tag:blogger.com,1999:blog-1611940759096945602024-03-06T04:14:44.213+05:30ETHILUM PUDHUMAIபழமையில் புதுமை காண்
ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comBlogger79125tag:blogger.com,1999:blog-161194075909694560.post-67395162542792759682020-05-31T13:56:00.001+05:302020-05-31T13:56:45.354+05:30நூல் விமர்சனம் - அஞ்ஞாடி<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1AmdwHYs2QkXnuLpKeKLNxeNRp2_BlN7wmK4EYChlUv9AsEk2A_ZZ7i-pCygyyd2IkD8XlQyNuXjSZigWkppmT_Ff2O2yWbzO6XU4tvhWlkpKqc-4WPPJD8KPCUAdp2PZeaFN5qNkBlm0/s1600/1590913578099649-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1AmdwHYs2QkXnuLpKeKLNxeNRp2_BlN7wmK4EYChlUv9AsEk2A_ZZ7i-pCygyyd2IkD8XlQyNuXjSZigWkppmT_Ff2O2yWbzO6XU4tvhWlkpKqc-4WPPJD8KPCUAdp2PZeaFN5qNkBlm0/s1600/1590913578099649-0.png" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>அஞ்ஞாடி!</div><div><br></div><div>இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என் மனதில் என்றும் நிறைந்திருக்கும் திருமிகு. குருநாதசுந்தரம் அய்யா அவர்கள். அவர் ஒருமுறை வீதி கலைஇலக்கிய கூட்டத்தில் இந்த நூலினை ஆய்வு செய்து விமர்சனம் செய்தார். அவரது விமர்சனம் உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. ஆனால் எனக்கு புத்தகம் கிடைக்கவில்லை. இது நடந்தது 2016 ஆம் ஆண்டு.</div><div><br></div><div>அப்போதிருந்து ஒவ்வொரு புத்தக கடைக்கு சென்றாலும் இந்த புத்தகத்தை தேடாத நாளில்லை. எனக்கு அது கிடைக்கவேயில்லை. பொன்வாசி அண்ணன் அவர்கள் இந்த நூலினை எனக்கு வாங்கி தருவதாக சொல்லியிருந்தார். அவரது கைக்கும் நூல் அகப்படவில்லை. இறுதியாக தங்கை ஹபிலா அவர்களிடம் கடந்த ஜனவரியில் சென்னை புத்தக காட்சிக்கு செல்லும் போது இந்த நூலினை கேட்டேன். நூல் அகப்பட்டது. இதை மிக சாதுர்யமாக அதிக தள்ளுபடியுடன் வாங்கித்தந்த ஹபி சார் அவர்களுக்கும் எனது நன்றிகள். அஞ்ஞாடி!</div><div><br></div><div>அஞ்ஞாடி! முதலில் என்னை கவர்ந்தது இந்த பெயர்தான். “அஞ்ஞாடி” என்றால் என்ன? பெரும் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தேன். இந்த விமர்சனத்தில்கூட அதன் விளக்கத்தை நான் சொல்லவேண்டாமென நினைக்கிறன். ( கண்டிப்பாக உங்களுக்கு தெரியேண்டுமெனில் என்னை தனிபதிவில் அழைக்கவும், தெரிந்தவர்கள் அமைதி காக்கவும்) ஒரு பத்து தலைமுறை வரலாற்றை தன்னுள்ளே கொண்டிருகிறது இந்நூல். </div><div><br></div><div>ஆண்டி மற்றும் மாரி இந்த இரண்டு கதாபாத்திரங்களுடன் துவங்குகிறது கதை. இருவரும் வெவ்வேறு குடியில் பிறந்தவர்கள். இருவருக்கும் உண்டான நட்பு அய்யயோ நம்மால் இந்த இரண்டு கதாபதிரங்களையும் விட்டு வெளிவரவே முடியாது. சிறுவர்களாக இருந்து பெரியவர்களாகி, குடும்பஸ்தர்களாக வளர்ந்து மகன் மகள் பேரன் பேத்தி கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி அவர்களது பிள்ளைகள் வரை நீள்கிறது நாவல். தென் தமிழகம் எப்பொழுதுமே வாழ்வியலை நமக்கு வேறுமாதிரியாக சொல்லித்தருகிறது. அஞ்ஞாடி அந்த காலத்தில் வாழ்ந்த எதார்த்தமான மனிதர்களை மிக எளிமையாக நமக்குள்ளே கடத்துகிறது.</div><div><br></div><div>ஆண்டி கருப்பியின் வாழ்வு என்பது நாம் ஒவ்வொருநாளும் வாழ ஆசைபடும் வாழ்வு. நம்முடைய வீடுகளில் வாழ்ந்த பாட்டனும் பாட்டியும், பூட்டனும் பூட்டியும் கூட இப்படி வாழ்ந்தவர்கள்தாம். ஆண்டிக்கும் கருப்பிக்கும் இருக்கும் காதலையும் பாசத்தையும் படிக்கப்படிக்க ஆனந்த கண்ணீர் நமக்கு நிச்சயம் வந்தே தீரும். ஆண்டி ஒவ்வொரு முறையும் ஏம்பிளி கருப்பி! எனும்போதெல்லாம், கருப்பி அவரை ஏ இவனே! என்று அழைக்கும்போதெல்லாம் ஐயோ அந்த அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை. எவ்வளவு அன்பு அவர்களுக்குள். “கண்ணின் கடைப்பார்வை கன்னியர்கள் காட்டிவிட்டால் மண்ணில் குமரற்கு மாமலையும் ஓர்கடுகாம்!”. இந்த வார்த்தையை முதிந்த வயதிலும் காப்பற்றியிருக்கின்றனர் இருவரும். ஒரு குடும்பத்தில் பெண் எவ்வளவு முக்கியமானவள் என்பதை இந்த நூலில் பல இடங்களில் நாம் உணர முடியும். ஆண்டி சுனங்கும்போதேல்லாம் அட நா இருக்கேன் வா என்று தைரியப்படுத்தும் கருப்பி போன்ற பெண்கள்தான் நிஜ நாயகிகள். </div><div><br></div><div>அஞ்ஞாடி படித்த பிறகு நிச்சயமாக உங்கள் வாழ்கை முறை சிறிதேனும் மாறும். ஆண்டி மற்றும் கருப்பின் மனவோட்டத்தினை புரிந்துகொண்டால் அன்பு, பாசம், நட்பு, உழைப்பு இத்தனையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். அஞ்ஞாடி நமக்கு அன்பையும், மனித விழுமியங்களையும் கற்றுத்தருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் நம்முடைய குணமும், மனமும் எந்தளவுக்கு மாற்றமடைதிருக்கிறது என்பதை நன்றாக உணர முடிகிறது.</div><div><br></div><div>மாரி-அனந்தி இந்த இருவருக்குமான அன்பும் இதேபோல் தான். மாரி வெள்ளந்தியான மனிதராக வலம் வருகிறார். வெளுப்புத்துரையில் அவர் பாடும் பாட்டும் அவர் சொல்லும் கதைகளும் எப்போதும் மனதில் நிற்கும் ரகம். எல்லா சாதிகளும் ஒரு ஊரில் வாழ்ந்தாலும் எல்லோருக்கும் ஒற்றுமையை கற்றுத்தரும் ஊராக நம்மை உணர வைக்கிறது கலிங்கலூரணி.ஆனால் கழுகுமலையின் நிலைமையே வேறு.</div><div><br></div><div>ஆம்! கழுகுமலை தான் சாதியத்தை முழுமையாக நமக்கு கற்றுத்தரும் ஊராக இருக்கிறது. கரிசலில் நாடார்களின் கொடுமையான வாழ்கையை முழுவதுமாக விளங்க வைப்பதாக இருக்கிறது. ஆரம்பத்தில் சாணார்கள் என்று சொல்லபட்ட பனையேறிகள் தங்களுடைய கடினமான உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முதலாளிகளாக உயர்கிறார்கள். அவர்களுடய ஒரே கோரிக்கை கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதுதான். அதுபோக கல்யாணம் நடக்கும் சமயங்களில் பட்டின பிரவேசம் போக வேண்டும். இதற்கான பல போராட்டங்கள் நடக்கிறது. முதல் படியாக சாணார் என்பதை நாடாராக மாற்றுகிறார்கள். மேல்சாதிகாரர்கள் எந்த சூழ்நிலையிலும் அவர்களை உள்ளே நுழையவிடவில்லை. நாடார்கள் தங்களுடய உரிமைகளை பெற முடியாமல் தவிக்கும்போது இந்த நிலையை மாற்ற கிருஸ்தவ மதத்திற்கு மாறுகிறார்கள். அப்படி மாறிய பிறகும் அவர்களுடய வாழ்கை மாறவில்லை. </div><div><br></div><div>ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்வில் எடுக்கும் மிகச்சிறிய முடிவுகள் மிகப்பெரும் விளைவுகள் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதான் வரலாறு. இது எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தும். நாம் காண முடியாத தென்தமிழக வரலாற்றை நம் கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் பூமணி அய்யா. மறவர்களுக்கும் நாடார்களுக்கும் நடந்த போராட்டங்கள் பற்றி நிறைய தகவல்களை தெரிந்துகொள்ள முடிகிறது. இரு சமூகங்களிலும் எத்தனை உயிர்கள் போயிருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த கால கட்டத்தில் இந்தியா ஆங்கிலேய ஆட்சியின் கீழே இருந்திருக்கிறது. எட்டப்ப மகாராஜாவின் வம்சாவழிகளின் கீழ்தான் அந்த பகுதியை ஆட்சி செய்திருக்கிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைமையிலும் இந்த சாதிய அடுக்குகளின் படிநிலைகள் எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது என்பதை நீங்களே புரிந்துகொள்ள வேண்டியது.</div><div><br></div><div>இதுபோக இந்த நூல் உண்மை கலந்த புனைவு. நூலில் நம்முடைய வரலாறில் ஊர்காவல் தெய்வங்களாக எப்படி உண்மையில் வாழ்ந்த மனிதர்கள் உருமாறியிருக்கிரார்ர்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, எட்டப்ப மன்னர்களின் வரலாறுகள் இடம்பெற்றிருக்கிறது. நாடார்கள் மற்றும் மறவர்களின் போராட்டங்களில் இவர்களின் தாக்கம் என்ன என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு கீழ் வந்தபிறகு கோர்ட் நடவடிக்கைகளின் சாதக பாதகங்களையும் உணர்ந்துகொள்ள முடியும். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகளின்போது இந்து முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட துயரத்தை படிக்ககூட முடியவில்லை. நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையும் நம்மை வியக்க வைக்கிறது. சமீபத்தில் சோ. தர்மன் அய்யா அவர்கள் எழுதிய சூழ் கூட இந்த மாதிரியான கதைகளத்தை கொண்டதுதான். </div><div><br></div><div>இந்த நாவலுக்காக பூமணி அய்யா அவர்களின் உழைப்பு என்பது அபாரமானது. கிட்டத்தட்ட ஏழு வருட உழைப்பை கொட்டியிருக்கிறார். இதற்காக பல ஆவணங்களை தேடிப்பிடித்து 2000 பக்கங்களை சேகரித்து படித்ததாக ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார். இதை படிக்கும்போது பெரும் ஆச்சர்யமே அவரது கரிசல் மொழிதான். மிகவும் எதார்த்தமான எழுத்து. இதில் வரும் தெம்மாங்கு பாடல்களை மெட்டுபோட்டு பாட ஆசை வருகிறது. கரிசல் இலக்கியம் என்பதெல்லாம் இல்லை இனி இந்த பக்கத்தில் உள்ள இலக்கியங்களை தெந்தமிழக வரலாறு எண்டு கூறுங்கள் என்கிறார். </div><div><br></div><div>எது எப்படியோ மனதுக்கு நிறைவான ஒரு நாவலை படித்த மகிழ்ச்சியில் இந்த வாசிப்பனுபவத்தை எழுதுகிறேன். ஒரு பக்கம் இதை நாடார் வரலாறு எனலாம். இன்னொரு பக்கம் இந்திய வரலாற்றில் ஏற்பட்ட ஆங்கிலேய காலனி ஆதிக்கம் கிறிஸ்தவத்தை எப்படி இங்கு பரப்பியது என்பதையும் அறியலாம். மதமாற்றம் ஒரு மிகப்பெரும் விளைவையும் மாற்றதையும் தமிழக மற்றும் இந்திய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியலாம்.