செவ்வாய், 24 மார்ச், 2020

Stay_away_from_Corona

#Stay_at_home
#Stay_away_from_Corona

எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள். கூட்டமாக இருக்க வேண்டாம் என்று சொன்னால் வெள்ளம் போல் பேருந்துகளை சுற்றிக் கொண்டு நிற்கின்றார்கள்.

 இக்கொடிய நோய் எவ்வாறெல்லாம் பரவும் என்று எவ்வளவு எடுத்துரைத்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவதிலேயே குறியாக இருக்கிறார்கள். 

நாம் தனித்தும் நம் குடும்பம் வேறொரு இடத்தில் இருப்பதும் மிகுந்த வேதனையான ஒன்றுதான். ஆனால் எங்கேயோ இருந்த கொரோனாவை நீங்களே கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள்ளும், உங்கள் ஊருக்குள்ளும் திணித்து விடப்போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

தயவு செய்து நீங்கள் இப்பொழுது இருக்கும் இடத்திலேயே இருங்கள். இக்கொடிய நோயிலிருந்து வெளியே வர இந்த கடின சூழ்நிலையை நாம் கடந்துதான் வர வேண்டும்.

அன்புடன்:
ஸ்ரீமலையப்பன்

4 கருத்துகள்:

  1. நன்றி
    தனித்திருப்போம்
    பிழைத்திருப்போம்

    பதிலளிநீக்கு
  2. நல்ல அறிவுரை, ஊருக்காக இல்லன்னாலும் நம்ம உற்றாருக்காவது அவரவர் இருக்கும் இடத்திலேயே இருப்போம்!!

    பதிலளிநீக்கு

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...