன். நம்ம ஊர சும்மா நினைத்துவிடாதீர்கள் நண்பர்களே ! அப்படி நினைத்தீர்கள் என்றால் உங்களை முதலில்     புரட்டி எடுக்கப்போவது நம்முடைய மாரத்தான் தான். 


வாங்க ஓட துவங்குவோம் ...


லா அல்ட்ரா - தி ஹை


தூரம்         : 333 கிலோ மீட்டர் 


நேரம்        : 72 மணி நேரம் 


இடம்         : இமயமலை , இந்தியா 


இடர்கள் : மூச்சு திணறல் , வெயில் , குளிர் 







            மாராதான் ஓட்டத்திலும் நம்ம மலையை யாராலும் தோற்கடிக்க முடியாது. சிங்கிள் ஸ்டேஜ் போட்டியான இதை " தி ஹை" என்று அழைக்கிறார்கள்.( மலேடா இமயமலை )



            மைனஸ் டிகிரிக்கு டக்கென வானிலை மாறுவது , காலை நேரத்தில் கடும் வெயில் சுட்டெரிப்பது , ஆக்சிஜன் குறைபாட்டால் முச்சுதிணறல் ஏற்படுவது, பல மலைத்தொடர்களை கடக்க வேண்டிய நிலை . எல்லாவற்றையும் மீறி கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் இந்த சவாலை முடித்தால் நீங்கள்தான் வின்னர். ( இதுவும் ஒருவகை வைத்து செய்தலே )


           இந்த பயிற்சியை தேர்ந்தெடுக்க தனி தன்னம்பிக்கை தேவை என்கிறார்கள் இதற்குமுன் போட்டியில் பங்குபெற்றவர்கள். ( நல்லா கிளப்புராங்கடா பீதிய )



             இன்னொரு வாய்ப்பும் இதில் உண்டு நீங்கள் 333 கிலோமீட்டர் ஓட முடியாது எனில் 222 கிலோ மீட்டரை தேர்ந்தெடுத்து ஓடலாம் , அதுவும் முடியாதென்றால் 111 கிலோ மீட்டரை தேர்ந்தெடுக்கும் வசதி இந்த வகை மாரத்தானில் உள்ளது. ( நம்ம பயலுக கெட்டிகாரங்க என்பதற்கு மற்ற நாட்டைவிட இதுவே சாட்சி )


           பல அபாயங்கள் இதில் உள்ளது குறிப்பாக சில இடங்களில் 40 % ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கும். இதனால் சிலர் இறந்த சம்பவங்களும் உண்டு . (மெய்யாலுமே )



          "லின் ஹுவேல்ட் " என்ற ஆஸ்திரேலியர் 222 கிலோ மீட்டர் பிரிவில் வெற்றிபெற்று இருக்கிறார். 

                "ஐந்து நாட்களில் ஐந்து மாரத்தான்களை வென்று சாதனை படைத்த எனக்கு லே ,முதல் லடாக் வரை கால் விறைத்து ஓடி வந்ததை நினைத்தால் இந்து வரை கதி கலங்குகிறது எனபது லின் ஹுவேல்டின் பதிவு (போவியா ? போவியா ?)

என்ன மக்களே நம்ம ஊர் வீர சூரர்களை கலந்துகொள்ள செய்து நமது பெருமையை நிலைநாட்டலாமே ( பெண் கொடுக்கும் வீட்டார்கள் கவனத்திற்கு )



மேலும் இதை பற்றி அறிய :




நாளைக்கு வேற ஒரு நாட்டுல ஓடுவோம் தயாரா இருங்க நண்பர்களே !!!

                                                                                                                             நன்றியுடன் ஸ்ரீ 

புதன், 15 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - பகுதி 4

என்ன  நண்பர்களே நேற்று ஓடி ஓடி களைத்துப்போய் இருப்பீர்கள் !!

சும்மா விடுவோமா என்ன ?


தமிழ்நாட்டில் தற்போது " வச்சு செய்வது " என்ற பதம் வழக்கத்தில் உள்ளது . நான் சொல்லப்போகும் அடுத்த வகை மாரத்தானும் அதைப்போன்ற ஒன்றுதான். வாட்டி வதக்கி வச்சு செய்யும் மாரத்தான் பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருப்பீர்கள் என்று புரிகிறது...


வாங்க ஓடலாம் !!!


மாரத்தான் டேஸ் செபில்ஸ் :

தூரம்            : 251 கிலோ மீட்டர் 


நேரம்           : மூன்று நாட்கள் 


இடம்            : சகாரா பாலைவனம் 


இடர்கள்    : நுரையீரல் வறட்சி , தண்ணீர் தாகம் , கடுமையான                                    வெயில் மற்றும் மணல் புயல் அபாயம்.





  1986 ஆம் ஆண்டு பேட்ரிக் பூவர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த மாரத்தான்.


               உலகின் நீளமான மற்றும் சிக்கலான மாரத்தான் என்று இதை அழைக்கிறார்கள்.


        கொஞ்சமே கொஞ்சம் பேர் மட்டுமே இதுவரை வெற்றிபெற்று இருக்கிறார்கள் இதுவரை.