</div><div><br></div><div>எல்லா மதங்களும் அன்பை போதிக்கிறது. பகவத்கீதையும், புனித குர்ஆனும், புனித பைபிளும் மனிதர்களுக்கு விழுமியங்களையும் அன்பையும் போதிக்கிறது. போதனைகள் நாம் வழிமாறிப் போகும்போது நம்மை செம்மைபடுத்தி நல்வழியில் நடத்தி செல்லவே என்பதை நாம் அறிவோம். ஆனால் நாம் போதனைகளை நடைமுறைப்படுத்த முனையும்போது ஏற்படும் எதார்த்த சிக்கல்களில் முடிவெடுக்க முடியாமல் தவிப்போம். அதுதான் பிற்பாடு வரலாறாக மாறுகிறது, அஞ்ஞாடியும் நமக்கு அன்பைத்தான் போதிக்கிறது. மற்ற மனிதர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள போதிக்கிறது. அந்த போதனையை ஏற்போம். அதன்வழி நடக்க முயற்சி செய்வோம். </div><div><br></div><div>இன்னும் ஆயிரம் பக்கம் வேண்டுமானாலும் இதைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்!</div><div><br></div><div>அஞ்ஞாடி – அன்பின் போதனை </div><div><br></div><div>நூல் : அஞ்ஞாடி</div><div>ஆசிரியர் : பூமணி </div><div>வெளியீடு : க்ரியா பதிப்பகம் </div><div>விலை : ரூ.1000-</div><div><br></div><div>விமர்சனம் :</div><div>ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்,</div><div>புதுக்கோட்டை.</div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-161194075909694560.post-60199249246240936702020-05-17T09:39:00.000+05:302020-05-17T09:39:14.301+05:30நூல் விமர்சனம் - வேள்பாரி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_2cuy _3dgx _2vxa" style="background-color: white; color: #1d2129; direction: ltr; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; padding: 0px; white-space: pre-wrap;">
நன்றி கீதாம்மா!!!</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="background-color: white; color: #1d2129; direction: ltr; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="background-color: white; color: #1d2129; direction: ltr; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo" style="font-family: inherit; font-weight: 600;">பறம்பு – பாரி = நமக்கான வாழ்க்கை முறை</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="background-color: white; color: #1d2129; direction: ltr; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="text_exposed_show" style="display: inline; font-family: inherit;"><br /></span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px;">
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
கிட்டத்தட்ட 2018 ஆண்டுகளுக்கு பிறகும் மனிதர்களால் அவன் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வள்ளல் தன்மையையும் வீரத்தையும் பற்றி கதைகள் சொல்லப்படுக்கொண்டே இருக்கிறது. அழிவில்லா புகழ் கொண்டவன் பாரி என்பதற்கு இந்த நாவலும் ஒரு சான்று. பாரியை பற்றி நமக்கு தெரிந்ததெல்லாம் அவன் கடையேழு வள்ளல்களில் ஒருவன், முல்லைக்குத் தேர் கொடுத்தவன், இன்னும் கூடுதலாக அவனுக்கு இரு மகள்கள் அங்கவை சங்கவை என்பதும்தான்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
நாம் அறியவேண்டிய பாரியை பற்றியும் அவனுடைய அறம், இயற்கையின் மீது அவனுக்கிருந்த அறிவு, அனுபவம், அதன் மீது அவன் கொண்ட காதல், தலைவனுக்கான தகுதி, அதையும் மீறி பறம்பு மக்கள்மேல் அவன் கொண்ட பாசம், நிலத்தின் மீது அவனுக்கிருந்த பற்று, எதையும் எதிர்பாக்காத அவன் உள்ளம், உலகத்துக்கே அவன் சொல்லித்தந்த ஈகை, தன் துணையின் மேல் அவனுக்கிருந்த காதல், தன் முன்னோர்கள் மீது அவனுக்கிருந்த மதிப்பு இதையெல்லாம் விட கூடுதலாக கற்றறிந்த புலவவர்களுக்கு அவன் தந்த மரியாதை, இதையெல்லாம் இந்த தலைமுறையும் இனிவரும் தலைமுறையும் அறிய அதன் வழி நடக்க சு. வெங்கடேசன் அவர்கள் தன் உழைப்பைக் கொட்டி கண்டெடுத்த அறிய புதையல்தான் வீரயுக நாயகன் வேள்பாரி.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
இதில் எதை சொல்வது எதை விடுப்பது. எதையுமே விட்டுவிட முடியாதபடி பெரும் நெருக்கடி நமக்கு. பாரியின் கதை கபிலரிலிருந்து தொடங்குகிறது. பறம்பின் மீது ஏறியதிலிருந்து பாரியும் பறம்பும் கபிலர் வாயிலாக நம்மை பறம்புக்குள்ளே கூட்டிச்செல்கிறது. அப்போது நாம் அடையும் பிரம்மிப்பிற்கு நிகர் வேறெதுவும் இல்லை. பாரி நம்மை கைபிடித்து அழைத்து சென்று ஒவ்வொரு செடியையும், இலைகளையும், மரம், பட்டை, வேர், பூ, காய், கனி, காட்டின் தட்பவெட்பம், பள்ளம், மேடு, குகை, காதல்,வீரம், என எல்லாவற்றையும் சொல்லிகொடுக்கிறார்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
மகிழ்ச்சியோடு எப்படி வாழ்வது என்பதை பறம்பு மக்களிடம்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கதையில் வரும் ஒவ்வொரு இணையும் எது மகிழ்ச்சி என்பதை நமக்கு சொல்லித்தருகிறார்கள். இது ஒன்றும் புதிதல்ல, என் பாட்டியை என் பாட்டன் எவ்வாறு காதலித்தான் என்பதை நான் அவன் மூலமாகத்தானே கற்றுக்கொள்ள முடியும். வெறும் ஆடம்பரத்திலும், ஆடை அணிகலன்களிலும் காதல் பிறந்துவிடுவதில்லை. அது அன்பு செய்வதில் இருக்கிறது என்பதை வெங்கடேசன் அவர்கள் அவரின் அழகிய மொழி நடையில் வார்த்து எடுத்திருக்கிறார். முருகன்-வள்ளி, பாரி - ஆதினி, நீலன்- மயிலா, உதிரன்- அங்கவை, சூளிவேல்- தூதுவை இப்படி எண்ணற்ற இணையர்கள் அடங்கிய கதைகள் இதில் இருக்கின்றன.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
பொதுவாக வெக்கை பூமியில் வாழும் மனிதர்களுக்கு இன்றுவரை மலையையும் அதன் கூறுகளையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் குறையவே இல்லை என்பதே நிதர்சனம். அது மூவேந்தர்களுக்கும் இல்லாமல் இருந்திருக்குமா என்ன? அந்த பேராசையின் விளைவுகளை இன்றுவரை மறைமுகமாக நாம் அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறோம். வேந்தர்கள் யாரும் அப்பாவிகளுக்கு நிகழப்போகும் விளைவுகளை பற்றி கவலைகொள்வதே இல்லை. அவர்களுக்கு அதிகாரம் வேண்டுமெனில் எந்த குலத்தை அழிக்கவும் அவர்கள் அறம் தவற தயாராக இருந்திருக்கிறார்கள். புகழ் போதை அவர்களை உச்சிக்கு கொண்டுசெல்லும்போது தன்னிலை இழந்திருக்கிறார்கள். ஆனால் பாரி எந்த இடத்திலும் அறம் தவறவில்லை. அவன் உலகிற்கு எடுத்துக்கட்டாக இருந்திருக்கிறான். அவன் நம்மை பொறுத்தவரை நிஜ பாகுபலி. தலைவன் சரியாக இருந்தால் மக்கள் எந்த நிலையிலும் அவனை எவரையும் நெருங்க விட மாட்டார்கள் என்பதற்கும் பறம்பு மக்களே சாட்சி. அதற்கு உதாரணமாக தேக்கன், முடியன், பழையன், இரவாதன், நீலன், வாரிக்கையன், திரையன் என பறம்பின் ஒவ்வொருவரையும் நம் கண்முன்னே நிறுத்துகிறார் வெங்கடேசன். இவர்கள் எல்லோருடைய பாதுகாப்பையும் உறுதி செய்கிறார் பாரி. அறம் தவறாத ஒருவனால் எதையும் செய்ய முடியும் என்பதே கதையின் முடிவு.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
அறத்திலிருந்து விலகாத திசைவேழர், தியாகம் செய்த பொற்சுவை, துரோகம் இழைத்த ஈக்கையன், சத்தியம் மறந்த மைய்யூர் கிழார், மேலும் இதில்வரும் கருக்கை வாணன், திதியன், சுகமதி, அலவன், கீதானி, முறியன் ஆசான், காலம்பன், முசுகுந்தர் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நமக்கு சொல்லித்தருவதே வாழ்க்கைப் பாடம். பெண்மையும் அவர்கள் வீரமும் இதில் போற்றப்படுவது சிறப்பு.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
இதில் எனக்கு முரண்பட்ட கேள்விகளும் ஏராளம் இருக்கிறது. எழுத்தாளர் அவர்கள் சில விஷயங்களில் சமரசம் செய்தி கதையின் போக்கை மாற்றிவிடாரோ என்று தோன்றுகிறது. எது எப்படியாயினும் அவரின் இந்த பெரும் உழைப்பிற்கு எதை தந்தும் ஈடுகட்டமுடியாது. இது நிச்சயம் பரவலாக படிக்கப்படவேண்டும். தமிழனின் மொழியும் இலக்கியமும் சாகாது வாழ இது போன்ற படைப்புகள் நிறைய தேவை.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo" style="font-family: inherit; font-weight: 600;">வேள்பாரியில் என்னை கவர்ந்த வாசகங்கள் :</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
