புதன், 27 நவம்பர், 2019

காற்று வாசித்த கவிதை - நூல் அறிமுகம்


ஒருமுறையேனும் பொள்ளாச்சி இலக்கிய வட்ட கூட்டத்திற்கு போய் வரவேண்டும் என்று பலமுறை நினைத்துக்கொள்வேன். இன்றுவரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை. 

இன்று என்னுடைய புத்தக அலமாரியை வெகுநேரமாக பார்த்துகொண்டு நின்றேன். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து 2016 ஆவது ஆண்டு வெளிவந்த கோகிலா வேலுச்சாமி அவர்களின் "காற்று வாசித்த கவிதை" கண்ணில்பட்டது. கடந்த ஐந்தாறு மாதங்களில் தொடர்ச்சியாக நான் சிறுகதைகளையும் நாவல்களையும் மட்டுமே வாசித்து வந்திருக்கிறேன்.

கவிதை புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் அலாதியான ஒன்று.  கவிதை வாசிப்பது என்பது ஒரு கலை. யாரும் இல்லாத ஒரு அமைதியான இடத்தில் ஒரு மௌனியின் நிலையில் அமர்ந்து மெல்ல புத்தகத்தைப் பிரித்து ஒவ்வொரு கவிதையாக, சூடான தேநீரை மிடறு மிடறாக ரசித்து பருகுவதை போல்தான் ஒரு கவிதை புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிதைகளையும் வார்த்தை வார்த்தையாக அனுபவித்து ரசித்து ருசித்து படிக்க வேண்டும். அப்படிப் படிப்பதையே நான் எப்போதும் விரும்புவேன்.

கோகிலா அவர்களின் முதல் தொகுப்பு இது. மிகச்சிறந்த கவிதைகளை அவர்கள் செய்யாவிட்டாலும் அவரது வார்த்தை பிரயோகங்கள் அருமையாக இருக்கிறது. அவரது வார்த்தைகளின் மூலம் அவருடைய சமூக கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய பார்வையிலிருந்து கோகிலா அவர்களின் கவிதைகளை பார்க்கும் போது அவர் ஹைக்கூ பக்கம் இந்த கவிதைகளை திருப்பினால் நிச்சயமாக நமக்கு நிறைய பயனுள்ள கவிதைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்து இருந்தார் அந்த கவிதை மிக அருமையாக இருந்தது. இந்த புத்தகத்திற்கான விமர்சனத்தை எழுதும் இந்த தருணத்தில் இன்னும் வேறு சில கவிதை நூல்களை அவர் படைத்திருக்கலாம். அப்படி எதேனும் இருப்பின் அதையும் படிக்க விரும்புகிறேன். இந்த தொகுப்பு நிச்சயமாக தொடக்க வாசிபாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இப்படியான இளம் படைப்பாளர்கள் மேலும் மேலும் நிறைய கவிதைகளை படைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. 

இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த இரண்டு கவிதைகள் : 
1. பிரார்த்தனை இல்லா
    பாதயாத்திரை
    எறும்புக்கூட்டம்.

2.  குழந்தை பசியாறியதும்
      ஊர்கூடி ஒப்பாரி
      கள்ளிப்பால் விருந்து

வாழ்த்துக்கள் கவிஞர் கோகிலா அவர்களுக்கு.

நூல் : காற்று வாசித்த கவிதை
ஆசிரியர் : கோகிலா வேலுச்சாமி 
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை : ரூ.50/-

விமர்சனம் : 
                 ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன், 
                 புதுக்கோட்டை 

5 கருத்துகள்:

  1. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  2. நேர்மையான, நடுநிலையான விமர்சனம். கவிதைகளை எப்படி வாசித்தால் பிடிக்கும் என்பதை அனுபவித்துக் கூறியது ரசிக்க வைத்தது. என்னுடைய மனநிலையும் அதே.

    பதிலளிநீக்கு
  3. கவிதை - மனதின் எண்ண ஓட்டங்களுக்கான விதை >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...