புதன், 25 மார்ச், 2020

கொரோனா - சில தகவல்கள்

#Stay_at_home

ஊரடங்கின் முதல்நாளை ஓரளவு நிதானமாகவே தமிழக மக்கள் கடந்து இருக்கிறார்கள். ஏதோ ஒரு மனக் கட்டுப்பாட்டோடு இன்றையநாள் கழிந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டை இறுதிவரை கடைபிடித்து இக்கொடிய நோயை விரட்டியடிப்போம். எங்கள் பகுதியில் சுமார் ஐந்து மணி முதல் பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி யாவது சென்று கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது.

நீங்கள் எதற்கெல்லாம் வெளியே செல்லலாம் :

1. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் தேவையெனில் அல்லது வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை எனில்

2. வீட்டிற்கு மிகுந்த மிகுந்த அத்தியாவசிய பொருள் தேவை எனில்

#குறிப்புகள்: 

1. பொருட்களை சிக்கனமாக செலவு செய்யுங்கள். 
2. காலை,மதிய, இரவு உணவுகளை எவ்வளவு சிக்கனமாக முடிக்க முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். 
3. வீட்டில் தானே இருக்கிறோம் என்று பலகாரங்கள் செய்ய பொருட்கள் வாங்க கடைக்கு ஓடாதீர்கள்.
4. பரிவர்த்தனைகளை முடிந்தவரை ஆன்லைனில் செய்யுங்கள்.

இதைத் தவிர வெளியே செல்லும் என்னும் உங்களுக்கு வரவே கூடாது. இதுபோன்ற இவர் சொல்லவேண்டிய கருத்துக்களை இந்த பதிவில் தொடரலாம் அதையும் இணைத்துக் கொள்வோம்.

#அன்புடன்:
பா. ஸ்ரீமலையப்பன்

#Stay_at_home
#Stay_away_from_Corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...