1. ஆண் அவசரத்தின் அடையாளம், பெண் பக்குவத்தின் அடையாளம்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
2. யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
3. இயல்புதான் ஒன்றன் குணத்தை தீர்மானிக்க கூடியது.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
4.காதல் சம்பந்தப்பட்டவர்களின் சாமர்த்தியத்தால்தான் கைகூடும்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
5. தீமையை கணப்பொழுதில் நன்மையாய் மாற்ற முடிகிற வல்லமை வார்த்தைகளுக்கு உண்டு.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
6.நாடென்பது அரசற்ற மக்களின் ஆதிநிலம்</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
7. உணவு என்பது சேகரிப்பு தானே தவிர உற்பத்தி அல்ல.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
8. குழந்தைகளிடம் விட்டுக் கொடுக்கும்போதும் தோற்கும் போதும் தான் ஓர் ஆண் தாய்மையை அனுபவிக்கிறான்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
9. இயற்கை வழங்குகிறது நாங்கள் வாழ்கிறோம். இடையில் விற்கவும் வாங்கவும் நாம் யார்?</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
10. சொல் சுடும் போது சொல்லைச் சுடுவான் புலவன்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
11. ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறார். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
12. உரத்து சொல்லப்படுவதை விட காதோடு காதாக பேசும் கதைக்கு வயது அதிகம்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
13. இந்த கணமும் நீ தாக்கப்படலாம் ஆனால் அதற்கு முந்தைய கணம் உன்னுடையது அதில் நீ கையறுநிலையில் நின்றால் உன் குலம் ஆறோடு போகும்.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
14. கடித்து இழுக்க விலங்குகளுக்கு பல் இருப்பது போல் மனிதனுக்கு கதை. கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
15. பெரும் உண்மைகள் எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துத்தான் வெளிவருகின்றன.</div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo" style="font-family: inherit; font-weight: 600;">நம் முன்னோர்கள் நமக்கு உருவாக்கித்தந்த வாழ்க்கை முறையை மறந்து வாழ்கிறோம். கற்றவர்கள் ஆங்காங்கே அவமதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் கற்றவர்களுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பது சொலவடையாகிவிடக் கூடாது. கபிலரும், ஒளவையும் இன்னபிற அறிஞர் பெருமக்களும் இதையெல்லாம் எழுதி வைக்காமல் போயிருந்தால் என்னவாகி இருக்கும். எனவே தான் கபிலரை பெரும்புலவர் என்கிறோம். கற்றரிந்தவர்களை போற்றி வளர்க்காத எந்த சமூகமும் அழிந்தொழியும். அப்படி இன்றைய எழுத்தாளர்களையும் நாம் போற்றி பேணி பாதுகாக்க வேண்டும். ஆட்சியாளர்கள் அறம் உணர்த்து ஆட்சி செய்ய வேண்டும். ஏழை மக்கள் நல்வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழ்தால் பாரி போல் என்றும் இரவாப் புகழுடன் இருப்போம் என்பதில் ஐயமில்லை!</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo" style="font-family: inherit; font-weight: 600;">வேள்பாரி – நமக்கான வாழ்க்கை முறை</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<br /></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo _4yxp" style="font-family: inherit; font-style: italic; font-weight: 600;">நூல் : வீரயுக நாயகன் வேள்பாரி (இரண்டு பாகங்கள் )</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo _4yxp" style="font-family: inherit; font-style: italic; font-weight: 600;">ஆசிரியர் : சு.வெங்கடேசன்</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo _4yxp" style="font-family: inherit; font-style: italic; font-weight: 600;">விலை : 1350/-</span></div>
<div class="_2cuy _3dgx _2vxa" style="direction: ltr; font-family: inherit; margin: 0px; padding: 6px 0px 0px; white-space: pre-wrap;">
<span class="_4yxo _4yxp" style="font-family: inherit; font-style: italic; font-weight: 600;">வெளியீடு : ஆனந்த விகடன்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioREyk3ds_V0ZeOBJiiArH3_f3tCsBHP3fyqwtP5HDkJJDQzz7H3jBgJ3E45MTAtwLp9Xn4CCYAZDjp4x1yJlb5xfVrQ9e_7IapVmSUiJG65rhriPUyDKVnC2CnIAQqhriLCJfGvX0KRdW/s1600/WhatsApp+Image+2020-05-17+at+9.22.34+AM.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="795" data-original-width="1280" height="198" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioREyk3ds_V0ZeOBJiiArH3_f3tCsBHP3fyqwtP5HDkJJDQzz7H3jBgJ3E45MTAtwLp9Xn4CCYAZDjp4x1yJlb5xfVrQ9e_7IapVmSUiJG65rhriPUyDKVnC2CnIAQqhriLCJfGvX0KRdW/s320/WhatsApp+Image+2020-05-17+at+9.22.34+AM.jpeg" width="320" /></a></div>
</span></div>
</div>
</div>
ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-161194075909694560.post-66315466357633224122020-04-23T08:49:00.001+05:302020-04-23T08:49:47.509+05:30A Man called Ove - Book review<div><b>Before starting my review I would like to thank my beloved sister Miss.Hafila for giving this book to me as a birthday gift. Want more from you sissy!!! </b></div><div><b><br></b></div><div><b>After 26 days I finished a wonderful novel named "A man called ove" by Fredrik Backman . I haven't seen a person like ove in my life. But this character really touched my soul. He is a strict person but filled his heart with a lot of emotions. He was always deceived by his fate. During his childhood, he lost his mother and then his father. He lived alone in his house which was built by him. Local government cheated him when his house caught fire.</b></div><div><b><br></b></div><div><b>His only hope, only happiness, only peace was his wife Sonja. After Sonja's entry, he saw some blossoms in his life. She was everything to him. Again fate played his role : they had no child. Then finally Sonja left his life. She died. A man called ove decided to commit suicide. Again fate played his role : each time somebody came to forbid when he tried to commit suicide. Every man needs a woman to make his life meaningful. There are many roles women had : mother, sister, friend,wife etc. If we lose them, our life becomes meaningless. Another woman came to ove's life and that was Parvenah. She turned his life around. And how was that? Read "A man called ove".</b></div><div><b><br></b></div><div><b>This is a story with full of comedy from tragic Ove. Fredrik Backman had sketched all the characters wonderfully. Like Ove, Sonja, Rune, Anitha, Jimmy, Patrick etc, this story had another beautiful character : a cat which lived with Ove. It played a pumped role. </b></div><div><b><br></b></div><div><b>First of all when I started to read this , I didn't know how to pronounce the word "Ove". I googled it. I was shocked to see one video to pronounce the word Ove and I understood the worth of this book. I have attached that video link at the end of this for you to pronounce "Ove" and "Parvaneh". In addition, it was adapted as a film of the same name. Buy it and enjoy your reading!!</b></div><div><b><br></b></div><div><b>Links: </b></div><div><b>How Do You Say "Ove" : </b></div><div><b>https://youtu.be/gfiH9TxJiNU</b></div><div><b><br></b></div><div><b>How do you say "Parvaneh":</b></div><div><b>https://youtu.be/TKoxB-KrT38</b></div><div><b><br></b></div><div><b>A man Called Ove - A man to be loved</b><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjETZTmV-Y1IymPLzVIQEgE-AEoImLI2FZW-jjUwqeBzC38-ZUz5t0gF6x_Whmdl6Oze17l3hAFeU6PBdYBLGx-9gYlYUBmyJRKeehv4b5ATVHTQ8AzgHhg_TCWILaVCDU1ODP-AruEIGFf/s1600/1587611976050540-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjETZTmV-Y1IymPLzVIQEgE-AEoImLI2FZW-jjUwqeBzC38-ZUz5t0gF6x_Whmdl6Oze17l3hAFeU6PBdYBLGx-9gYlYUBmyJRKeehv4b5ATVHTQ8AzgHhg_TCWILaVCDU1ODP-AruEIGFf/s1600/1587611976050540-0.png" width="400">