              சாதாரணமாக ஒவ்வொரு முறையும் உங்கள் முழங்கால் வரை மணலுக்குள் புதைவதால் நடப்பது மிகவும் சிரமம். சுமாராக 100 பாரன்கீட்டில் நடக்கவேண்டி இருக்கும். இதனால் நீங்கள் எளிதில் சோர்வடைந்து போவீர்கள்.

      
          திறம்பட பயிற்சி மேற்கொள்பவர்களால் மட்டுமே வெற்றிபெற முடியும். 


     கால் முழுக்க கோணி சாக்குகளை சுற்றிக்கொண்டு நீங்கள் போட்டியில் கலந்துகொள்வது பெஸ்ட்.


       ஒரே ஆறுதல் நீங்கள் பயணம் மேற்கொள்ளும் மூன்று நாட்களும் ஆங்காங்கே தண்ணீர், ஜூஸ், தங்கிக்கொள்ள கூடாரம் ஆகியவை அமைத்து தரப்படும்.


 மூன்று நாட்களுக்குள் நீங்கள் பயண தூரத்தை கடத்து வெற்றிபெற்றால் மிகப்பெரும் பரிசுத்தொகை கிடைக்கும் கூடவே சீயர் கேள்சின் முத்தங்களும்...


     என்ன நீங்க போட்டிக்கு தயார்தானே!!!




மேலதிக விவரங்களுக்கு :








நாளைக்கு நாம இமயமலையில் ஒடப்போறோம்.. 

இது நம்ம ஊரூ மாரத்தானுங்கோ ..
                                                                                                                  நன்றியுடன் ஸ்ரீ 

செவ்வாய், 14 ஜூன், 2016

ஓடு ராசா ஓடு - பகுதி 3 (ஜங்கிள் அமேசான் அல்ட்ரா )

                என்ன நண்பர்களே அடுத்த ஓட்டத்தை தொடங்குவோமா !

               இன்று நான் பதியப்போகும் ஓட்டத்தை "மாரத்தான்களிலேயே மிகவும் கடினமான மாரத்தான் " என்று அழைக்கிறார்கள். 

         ஹாலிவுட் படங்களில் "அந்த மிருகம் நம்மள தொரத்திட்டு வருது" என்று கேட்டிருப்பீர்கள்,    இந்த ஓட்டத்தில் நீங்கள் பங்கேற்பாளராக சென்றால் அதை நிச்சயம் நீங்கள் நேரிலேயே ரசிக்கவும் உணரவும் செய்யலாம்...

அப்படி என்னடா மாரத்தான்.... உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது!!!


ஜங்கிள் அமேசான்  அல்ட்ரா :

தூரம்            : 254 கிலோ.மீட்டர் 

நேரம்           : 168 மணி நேரம் 

இடம்            : அமேசான் காடு , பிரேசில் 

இடர்கள்    : புதை குழிகள் , ஜாகுவார் , அனகோண்டா , பிரானா ,
                           மற்ற காட்டு விலங்குகள் , கொசுத்தொல்லை மற்றும் 
                           கொஞ்சமே கொஞ்சம் அட்டைப் பூச்சிக்கடி .






                          அடர்த்தியான அமேசான் காடுதான் பயணப்பாதை. இதை ஒரு ரவுண்ட் முடித்துவிட்டால் நீங்கள் பியர் கிரில்ஸ் போன்ற மாமேதைகள் ஆகிவிடலாம்.


                         ஓடிக்கொண்டே இருக்கும்போது நீங்கள் பாதாளத்தில் இருந்தீர்கள் என்றால் புதைகுழிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

                     
                        ஜாகுவார் , கரடி , அனகோண்டா , பிரானா மீன்கள் , வகை வகையான குரங்குகள் , நீங்கள் பார்த்திராத ஏனைய விலங்குகளை போன்றவற்றை  நண்பர்களாக நினைத்துக்கொண்டே ஓடுதல் நலம்.


                       இந்த போட்டி மொத்தம் ஐந்து கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது. 


                       இந்த போட்டியில் இதுவரை பங்கேற்ற கணிசமான அன்பர்கள் " அமைச்சரே இன்னும் பயிற்சி வேண்டுமோ " என்றபடி பாதியிலேயே நடையை கட்டிய கதைகள்தான் அதிகம்.


                     நீங்கள் ஒருவேளை பாகுபலியாகவோ அல்லது ஜங்கிள் புக் சிறுவனாக நினைத்துக்கொண்டால் வெற்றி நிச்சயம்.


                     இந்த போட்டியில் நீங்கள் பங்குபெற வேண்டுமென்றால் பிரத்யேக பயிற்சி வகுப்பில் பயிற்சியெடுத்த பிறகுதான் விண்ணப்ப படிவத்தையே கையில் தொடமுடியும்.


    "நமக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்ட்ற மாதிரி "என்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வளைதலத்திற்குள் செல்லவும்....




லிங்கை சுட்டுக 

https://www.facebook.com/JungleMarathon/



கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள் .... அடுத்த ஓட்டத்தோடு அடுத்த பதிவில் வருகிறேன் நாளை ... 

                                                                                                           நன்றியுடன் ஸ்ரீ 

                   



நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...