சனி, 20 பிப்ரவரி, 2016

விதைக்KALAM - 25 தொடர் பதிவு


தொடர்வண்டி நிலையத்தில் அமர்ந்து விதைக்கலாமை பற்றி பேசும்போது விதைக்கலாம் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கவில்லை... கலாம் அய்யாவின் மறைவு பெரும் உறுத்தலை ஏற்படுத்தியதன் விளைவு ?
இதோ 25 வாரங்களை நிறைவு செய்திருக்கிறோம் ! 349 கன்றுகள் நடப்பட்டு இருக்கின்றன ! கூடுதலான செய்தி  அனைத்தும் நேரடி கண்காணிப்பில் இருக்கிறது !
மேட்டருக்கு வரேன்....
இவ்வாறு ஒரு அமைப்பை தொடங்கலாம் என்று தொடர்புகொண்ட போது நம்பிக்கை வைத்து நடைபோட அடியெடுத்து கொடுத்தார்  கஸ்தூரி ரெங்கன் அய்யா !
வைத்த அனைத்து கன்றுகளையும் பராமரித்தால் மட்டுமே நான் அமைப்பில்  தொடர்வேன்  என்று கறாராக கூறிய நண்பர் சந்தோஷ் !

விதைக்கலாம் முதல் கூட்டம் (21-08-2015)
என் முன்னோர்களால் மரம் வெட்டப்பட்டது, நான் நட்டு வளர்க்க ஆசைபடுகிறேன் என்று வந்த நண்பர் பாக்கியராஜ் !
விதைக்கலாம் என்று  துணியில் பதாகை அமைத்து கொடுத்த பன்னீர்செல்வம் அய்யா... விதைக்கலாம் இன்றுவரை பார்த்ததில்லை அவரை  !
அனைத்து  நண்பர்களும் அமைபிற்கு பெயர் தேடினோம் ! இறுதியில் நண்பர்  பிரபாகரன் வைத்ததே விதைக்KALAM என்பது ! இயற்கை விவசாயம் பற்றி தன்னை சார்ந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் !
அண்ணன் காசிபாண்டி விதைக்கலாமின் பயணத்தை தன்னுடைய இலுப்பூர் பள்ளியில் தொடங்க வழிவகை செய்துகொடுத்தார்.
பணி ஓய்வு பெற்ற மறு வாரத்திலிருந்து விதைக்கலாமில் தன்னை ஈடுபடுத்திவரும் எங்கள் மணி சார் !
விதைகலாமின் முதல் நிதியாளர் எங்கள் நிலவன் அய்யா !
நன்றாக நினைவில் உள்ளது இன்றும் ! முதல் கூட்டத்திற்காக  அலைபேசியில் அழைத்த அத்துணை நண்பர்களும் இன்றுவரை இடைவிடாது ஒன்றாய் பயணிக்கிறோம்.  
இதை நீ கண்டிப்பாய் படிப்பாய் பாலாஜி ! பாலாஜி இந்த அக்கினிச்சிறகும் நானும் விதைக்கலாமின் மூலம் விதைதூவ ரெக்கை கட்டி பறக்க துவங்கினோம்... இதோ இன்று நாங்கள் 50 அக்கினிபறவைகளாய் வானத்தில் பறக்கிறோம்  நண்பர்களின் துணையோடு !!!
ஒவ்வொருவரையும் பற்றி இதில் விரிவாக எழுதுகிறேன்... இது விதைக்கலாமின் பயணம்... 
                                                          பயணம் தொடரும்... 

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...