</a>
</div></div><div><b><br></b></div><div><b>Book : A man called Ove</b></div><div><b>Author : Fredrik Backman</b></div><div><b>Price : Rs. 350/-</b></div><div><b><br></b></div><div><b>Yours Lovingly,</b></div><div><b>Srimalaiyappan Balachandran.</b></div><div><b><br></b></div><div><b>இதன் தமிழ் விமர்சனம்:</b></div><div><b><br></b></div><div><b>நூல் விமர்சனம் : </b></div><div><b>"A Man called Ove"</b></div><div><b><br></b></div><div><b>இந்த புத்தகத்தை என் பிறந்தநாள் பரிசாக அளித்த அன்புத் தங்கை ஹபிலாவிற்கு அன்பும் பிரியங்களையும் தவிர என்ன தந்துவிட முடியும் என்னால்! இப்போதைக்கு இந்த விமர்சனம்!!! </b></div><div><b>ஒரு ஆங்கில புத்தகத்திற்கு நான் எழுதும் முதல் தமிழ் விமர்சனம். </b></div><div><b><br></b></div><div><b>இந்த புத்தகத்தை படித்து முடிக்க எனக்கு 26 நாட்கள் ஆகியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. அப்படிப்பட்ட உணர்வு பூர்வமான கதை உவா என்ற இந்த மனிதருடையது. இது போன்றதொரு மனிதரை என் வாழ்க்கையில் நான் சந்தித்ததில்லை. இன்னல்களை மட்டுமே தன் குழந்தை பருவம் முதல் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை உங்கள் வாழ்க்கையில் சந்திக்க விரும்பினால் உவாவை படியுங்கள். </b></div><div><b><br></b></div><div><b>உவா ஒரு நேர்மையான தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்கிற மனிதர். அவர் தன்னைப் போலவே பிறரும் ஒழுங்கு முறைகளை தொடர்ந்து கடைபிடித்து வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நினைத்தது போலவே நடந்து போய் இருந்தால் பக்கத்துக்குப் பக்கம் நம்மை சிரிக்க வைக்கிற இந்த புத்தகம் நமக்கு கிடைத்திருக்காது. நம்முடைய பாணியில் சொல்லப்போனால் அவர் ஒரு அந்நியன் அம்பி. </b></div><div><b><br></b></div><div><b>உவா தன்னுடைய சிறு வயதிலேயே தாயை இழக்கிறார். பிறகு தந்தையுடைய வளர்ப்பில் வளர்கிறார். ஒரு சில ஆண்டுகளில் தன்னுடைய தந்தையையும் இழக்கிறார். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று அவர் சொல்லிக் கொடுத்த நெறிமுறைகளை கொண்டு தன்னுடைய வாழ்க்கையை தொடர்கிறார். உவாவிற்கு வேலை செய்வது மிகவும் பிடிக்கும். அவருக்கு கார் ஓட்டுவதும் அதை பராமரிப்பதும் மிகவும் பிடிக்கும். உவா தனக்காக ஒரு வீட்டை கட்டுகிறார். அதுவும் எரிந்து சாம்பல் ஆகிறது. விதி எப்போதும் மனிதர்களை விட்டுவைப்பதில்லை. </b></div><div><b><br></b></div><div><b>இப்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உவாவின் பொக்கிஷமாக வந்து சேர்கிறார் சோஞ்ஜா. இருவரும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். கரடுமுரடான மனிதர்களை கடிவாளம் போட்டு இழுக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். உவாவிற்கு சோஞ்ஜா. அவளும் இறந்து போகிறால். ஆணின் வாழ்க்கையில் மனைவி மறைந்த பிறகு ஏது வசந்தம்? </b></div><div><b><br></b></div><div><b>உவா தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். இந்த மனிதர்கள் நிம்மதியாக சாகவும் விடமாட்டார்கள் என்பதற்கு உவாவே சான்று. ஒவ்வொரு முறையும் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும் போதும் யாரோ ஒருவர் வந்து தடங்கல் செய்துவிடுவார். புத்தகத்தில் வரும் இந்த இடங்கள் எல்லாம் பெட்ரிக் பேக்மேன் தன்னுடைய எழுத்து நடையால் அதகளப்படுத்தி இருப்பார். </b></div><div><b><br></b></div><div><b>இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் ஆன பர்வானே, பேட்ரிக், ருணே, அனிதா, ஜிம்மி, அட்ரியன் என்று அத்தனை கதாபாத்திரங்களையும் அழகாக சித்தரிக்கிறார் பெட்ரிக் பேக்மேன். இதில் ஒரு பூனை இருக்கிறது அது உவாவை போட்டு பாடாய்படுத்தும் இடமெல்லாம் ரணகளம். </b></div><div><b><br></b></div><div><b>இறுதி அத்தியாயத்தை படிக்கும்போது பர்வானேவிற்கு ஒரு கடிதம் எழுதி இருப்பார் உவா. உங்களால் நிச்சயமாக தேம்பி அழாமல் அதை கடக்க முடியாது. இந்த ஸ்வீடன் நாவல் 2015 இறுதியில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு வெளிவந்துவிட்டது. </b></div><div><b><br></b></div><div><b>A man called Ove - அன்பு செய்யப்பட வேண்டிய மனிதர்!</b></div><div><b><br></b></div><div><b>நூல் : A man called Ove</b></div><div><b>ஆசிரியர் : பெட்ரிக் பேக்மேன்</b></div><div><b>விலை : ரூ.350/-</b></div><div><b><br></b></div><div><b>அன்புடன், </b></div><div><b>பா. ஸ்ரீமலையப்பன்.</b></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-161194075909694560.post-16173760065260544362020-03-27T12:37:00.001+05:302020-03-27T12:37:52.270+05:30அட்டணக்கால் - நூல் விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0A8M_5c9qt3SOrwe2jd8msHM1ElCyyXCziGC7RwTTU4FHOj68Rravo-De8GPN52RylNbA-BPa6BgtSru-4Zzm0xUCUlsemVFnWIaoXTNK8Qq6IXeFjtyc7XINe8AT8u7ooRx3IaJT162-/s1600/1585292861147132-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0A8M_5c9qt3SOrwe2jd8msHM1ElCyyXCziGC7RwTTU4FHOj68Rravo-De8GPN52RylNbA-BPa6BgtSru-4Zzm0xUCUlsemVFnWIaoXTNK8Qq6IXeFjtyc7XINe8AT8u7ooRx3IaJT162-/s1600/1585292861147132-0.png" width="400">
</a>
</div><div><b>நூல் விமர்சனம் :</b></div><div><b><br></b></div><div><b>"அட்டணக்கால்"</b></div><div><br></div><div>அண்ணன் சோலச்சி அவர்களின் ஐந்தாவது நூல் "அட்டணக்கால்". இதற்கு முன்னால் அவர் எழுதிய நான்கு நூல்களைப் போலவே இதுவும் முழுக்க முழுக்க சமூக நோக்கத்தோடு எழுதப்பட்டிருக்கிற நூல். சமூகத்தின் மீதுள்ள கோபங்களை தன்னுடைய பேனாவை கொண்டு குத்திக் கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த நூலில் மொத்தம் 20 சிறுகதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றும் மணிமணியான சிறுகதைகள். பெரும்பாலும் அவரின் மிக நெருக்கத்தில் இருக்கும் நண்பர்களின் பெயரை கதாபாத்திரங்கள் ஆக்கியிருக்கிறார். மனதிற்குள் வைத்து பூட்டியிருந்த ரணங்களுக்கு வரிகளை கொடுத்து அதை கதைகளாக வடித்து தந்திருக்கிறார். முக்கியமான இரண்டு மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். </div><div><br></div><div>முதலாவதாக இந்த புத்தகத்தின் தலைப்பான அட்டணக்கால். மிகுந்த வருத்தத்தையும் வேதனையும் அதேபோல தற்காலத்திலும் சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் கொடுமையையும் நேரில் பார்த்தது போலவே இருக்கிறது அந்தக் கதை. அதில் வரும் முருகேசனை போல எத்தனை பேர் துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கும் போதே மனம் விம்முகிறது. </div><div><br></div><div>இரண்டாவதாக கடைசி சாவு சிறுகதை. குடும்பத்திற்கு ஒருவர் ராணுவத்திற்கு சென்ற காலம் போய் குடும்பத்திற்கு ஒருவர் மது மீது மயக்கம் கொண்டு தங்களுடைய வாழ்க்கையையும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் சீரழித்து கொண்டிருக்கக் கூடிய இந்த காலகட்டத்தில் நிரோசா போன்ற ஒரு பெண் எத்தனை துயரங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதே கதை. அந்தக் கதையின் முடிவு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.</div><div><br></div><div>மூன்றாவதாக குறி . இளம் பெண்கள் தவறான ஆண்களால் எப்படி பார்க்கப்படுகிறார்கள் என்பதை வேறொரு கோணத்தில் கதை ஆக்கியிருக்கிறார் அண்ணன் சோலச்சி அவர்கள். </div><div><br></div><div>இப்படியாக இவை அல்லாமல் இன்னும் 17 கதைகள் இன்னும் சொல்லப்போனால் 17 புதிய கதைக் களங்களை அண்ணன் தேர்வுசெய்து அசத்தி விட்டார் என்றே சொல்ல வேண்டும். குழந்தை இலக்கியத்துக்கான சியூக்கியின் பயணம் என்ற ஒரு கதையையும் முயற்சி செய்திருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. சீக்கிரமாக குழந்தை இலக்கியத்துக்கான ஒரு சிறுகதை நூல் அவரிடமிருந்து வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணா.