திங்கள், 25 நவம்பர், 2019

கிளியோபாட்ரா - நூல் அறிமுகம்

கிளியோபாட்ரா - நூல் அறிமுகம்

பொதுவாக வரலாற்று நூல்கள் படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும். அப்படித்தான் கிளியோபாட்ரா வின் வரலாற்றை படிக்கும் சந்தர்ப்பம் இந்த நூலின் ஆசிரியர் முகிலின் வாயிலாக கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இந்த உலகின் மாபெரும் இரண்டு அரசர்களான ஜூலியஸ் சீசரும்  , மார்க் ஆண்டனியும் ஒரு பெண்ணின் முன்னாள் வீழ்ந்து கிடந்திருக்கிறார்கள் என்றால் ஒரு அரசி தன்னுடைய அழகால் மட்டும் அவர்களை வீழ்தியிருக்க முடியாது  என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அவளுடைய அழகை கொண்டுதான் ரோம் என்னும் பெரும் சாம்ராஜ்யத்தின் இரு வீரர்களை அடக்கிவிட்டால் என்பது உண்மையாக இருந்தால் அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருந்திருக்க வேண்டும் என்றும் பிரம்மிக்க  தோன்றுகிறது. நிச்சயமாக 2000 வருடத்திற்கு முன்னால் ஒரு பெண் இவ்வளவு தைரியமாக இருந்திருக்கிறார் என்றால் அவளை நான் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. 2000 வருடங்களாக அவளுடைய பெயர் ஏதோ ஒரு ரூபத்தில் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது இதோ இன்று என் மூலமாக உச்சரிக்கப்படுகிறது.

கிளியோபாட்ராவின்  தந்தையான பன்னிரண்டாம் தாலமிக்கு நாம் ஒருவகையில் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில் தன்னுடைய இரண்டு மகள்களையும் கல்வி கற்க அனுமதித்திருந்தார். ஒருவேளை கல்வி கற்றதனால் தான் என்னவோ புத்தி சாதுரியத்தால் இரண்டு மாபெரும் வீரர்களை தன்னுடைய மனோ தைரியத்தாலும் ராஜா தந்திரத்தாலும் கிளியோபாட்ரா வீழ்த்தியிருக்கக்கூடும். கல்வி கற்காமல் போயிருந்தால் வரலாறு மாறி இருக்குமோ என்னமோ.

இன்னும் கொஞ்சம் விளையாட்டாக அதிகப்படியாக சொல்லபோனால் அலெக்சாண்டர் என்ற மாபெரும் வீரன் இல்லாமல் போயிருந்தால் தாலமி இல்லாமல் போய் இருப்பார், ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி, புரூட்டஸ், கிளியோபாட்ரா, அகஸ்டஸ் போன்ற எவரும் இல்லாது போயிருப்பர்.

போகட்டும் புத்தகத்தில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்:

1. அலெக்ஸாண்டர் எகிப்து படையெடுப்பின்போது எகிப்தை வெற்றி கொண்டு அங்கே அலெக்ஸாண்ட்ரியா என்ற அழகான நகரத்தை நிறுவியிருக்கிறார்.

2. அலெக்ஸாண்டிரியாவில் பன்னிரண்டாம் தாலமியால் ஒரு அழகான அருங்காட்சியகம் அவற்றோடு கூடிய நூலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இந்த நூலகத்தில் தான் கிளியோபாட்ராவும் அவளது அக்காவான பெரினைசும் கல்வி கற்றிருக்கிறார்கள்.

3. எகிப்தியர்கள் தங்களுடைய சொந்த சகோதரர்களே திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தினை கொண்டிருந்திருக்கிறார்கள்.

4. ரோமில் செல்வந்த குடும்பத்தில் பிறந்த மார்க் ஆண்டனி கேபினியஸ் என்ற துணைத்தளபதி மூலம் தற்செயலாகத்தான் ரோம் படையில் சேர்ந்து இருக்கிறார்.

5. அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாட்ரா குளிப்பதற்காக 700 கழுதைகள் வளர்க்கப்பட்டு இருக்கிறது. பணியாளர்கள் காலையில் எழுந்து கழுதைப்பால் சேகரிக்க வேண்டுமாம். தொட்டியில் நிரப்பப்பட்ட பாலில் கிளியோபாட்ரா குளிப்பாறாம்.

5. எகிப்து நாட்டை அரசாட்சி செய்ய தன்னுடைய பதினொரு வயது சகோதரன் பதிமூன்றாம் தாலமியை மணந்து முதன்முதலில் அரியணை ஏறினால் கிளியோபாட்ரா.

6. கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசரிடம் நெருங்கி பழகும் போது ஜூலியஸ் சீசருக்கு வயது 52 கிளியோபாட்ராவுக்கு 23 வயதுதான். ஜூலியஸ் சீசர் மூலமாக கிளியோபாட்ராவுக்கு சீசரியன் என்ற மகன்  பிறந்தான்.

7. தன்னுடைய தினசரி உணவில் விஷம் கலந்து இருக்கிறதா என தெரிந்துகொள்ள ஒரு அடிமையை வைத்து அவள் முதலில் சாப்பிட்ட பிறகு தான் அதை கிளியோபாட்ரா சாப்பிடுவாராம்.

8. ஜூலியஸ் சீசர் குறுங்கத்தியால்   23 இடங்களில் குத்தி கொல்லப்பட்டார். இதை உறுதி செய்தவர் மருத்துவர்
அண்டிஸ்டியஸ். முதலில் குத்தியவர் சிம்பர் என்ற உறுப்பினர். ஜூலியஸ் சீசர் இறந்த பிறகு கிளியோபாட்ரா மனம் கொதித்து போய் ரோமில் இருந்து வெளியேறினார்.

9. எகிப்தியன் கோப்ரா வகை சேர்ந்த கொடிய விஷம் உள்ள நஜா வகை பாம்பை தன்னுடைய மார்பின் மீது கடிக்க விட்டு இறந்து போனால் என்பது சொல்லப்படும் செய்தி.

இப்படி கிளியோபாட்ரா என்ற மாபெரும் பேரழகியின் வாழ்க்கையை கூறுவதாக அமைந்திருக்கிறது இந்த புத்தகம். மிக அரிய தகவல்களை இந்த நூல் நமக்கு வழங்குகிறது. கிளியோபாட்ராவை பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள எலிசபெத் டெய்லர் 1963 ல் நடித்த கிளியோபாட்ரா படம் யூடியூபில் நமக்கு கிடைக்கிறது.

எல்லா வரலாறுகளும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை வழங்குகின்றன. கிளியோபாட்ராவும் அதற்கு விதிவிலக்கல்ல.

நூல் : கிளியோபாட்ரா
ஆசிரியர்:  முகில்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ.175/-


 அன்புடன் ,

             ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்


9 கருத்துகள்:

  1. கிளியோபாட்ரா பற்றி சிறப்பாக உங்கள் நூல் அறிமுகத்தில் எழுதியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. முன்னரே வாங்கி வைத்திருக்கிறேன், படித்திருக்கிறேன்.   சுவாரஸ்யமான புத்தகம்.

    பதிலளிநீக்கு
  3. அப்போ கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளிக்கும் கதை உண்மைதானா? ... சபாஷ் பலே பாண்டியா !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...