</div><div><br></div><div>ஒரு சாமானிய விமர்சகனாக இந்தக் கட்டத்தில் நான் சில கருத்துக்களையும் எழுத்தாளருக்கு வைக்க விரும்புகிறேன். பொதுவாக கதைக்கரு என்பது எழுத்தாளனின் குழந்தை. அந்த குழந்தை எப்படி வரவேண்டும் என்பது எழுத்தாளனின் உரிமை. இதை எந்தவொரு வாசிப்பாளனும் மறுக்க முடியாது. மாறாக ஒவ்வொரு கதையை எழுதும் போதும் வாசிப்பாளர்கள் நோக்கிலும் ஒவ்வொரு எழுத்தாளரும் சிந்திக்க வேண்டும். பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்கள், தலைசிறந்த மாணவர்கள், சராசரி மாணவர்கள் இருப்பதைப் போலவே வாசிப்புக்கும் இந்த ரகம் உண்டு என்பது என்னுடைய கருத்து. நல்ல களத்தை தேர்வு செய்துவிட்டு தலைசிறந்த மாணவர்களுக்கு மட்டும் புரிந்துவிட்டால் போதுமென்று நினைத்து எழுதிவிட்டால் போதாது எல்லோரையும் மனதில்கொண்டு ஒரு கதைக்கருவும் ஒரு புத்தகமும் அதன் நடையும் வார்த்தைகளும் இருக்கவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். இதை அண்ணன் தன்னுடைய அடுத்தடுத்த களங்களில் முயற்சி செய்வார் என்று நம்புகிறேன். </div><div><br></div><div>என்னுடைய தம்பி மலையப்பன் சிறந்த விமர்சகராக வளர்ந்து கொண்டிருக்கிறார் என்று முதலில் சொன்ன அண்ணனுக்கு முதன்முதலாக அவருடைய நூலுக்கு விமர்சனம் எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அன்பும் பிரியங்களும் அண்ணா. </div><div><br></div><div><b>ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் மீதும் அதில் நடக்கும் கொடுமைகளின் மீதும் கோபம் கொள்ள வேண்டும் , அந்தக் கொடுமைகளை மாற்றுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று அட்டணக்கால் போட்டுக்கொண்டு சொல்கிறார் அண்ணன் சோலச்சி.</b></div><div><b><br></b></div><div><b>அட்டணக்கால் - அட்டகாசம்</b></div><div><b><br></b></div><div><b>நூல் - அட்டணக்கால்</b></div><div><b>ஆசிரியர் : சோலச்சி</b></div><div><b>விலை : ரூ.150/-</b></div><div><b>வெளியீடு : மின்னல் கலைக்கூடம்</b></div><div><b><br></b></div><div><b>விமர்சனம்:</b></div><div><b>பா. ஸ்ரீமலையப்பன்</b></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-161194075909694560.post-73857460697241273652020-03-25T19:39:00.001+05:302020-03-25T19:39:59.187+05:30கொரோனா - சில தகவல்கள்<div>#Stay_at_home</div><div><br></div><div>ஊரடங்கின் முதல்நாளை ஓரளவு நிதானமாகவே தமிழக மக்கள் கடந்து இருக்கிறார்கள். ஏதோ ஒரு மனக் கட்டுப்பாட்டோடு இன்றையநாள் கழிந்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாட்டை இறுதிவரை கடைபிடித்து இக்கொடிய நோயை விரட்டியடிப்போம். எங்கள் பகுதியில் சுமார் ஐந்து மணி முதல் பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி யாவது சென்று கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் வேதனையையும் வருத்தத்தையும் தருகிறது.</div><div><br></div><div>நீங்கள் எதற்கெல்லாம் வெளியே செல்லலாம் :</div><div><br></div><div>1. பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய மருந்து மாத்திரைகள் தேவையெனில் அல்லது வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை எனில்</div><div><br></div><div>2. வீட்டிற்கு மிகுந்த மிகுந்த அத்தியாவசிய பொருள் தேவை எனில்</div><div><br></div><div>#குறிப்புகள்: </div><div><br></div><div>1. பொருட்களை சிக்கனமாக செலவு செய்யுங்கள். </div><div>2. காலை,மதிய, இரவு உணவுகளை எவ்வளவு சிக்கனமாக முடிக்க முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். </div><div>3. வீட்டில் தானே இருக்கிறோம் என்று பலகாரங்கள் செய்ய பொருட்கள் வாங்க கடைக்கு ஓடாதீர்கள்.</div><div>4. பரிவர்த்தனைகளை முடிந்தவரை ஆன்லைனில் செய்யுங்கள்.</div><div><br></div><div>இதைத் தவிர வெளியே செல்லும் என்னும் உங்களுக்கு வரவே கூடாது. இதுபோன்ற இவர் சொல்லவேண்டிய கருத்துக்களை இந்த பதிவில் தொடரலாம் அதையும் இணைத்துக் கொள்வோம்.</div><div><br></div><div>#அன்புடன்:</div><div>பா. ஸ்ரீமலையப்பன்</div><div><br></div><div>#Stay_at_home</div><div>#Stay_away_from_Corona<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXmcIoAapnYqoCF5nLtznedF6h-PTbotIgax036JdWDcktCViv09MVL9PN6o2i0aAtmrLvfDHOeKBU2CXMa3zVSOYKMw1Qj-pWwiQ3GYvttHNdvb9AF1W3qymcCX3GwAa3hve4vZ8A8ph7/s1600/1585145393043588-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXmcIoAapnYqoCF5nLtznedF6h-PTbotIgax036JdWDcktCViv09MVL9PN6o2i0aAtmrLvfDHOeKBU2CXMa3zVSOYKMw1Qj-pWwiQ3GYvttHNdvb9AF1W3qymcCX3GwAa3hve4vZ8A8ph7/s1600/1585145393043588-0.png" width="400">
</a>
</div></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-161194075909694560.post-44194156624526297392020-03-24T10:39:00.001+05:302020-03-24T10:39:08.993+05:30Stay_away_from_Corona<div>#Stay_at_home</div><div>#Stay_away_from_Corona<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKkhsAM2Zp3SaK8yiNp6DQ9VwMxlWRq-dqev1jnZsHaznHGQK2teXen186AWLb4e_m8xJpmEvOm9pnvxcKcLN3ZUpIbMgCy0d4fmqTL3FYep_TQL_enVxqJviPYgYfx7zkZnc0Lq0KHgfq/s1600/1585026542025943-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKkhsAM2Zp3SaK8yiNp6DQ9VwMxlWRq-dqev1jnZsHaznHGQK2teXen186AWLb4e_m8xJpmEvOm9pnvxcKcLN3ZUpIbMgCy0d4fmqTL3FYep_TQL_enVxqJviPYgYfx7zkZnc0Lq0KHgfq/s1600/1585026542025943-0.png" width="400">
</a>
</div></div><div><br></div><div>எந்த மாதிரியான விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்கள் தங்கள் சொந்த முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள். கூட்டமாக இருக்க வேண்டாம் என்று சொன்னால் வெள்ளம் போல் பேருந்துகளை சுற்றிக் கொண்டு நிற்கின்றார்கள்.</div><div><br></div><div> இக்கொடிய நோய் எவ்வாறெல்லாம் பரவும் என்று எவ்வளவு எடுத்துரைத்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவதிலேயே குறியாக இருக்கிறார்கள். </div><div><br></div><div>நாம் தனித்தும் நம் குடும்பம் வேறொரு இடத்தில் இருப்பதும் மிகுந்த வேதனையான ஒன்றுதான். ஆனால் எங்கேயோ இருந்த கொரோனாவை நீங்களே கொண்டு வந்து உங்கள் வீட்டிற்குள்ளும், உங்கள் ஊருக்குள்ளும் திணித்து விடப்போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். </div><div><br></div><div>தயவு செய்து நீங்கள் இப்பொழுது இருக்கும் இடத்திலேயே இருங்கள். இக்கொடிய நோயிலிருந்து வெளியே வர இந்த கடின சூழ்நிலையை நாம் கடந்துதான் வர வேண்டும்.</div><div><br></div><div>அன்புடன்:</div><div>ஸ்ரீமலையப்பன்</div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-161194075909694560.post-23071492296504316462020-03-23T19:53:00.001+05:302020-03-23T19:53:13.477+05:30சூல் - நூல் விமர்சனம்<div><b>*நூல் விமர்சனம்:*</b></div><div><b><br></b></div><div><b>*"சூல்" - சோ.தர்மன்*</b></div><div><b><br></b></div><div><b>*அதிக வரிகள் இருப்பதால் படிக்க மாட்டேன் என்று கடப்பவர்கள் நிச்சயம் படியுங்கள்.*</b></div><div><b><br></b></div><div><b>*இந்த புத்தகத்தை பரிசளித்த என் அன்பு தம்பி அரவிந்த ஹரிஹரனுக்கு என் அன்பும் பிரியங்களும்!*</b></div><div><b><br></b></div><div><b>*இதோ நான் எழுதுவதைப் படித்து விட்டு கொஞ்ச நேரம் கற்பனை செய்து பாருங்கள் இவ்வளவு அழகாக இருந்திருக்கிறது இவ்வுலகம் என்பது உங்களுக்குப் புரியும்.*</b></div><div><b><br></b></div><div><b>நீங்கள் காலையில் எழுந்திருக்கிறீர்கள், உங்கள் வீட்டின் முன்னால் இருக்கும் வேப்ப மரத்தின் மீது ஏறி வேப்பங்குலையை ஒடித்து பல் துலக்குகிறீர்கள், கொட்டகைக்குள் முளை குச்சியில் கட்டியிருக்கும் மாட்டை அவிழ்த்துக் கொண்டு வயலுக்கு செல்கிறீர்கள், பயிருக்கு நீர் பாய்ச்சி விட்டு உங்கள் துணையின் வரவுக்காக மாமரத்தின் கீழ் காத்துக் கிடக்கிறீர்கள், உங்கள் துணை மதிய சாப்பாட்டை கூடையில் வைத்து தலையில் சுமந்து கொண்டு வருகிறார், அந்த மரத்தின் கீழே உட்கார்ந்து அன்பாக உணவு பரிமாறுகிறார், இருவரும் இணைந்து சாப்பிடுகிறீர்கள், ஒரு கயிற்றுக் கட்டில் அங்கேயே கிடைக்கிறது, அதில் சிறிது நேர உறக்கம், மாலை எழுந்து மேய்ச்சலில் இருந்த மாடுகளை பிடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்கிறீர்கள், உங்கள் அண்டை வீட்டாருடன் உட்கார்ந்து சிறிது நேரம் அரட்டை, பின்னர் இரவு உணவை அக்கம்பக்கத்தாரோடு உட்கார்ந்து பகிர்ந்துண்டு பின்னர் இரவு உறக்கத்திற்கு செல்கிறீர்கள். எப்படி இருந்திருக்கிறது இவ்வுலகம்? அடடா!</b></div><div><b><br></b></div><div><b>அப்பொழுதும் சாதிகள் இருந்திருக்கிறது. எல்லோரும் ஒற்றுமையாக தான் இருந்திருக்கிறார்கள், சண்டைகளும் கூட வந்திருக்கிறது ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நடந்திருக்கிறது. மனிதர்கள் மனிதர்களாக பார்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஆடுமாடுகள், புழு பூச்சிகள், கம்மாய் கரைகள், வயல்வெளிகள், ஆறு கடல்கள், மலை முகடுகள், செடி கொடிகள், பயிர் வகைகள் அத்தனையையும் அவர்கள் அன்பு செய்திருக்கிறார்கள். சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். அப்பொழுதும் உயர்ந்த சாதியிலிருந்து தாழ்ந்த சாதி வரை இருந்திருக்கிறது. ஆனால் அனைவருக்கும் ஒன்று தெரிந்திருக்கிறது, இந்த உலகத்தில் எல்லோரும் எல்லாரையும் சார்ந்துதான் வாழ வேண்டும் என்ற நியதியை கடைபிடித்து அன்போடு வாழ்ந்திருக்கிறார்கள். </b></div><div><b><br></b></div><div><b>அந்த உலகத்தில் அன்பு ஒன்றே பிரதானம். உணவில்லாமல் ஒருவர் இருக்கவே இல்லை. எல்லோர் வீடும் எல்லோருக்காகவும் திறந்தே இருந்திருக்கிறது. மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்கள். ஊருக்காக யாரெல்லாம் உயிர் விட்டார்களோ அவர்களே அவர்களது தெய்வங்களாக மாறி இருக்கிறது. வேறு யாரையும் அவர்கள் கையெடுத்துக் கும்பிட வில்லை. மிகுந்த அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இயற்கையை காதலித்து இயற்கையை வழிபட்டு இயற்கையை மகிழ்வித்து இருக்கிறார்கள். இயற்கையும் அவர்களை காதலித்து அவர்களை வழிபட்டு அவர்களை மகிழ்வித்து அன்பு செய்து இருக்கிறது. </b></div><div><b><br></b></div><div><b>ஒரு ஊர்தான் கதை இந்த நூலில். நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்த ஒரு ஊர் இந்த 21 ஆம் நூற்றாண்டில் எப்படி மாறிப் போயிருக்கிறது என்பதை நம் கண்முன்னே காட்டி வாழ்க்கை பற்றிய பயத்தை அதிகம் கூட்டியிருக்கிறது. வேறு மாதிரி சொல்லப்போனால் எப்படி எல்லாம் இருக்க வேண்டிய நாம் இப்படி எவன் கையையோ அண்டிப் பிழைக்கும் அடிமைகளாக, எது மகிழ்ச்சி என்றே தெரியாமல் மகிழ்ந்து கொண்டிருக்கும் ஜடங்கலாக நாம் மாறி விட்டோம் என்று வெட்கித் தலைகுனிய வைப்பதாக இந்நூல் அமைந்திருக்கிறது.</b></div><div><b><br></b></div><div><b>இந்த நூலில் வரும் கதாபாத்திரங்களை இந்த கால குழந்தைகள் கண்டதே இல்லை. நம்மை சுற்றி இருக்கும் மனிதர்கள் மீது இவ்வளவு அன்பு செய்ய முடியுமா என்பதை இந்த நூல் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது நாம் நம்மை சுற்றி இருப்பவர் மீது காட்டும் அன்பெல்லாம் என்ன அன்பு? நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் கல்வி எல்லாம் என்ன கல்வி? </b></div><div><b><br></b></div><div><b>கோடி கோடியாய் செலவு வைத்து கல்வி கற்று நம் பிள்ளைகள் மண்ணை நோண்டியா திங்க போகிறது? பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை சொல்லிக் கொடுப்பதற்கு தான் இந்த புத்தகம். நீங்கள் யார் என்பதை கேள்வி கேட்டு பதில் தேடுவதற்கு தான் இந்த புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். அந்த வெள்ளந்தி மனிதர்களின் வாழ்வை கொஞ்சமேனும் நீங்கள் வாழ்ந்து பார்த்துவிட்டால் இந்தப் பிறவி எடுத்ததன் பயனை நீங்கள் நிச்சயமாக அடைய முடியும். இந்தப் புத்தகம் 500 பக்கங்களைக் கொண்டது. முதல் 250 பக்கங்கள் பக்கம் பக்கமாக உங்களை அழ வைக்கும் அடுத்த 250 பக்கங்கள் இந்த சீரழிவுக்கு நீங்கள் எவ்வாறு ஆளானீர்கள் என்பதை எடுத்து வைக்கும். </b></div><div><b><br></b></div><div><b>மனிதனின் வஞ்சகமும், சூழ்ச்சியும், போட்டி பொறாமையும், கெட்ட எண்ணமும் எப்படி உங்களை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது, நாம் இவ்வளவு வருந்தி வேதனைப்பட்டு வாழ்வதற்கு எது ஆரம்பமாய் இருந்தது என்பதை முகம் காட்டும் கண்ணாடியாக எடுத்துரைக்கிறது சோ. தர்மன் அய்யா அவர்களின் "சூல்" என்னும் இந்நூல். பிரித்தாளும் சூழ்ச்சியால் மக்களை எப்படி மாக்களாக மாற்றினார்கள் என்பதை சொல்லும் கதை. அறிவாளிகள் பேராசையினால் அழிவுற்றதன் கதை. நிழல் எது நிஜம் எது என்பதை உங்களுக்கு உணரவைக்கும் கதை. இது நம் கதை. நம் மண்ணின் கதை. </b></div><div><b><br></b></div><div><b>சோ. தர்மன் அவர்களுக்கு இந்த நூலுக்காக எத்தனையோ விருதுகளும், பரிசுகளும், மாலை மரியாதைகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் நீங்கள் அவருக்கு விருது கொடுக்க நினைத்தால் ஒரே ஒரு கண்மாயை தூர் வாருங்கள். கொஞ்சமேனும் விளைநிலங்கள் வாங்கி அதில் பயிரிடுங்கள். உங்கள் அண்டை மனிதர்களோடு கொஞ்சமேனும் அன்பாய் இருங்கள். ஒரு கோடி விருது கொடுத்ததற்குச் சமம். நிச்சயமாக இந்த நூலை வாங்கிப் படியுங்கள். நண்பர்களுக்கு பரிசளியுங்கள். இயற்கை பற்றி தெரிந்தவர்கள் இளம் தலைமுறைக்கு அடுத்த தலைமுறைக்கும் இயற்கை சொல்லி கொடுத்து விட்டுப் போங்கள். அதுவே இந்த உலகம் சுவாசிப்பதற்கு ஒரே வழி. </b></div><div><b><br></b></div><div><b>அதிகமான வாசிப்பு கூட்டங்களையும் விமர்சன கூட்டங்களையும் இந்த நூலுக்காக அமைக்க வேண்டிய பொறுப்பு இலக்கிய மன்றங்களுக்கு இருக்கிறது.</b></div><div><b><br></b></div><div><b>*சூல் - இது கதையல்ல நிஜம்!*</b></div><div><b><br></b></div><div><b>*நூல் : சூல்*</b></div><div><b>*ஆசிரியர் : சோ. தர்மன்*</b></div><div><b>*விலை : ரூ.380/-*</b></div><div><b>*வெளியீடு : அடையாளம் பதிப்பகம்*</b></div><div><b><br></b></div><div><b>*விமர்சனம் :*</b></div><div><b>*பா. ஸ்ரீமலையப்பன்*</b><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtKkOfTNaM9naEv5cai8zsZUIocLHAxNfahijxJP2gTmaIl4aJhjlDSalnT7rfjPDLJNvccEGbEgBMLq_UTQXC4OknM24-CkjZ09u6aT7iXauoTBVJGiihe2Poo5PtIGuHvfmwXveMyO9r/s1600/1584973384263357-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtKkOfTNaM9naEv5cai8zsZUIocLHAxNfahijxJP2gTmaIl4aJhjlDSalnT7rfjPDLJNvccEGbEgBMLq_UTQXC4OknM24-CkjZ09u6aT7iXauoTBVJGiihe2Poo5PtIGuHvfmwXveMyO9r/s1600/1584973384263357-0.png" width="400">
</a>
</div></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-161194075909694560.post-68945376471391536552020-03-17T15:02:00.001+05:302020-03-17T15:02:40.662+05:30அபிதா - குழந்தை - நூல் விமர்சனம்<div>நூல் விமர்சனம் : </div><div><br></div><div>"அபிதா"</div><div><br></div><div>1970 -இல் எழுதப்பட்ட ஒரு நாவல். இந்த நாவலின் கதையையும் அதன் தன்மையையும் உற்று நோக்கினால் சற்று விசித்திரமான அனுபவம் தான். ஏனெனில் லா.ச.ரா இதை தன்னுடைய 54 ஆவது வயதில் எழுதியிருக்கிறார். இன்னும் ஆராய்ந்தால் இது அவரது சொந்த கதையாகவோ அல்லது மிக நெருங்கிய வரின் கதையாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது. இது அவருடைய இரண்டாவது நாவல். அந்த காலத்தில் புதிய எழுத்து நடை அவருடையது.</div><div><br></div><div>ஒருவன் தான் வாழும் சமூகம் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது ? எப்படி இருக்கும் ? எப்படி இருக்க வேண்டும் என்ற உணர்வுகளின் வெளிப்பாட்டை அதன் இலக்கியத்தினையும் , கலைகளையும் கொண்டு அறிந்து கொள்ளலாம். இவை இரண்டையும் சமூகத்தின் சாட்சியங்களாக நான் பார்க்கிறேன். இந்த கூறுகளின் அடிப்படையிலேயே லா.ச.ரா வின் 'அபிதா' வை பார்க்கிறேன்.</div><div><br></div><div>ஒரு ஆணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். ஒரு வேளை பெண்ணின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருந்தால் அக்குவேர் ஆணி வேராக பிரித்து தொங்கவிட்டிருக்கலாமோ என்னவோ. உணர்வின் பெரும் போராட்டமாகவும் இதை நான் கருதவில்லை. 1970 இன் எதார்த்த வாழ்வியலை நாவலின் மூலம் பதிவு செய்திருப்பதாகவே கருதுகிறேன். </div><div><br></div><div>ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதான பார்வை என்பது அந்த காலம் தொட்டு இன்றுவரை ஒரு சதவீதம் கூட மாறவில்லை என்பதை நாவலின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய கால ஓட்டத்தில் பார்த்தால் இன்றைய பெண்களின் நிலை அன்றைவிட மிக மோசமானதாகவே இருக்கிறது. அது என்ன மோசம் எனில் ? அது நீங்கள் அறிந்திராததா என்ன!!! கடைசி காட்சியில் அபிதா மீது விழும் பொன்னரளி போல் பெண்கள் மென்மையானவர்களாக இருக்கிறார்கள். பற்றி எரிந்து கொண்டிருக்கும் வண்டி போல் ஆண்கள் அவர்களை எட்டி நின்று எரித்துக் கொண்டிருக்கிறார்கள். ( எல்லா ஆண்களுக்கும் பொருந்தாது). </div><div><br></div><div>நாவல் நிறைய வர்ணனைகளோடு , அதுவும் நீங்கள் இதுவரை கண்டிராத வர்ணனைகளோடு, உவமைகளோடு இருக்கிறது. புதிய வாசிப்பாளர்களுக்கு கொஞ்சம் இச் கொட்டும் ரகமாக இருக்கும். நீங்கள் வாசிப்பதை அனுபவிப்பவர்கள் எனில் இது உங்களுக்கு கிளாசிக் ரகம். வாழ்க்கை என்பது எதார்தங்களின் ஊற்று. அதை புரிந்து கொள்ளவதும் புரிய வைப்பதும் சவாலான ஒன்று. அதை தன்னுடைய எழுத்து பாணியில் சமரசம் செய்து கொள்ளாமல் நமக்கு தந்திருக்கிறார் லா.ச.ரா. </div><div><br></div><div>அபிதா - குழந்தை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIWVpQR8NIyE1uLYhyphenhyphenN7gtOhlc0o1btkrAlC_1Bhiu6vBxI1T4hJdtySMQaPwiE5UYrpeKYM5B3eY6j-t7tEnXB7kIflcVOiafPVXR9wmNleJP6Rz-OZYe2mgS8W77YXnhvFHRz80gbfez/s1600/1584437551942998-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIWVpQR8NIyE1uLYhyphenhyphenN7gtOhlc0o1btkrAlC_1Bhiu6vBxI1T4hJdtySMQaPwiE5UYrpeKYM5B3eY6j-t7tEnXB7kIflcVOiafPVXR9wmNleJP6Rz-OZYe2mgS8W77YXnhvFHRz80gbfez/s1600/1584437551942998-0.png" width="400">
</a>
</div></div><div><br></div><div>நூல் : அபிதா</div><div>ஆசிரியர் : லா.ச.ரா</div><div>விலை : ரூ.90/-</div><div>வெளியீடு : பற்றினை பதிப்பகம்</div><div><br></div><div>விமர்சனம்: </div><div>பா. ஸ்ரீமலையப்பன்</div><div><br></div><div><br></div><div><br></div><div><br></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-161194075909694560.post-53293646208283843022020-03-12T20:43:00.001+05:302020-03-12T20:43:59.280+05:30நூல் அறிமுகம் :இந்திய கல்விப் போராளிகள்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq7oqNH4R7nbGN7o0dpN6uo4XiwvR5paViP3Zhjpyar_2QavCNfbMS4HpXv9oV1zMqZIz_G9WyLaxpUYjrdtV3h7w1hPXCMk1-93AyEmFnkIpH6mVXumcgZ4jFEvzFqHmuA9LQ_ROc7uGu/s1600/1584026030815276-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiq7oqNH4R7nbGN7o0dpN6uo4XiwvR5paViP3Zhjpyar_2QavCNfbMS4HpXv9oV1zMqZIz_G9WyLaxpUYjrdtV3h7w1hPXCMk1-93AyEmFnkIpH6mVXumcgZ4jFEvzFqHmuA9LQ_ROc7uGu/s1600/1584026030815276-0.png" width="400">
</a>
</div><div>நூல் விமர்சனம்:</div><div><br></div><div>"இந்திய கல்விப் போராளிகள்"</div><div><br></div><div>நான் எழுதும் எழுத்துக்களை மின் விசிறிக்கு கீழோ அல்லது குளிரூட்டப்பட்ட அறையின் இருக்கையிலோ அல்லது பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டோ படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பெற்ற கல்வி அவ்வளவு சாதாரணமாக உங்களுக்கு வாய்த்துவிடவில்லை. ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளின் , உண்மையான கல்வியாளர்களின் இரத்தத்திலும் மரணத்திலுமே இத்தகைய கல்வியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை உணரவைக்கும் புத்தகம்தான் ஐயா 'ஆயிஷா' இரா. நடராஜன் அவர்கள் எழுதிய இந்த "இந்தியக் கல்வி போராளிகள்".</div><div><br></div><div>இந்தப் புத்தகத்தில் மொத்தமாக 22 கல்விப் போராளிகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இந்திய மண்ணில் உள்ள சாதாரண மனிதனுக்கும் தங்கள் இரத்தத்தை சிந்தி கல்வியை வழங்கியிருக்கிறார்கள் என்பதை கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. ஒவ்வொருவரைப் பற்றிய செய்திகளை படிக்கும் போதும் உண்மையில் ஒரு ஆசிரியனாக வெட்கித் தலை குனிகிறேன். </div><div><br></div><div>மாணவர்களுக்கு கல்வியில் ஏதோ ஒரு சிறிய மாற்றத்தை பள்ளியில் கொண்டுவர நாம் போராடுகிறோம். அதில் சிறு தொய்வோ இடையூறோ ஏற்பட்டுவிட்டால் துவண்டு விடுகிறோம் அல்லது இடையூறு ஏற்படுத்துபவரை வசைபாடி விட்டு அந்த வேலையை பாதியிலேயே விட்டு விடுகிறோம். ஆனால் இந்த புத்தகத்தில் இருப்பவர்களை பற்றி நீங்கள் படித்து விட்டால் இனி எத்தனை பெரிய இடையூறுகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய பக்குவம் உங்களுக்கு வந்துவிடும். நாம் பள்ளியில் தான் போராடுகிறோம் ஆனால் இந்தப் புத்தகத்தில் இருப்பவர்களோ ஆங்கிலேய கம்பெனி அரசாங்கத்திடம், சக இந்திய மனிதர்களிடம், மதவெறியர்களிடம், ஜாதி கூட்டங்களிடம் போராடியிருக்கிறார்கள். போராடியவர்கள் மட்டுமல்ல தங்கள் போராட்டத்தில் வெற்றி கண்டவர்கள். </div><div><br></div><div>பெக்ராம்ஜி மலபாரரி குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களை பள்ளிகளில் சேர்த்தவர், அடிப்படை கல்வி மாணவர்களுக்கு தேவை என்பதை உணர்த்திய கவுரி பார்வதி பாய், ஆசிரியர் பயிற்சியை இந்தியாவுக்கு அறிமுகம் செய்த ஈஸ்வர சந்திர வித்யாசாகர், முதன்முதலில் குல கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சாயாஜிராவ் கெய்க்வாட், இந்தியக் கல்வியின் பிரம்மாண்ட கலகவாதி என்று கூறப்பட்ட கேஷப் சந்திர சென், கட்டாய இலவசக் கல்வியின் முதல் போராளி கோபால கிருஷ்ண கோகலே, பெண்கல்வியின் ஜான்சிராணி என்று போற்றப்படுகிற ரமாபாய் ரானடே, இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடங்கிவைத்த ஜாம்ஷெட் ஜிஜி பாய், தலித் மக்களை பொதுக்கல்விக்குள் புகுத்தி விட்ட அய்யன்காளி இப்படியாக இன்றும் நம் பாடபுத்தகத்தில் அறிமுகப்படுத்தாத சாதனை மனிதர்களைப் பற்றிய புத்தகம்தான் இது.</div><div><br></div><div>ஒருவேளை நீங்கள் ஆசிரியர் என்றால் நிச்சயமாக உங்கள் புத்தக அலமாரியில் இருக்க வேண்டிய புத்தகம் இது. நீங்கள் பெற்றோர் என்றால் ஒருமுறையேனும் படித்து விடவேண்டிய புத்தகம் இது. நீங்கள் ஆட்சியாளர்கள் என்றால் இதைப் படித்துவிட்டு உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கல்விமுறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியது உங்கள் பொறுப்பு. </div><div><br></div><div>நம் போதிக்கும் கல்வி முறை ஒன்றே நம் அடுத்த தலைமுறையை இந்த பூமியில் மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியும் என்பதை உணரவைத்த ஐயா ஆயிஷா நடராஜன் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்!!!</div><div><br></div><div>இந்திய கல்விப் போராளிகள் - துதிக்கப்பட வேண்டியவர்கள்</div><div><br></div><div>நூல் : இந்திய கல்விப் போராளிகள்</div><div>ஆசிரியர் : 'ஆயிஷா' இரா. நடராஜன்</div><div>வெளியீடு : பாரதி புத்தகாலயம்</div><div>விலை : ரூ. 100/-</div><div><br></div><div>விமர்சனம்: </div><div>பா. ஸ்ரீமலையப்பன்</div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-161194075909694560.post-17971371631805284272020-03-06T15:11:00.001+05:302020-03-06T15:11:30.622+05:30தூப்புக்காரி<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkeEclxCBo6fN46lLl_ooqZUAIsgzBfSVn95hJgJni9y-S0Q1wT_34xAs_mVmnp1bebb5UxrYsd0XL9hdWPc3XvTbl7jv88pw7juHK8-y3GmK2VBKr-5VtZITMD2jOmBQMoeTUDCNLJ2v9/s1600/1583487681409255-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkeEclxCBo6fN46lLl_ooqZUAIsgzBfSVn95hJgJni9y-S0Q1wT_34xAs_mVmnp1bebb5UxrYsd0XL9hdWPc3XvTbl7jv88pw7juHK8-y3GmK2VBKr-5VtZITMD2jOmBQMoeTUDCNLJ2v9/s1600/1583487681409255-0.png" width="400">
</a>
</div><div>*நூல் விமர்சனம் :*</div><div><br></div><div>*தூப்புக்காரி*</div><div><br></div><div>134 பக்கங்களில் 1340 முறை உங்களை அழ வைக்க , நம் மனம் என்னும் பாறைக்குள் இருக்கும் ஈரத்தை எழ வைக்க முடிந்ததால்தான் என்னவோ சாகித்திய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான விருதை வென்ற நாவலாக இது கொண்டாடப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக திரைப்படமாக எடுத்துவிட வேண்டிய கதை.</div><div> </div><div>நாம் அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் குடலை பிடுங்கும் குப்பை நாற்றத்தையும் , சாக்கடை நாற்றத்தையும், மல நாற்றத்தையும் பொறுக்க முடியாமல் பொறுத்துக்கொண்டு நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் சுத்தக்காரர்களின் கதை இந்த *"தூப்புக்காரி".*</div><div><br></div><div>வீட்டு விஷேசங்களில் எச்சல் இலை எடுக்கும் சகோதர சகோதரிகளை நடு பந்தியில் உட்கார வைத்து விருந்தோம்பல் செய்ய முடியாத சமூகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்று வேதனை பட்டுக்கொண்டே பல நூற்றாண்டுகள் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. வேதனை படுகிற பல இதயங்கள் தனக்கென்று வரும்போது தானும் அதையே செய்ய கூசுவதில்லை. சாதியில் தாழ்ந்தவர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்கள் கூட இவர்களை மனிதரிலும் கீழாகவே நடத்துகிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை என்பதை தன் நாவலின் மூலமாக உலகிற்கு உரக்க சொல்லியிருக்கிறார் எழுத்தாளர் மலர்வதி .</div><div><br></div><div>வாழ்க்கையை போராடியே வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்காக இவர்களின் உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் நமக்கிருக்கிறது என்பதை கூரிய தன் பேனா முனை கொண்டு நம் அத்தனை தலைகளிலும் ஓங்கி குத்தியிருக்கிறார். </div><div><br></div><div> கனகம், பூவரசி, மாரி, ரோஸ்சிலி கதாபாத்திரங்களை வாசிக்கும் பொழுது நாம் அன்றாடம் சந்திக்கும் எதார்த்த மனித உருவங்கள் உங்கள் மனக்கண்ணில் தோன்றுகிறார்கள் என்றால் நிச்சயமாக இனியாவது நீங்கள் கொண்டாடப்பட வேண்டிய மனிதர்கள் அவர்கள்தான் என்பதை கன்னியாகுமரி வட்டார வழக்கில் வாழ்க்கையை ரணமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஈர இதயம் கொண்ட எளிய மனிதர்களின் வாழ்வியலை தன் பேனாவில் கண்ணீர் ஊற்றி எழுதி புத்தகமாக நம் கைகளில் தந்திருக்கிறார் மலர்வதி அவர்கள். </div><div><br></div><div>வாழ்க்கையே சோகம், சோகமே வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதர்களுக்காக ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பை அறிவியல் உலகம் சீக்கிரம் செய்தே தீர வேண்டும். </div><div><br></div><div>இன்னும் எளிமையாக அவர்கள் வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும் எனில் ஒரே ஒருநாள் தூப்புக்காரியாக வாழ்ந்து பார்த்து விடுங்கள் புரியும்.</div><div><br></div><div>தூப்புக்காரி - அழகானவள்</div><div><br></div><div>*நூல் : தூப்புக்காரி*</div><div>*ஆசிரியர் : மலர்வதி*</div><div>*விலை : ரூ. 95/-*</div><div>*வெளியீடு : மதி*</div><div> </div><div>*விமர்சனம்,*</div><div>*பா.ஸ்ரீமலையப்பன்*</div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-161194075909694560.post-77535306888570104202020-03-04T19:48:00.001+05:302020-03-04T19:48:39.358+05:30அப்பல்லோ : மக்களின் கதை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc0GCUbjgjMMVv85rS-VkrJkIQ1ScQCMc9OznVQ_-pnKq_KgigCKn4IDwZeEgjqlzbnoA-CFnGSAp5CztjkWBlf7Rzzuz9qBL9JWwBt__LdfAKEPu6JwGy__btIDsy2SkvV8y-vmO3-KGs/s1600/1583331431966404-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc0GCUbjgjMMVv85rS-VkrJkIQ1ScQCMc9OznVQ_-pnKq_KgigCKn4IDwZeEgjqlzbnoA-CFnGSAp5CztjkWBlf7Rzzuz9qBL9JWwBt__LdfAKEPu6JwGy__btIDsy2SkvV8y-vmO3-KGs/s1600/1583331431966404-0.png" width="400">
</a>
</div><div>*நூல் விமர்சனம் :*</div><div><br></div><div>*அப்பல்லோ*</div><div><br></div><div>இந்த வருடத்தின் முதல் புத்தக விமர்சனம் அண்ணன் அண்டனூர் சுரா அவர்களின் “அப்பல்லோ” நாவல். பொதுவாக எது ஒன்று புதைக்கப்படுகிறதோ அது நிச்சயமாக ஒருநாள் தோண்டி எடுக்கப்பட்டே தீரும் என்பதே வரலாறு. அது நிலக்கரியாகவோ, தங்கமாகவோ, பெட்ரோலாகவோ, தாதுக்களாகவோ, கட்டிடங்களாகவோ, எலும்புக் கூடுகளாகவோ , மனித நாகரீகங்களாகவோ வெளிப்பட்டே தீரும். நம் கீழடி போன்றும், ஆதிச்சநல்லூர் போன்றும் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவரின் முயற்சியின் மூலமாக மக்களை சென்றடையும். இதற்கு கதைகளும் விதிவிலக்கல்ல. நாம் மறந்து போன கதைகளையும் சிந்திக்க தவறிய மருத்துவ குறிப்புகளையும் தன்னுடைய பேனாவை கூர்தீட்டி மீட்டு கொண்டுவந்திருக்கிறார் “அப்பல்லோ” நாயகன் அண்டனூர் சுரா.</div><div><br></div><div>கிரேக்க கதாபாத்திரங்களை கொண்டு தமிழகத்தின் தற்காலத்தை புத்தகத்தின் பக்கங்களில் தவழவிட்டிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாத்திலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார். இதில் அவர் பயன்படுத்தி இருக்கும் உருவகங்களும், ஒவ்வொரு காட்சிக்கான வசன நடையும் புத்தகத்திற்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது. எழுத்தின் முதிர்ச்சி மேலும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அவ்வளவு அழகாக கையாண்டு இருக்கிறார். </div><div><br></div><div>நாவல் நான் லீனியராக செல்கிறது. ஒரு இடத்திலிருந்து மீண்டும் அவ்விடத்திற்கு வரும்போது எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் கதை நகர்கிறது. ஒரு சாமானிய வாசகனின் பார்வையில் சொன்னால் சில அத்யாயங்களை தவிர்த்திருந்தாலும் கதை தொய்வடையாது இருந்திருக்கும். இந்தகால குழந்தைகளுக்கு பரிச்சயப்படாத தமிழ் வார்த்தைகள் நிறைந்து இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.</div><div><br></div><div>இந்த நாவலில் எனக்கு பிடித்த வாக்கியங்களை வரிசைபடுத்த விரும்புகிறேன்`</div><div>1. கொடியை காற்று அசைக்கலாம் காற்றை யார் அசைப்பது?</div><div>2. கற்கண்டை தின்றால் செரிக்கும் கல் செரிக்குமா ?</div><div>3. அழகி என்ற பதத்தின் ழ அவள்!</div><div>4. உண்மைக்கு தேவை தடிப்பு. பொய்க்கு தேவை நடிப்பு.</div><div><br></div><div>இப்படியாக படித்து ரசிக்க ஏராளமான சொலவடைகள், வர்ணனைகள் நிறைந்து இருக்கிறது நாவல். கவிஞனின் வகை, ஒரு அரச குழந்தையை பராமரிக்கும் தாயின் வகை, மருத்துவக்குடி சொல்லும் மருந்தின் வகை, இளைஞர்கள் கொண்டாடும் மீசையின் வகை என நாவலை வகை வகையாக பிரித்து தள்ளியிருக்கிறார். இன்னும் கூடுதலாக சொன்னால் அவருடைய வார்த்தைகள் என் மனக்கண்ணில் காட்சியாக மாறிய அத்தருணங்களை நான் எழுதுகிற இந்த நிமிடத்தில் வாசிப்பின்பத்தை மீண்டும் மீட்டெடுத்துக்கொள்கிறேன். </div><div><br></div><div>ஒரு சமூகம் இறுதியாக யாரை நம்புகிறது மருத்துவர்களை. நம்மை பொறுத்தவரை நம் உயிரை காக்கும் மருத்துவர்களே மக்களின் கண்ணுக்கு தெரிந்த கடவுளர்கள். நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் தான் நம் வாழ்வாதாரத்தை காக்கும் மருத்துவர்கள். இந்த இருவருக்குமான பொறுப்புகள் என்ன என்பதை தற்காலத்திற்கு ஏற்ப தன்னுடைய எழுத்தின் மூலம் மிகுந்த பொறுப்புடன் லாவகமாக கையாண்டிருக்கிறார் அண்ணன் அண்டனூர் சுரா.</div><div><br></div><div>*அப்பல்லோ : மக்களின் கதை*</div><div><br></div><div>நூல் : அப்பல்லோ </div><div>ஆசிரியர் : அண்டனூர் சுரா </div><div>விலை : ரூ 240/-</div><div>வெளியீடு : பாரதி புத்தகாலயம்</div><div><br></div><div>புகைப்பட உதவி : Dr. Hafila</div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-161194075909694560.post-66160789526762069622019-12-08T12:24:00.001+05:302019-12-08T12:24:47.546+05:30பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள் - நூல் அறிமுகம் <div>ஒரு வாரத்திற்குள் ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று தோன்றி ஒரு வாரத்திற்குள் அந்த புத்தகத்தை வரவழைத்து ஒரு வாரத்திற்குள் அதைப் படித்து முடித்திருக்கிறேன். நிச்சயமாகவே எனக்கு இது ஒரு புதிய அனுபவம். </div><div>அப்படி என்ன புத்தகம்? </div><div><br></div><div>அய்யப்பமாதவன் அவர்கள் எழுதிய "பாலும் மீன்களுமே வாங்கிக்கொண்டிருந்தவள்". மொத்தமாக 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. இதன் முதல் பதிப்பு 2009- இல் வெளிவந்திருக்கிறது. </div><div><br></div><div>புத்தகத்தில் உள்ள அனைத்து சிறுகதைகளும் மிகவும் காத்திரமான கருத்துகளை எடுத்துக் கூறுபவை. ஒரு கதையினை படித்து முடித்த பிறகு அடுத்த கதைக்கு போவதற்கு நிறைய அவகாசம் தேவைப்படுகிறது. இவருடைய கதைகளை படிக்கும் போது மனிதர்களை விட விலங்குகளை பச்சிளம் குழந்தைகள் போல் ஏன் நாம் பேண வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்துகிறது. அதில் இறுதி கதையான ரோஸி என்னை மிகவும் கவர்ந்தது. </div><div><br></div><div>ஒரு திறமையான மனிதனை இந்த உலகம் பாடாய் படுத்துவதில் அவன் எவ்வாறு தடம் மாறுகிறான், ஒருத்தி எவ்வளவு அழகாக இருந்தாலும் ஒரு சிறு குறை அவளது வாழ்வினை எவ்வாறு புரட்டிப்போடுகிறது, பூனைகளை மட்டுமே துணையாக்கி கொண்டிருக்கும் ஒருத்தியை இந்த சமூகம் பார்க்கும் விதம், ஒரு எலியால் துன்பப்படும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்வுகள், மனைவியிடம் ஒரு சிறு பொய் சொல்லி அதை அதை மறைப்பதற்குள் ஒரு கணவன் அல்லல்படும் விதம் என்று இவர் தொட்டிருக்கும் ஒவ்வொன்றுமே கிளாசிக் ரகம். </div><div><br></div><div>நடுத்தர வர்க்கத்தின் மைண்ட் வாய்ஸ் இவருக்கு மட்டும் ரொம்ப அழுத்தமாக கேட்டிருக்கிறது.இருப்பினும் முதல் மூன்று சிறுகதைகளுக்கும் 18+ இல் உள்ளவர்கள் மட்டுமே படிக்க வேண்டியவை. என்னை பொறுத்தவரை இதை கொஞ்சம் சென்சார் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. இருந்தாலும் அந்த மூன்று கதைகளின் முடிவுகளும் கதைக்கு நியாயம் செய்யாமல் இல்லை. இருந்தாலும் ஒரு உச் கொட்டாமல் இருக்க முடியவில்லை. </div><div><br></div><div>இறுதியாக நடுத்தர மனிதர்களின் உணர்வுகளை அப்படியே படமெடுத்து , கலரூட்டி, பிரேம் போட்டு அனைவரும் பார்க்கும் படியாக மாட்டிவிட்டிருக்கிறார் அய்யப்பமாதவன் அவர்கள்... இந்த சிறுகதைகளின் வாயிலாக இன்னும் கொஞ்சம் உயிரூட்டியிருக்கிறார்.</div><div><br></div><div> பாலும் மீன்களையும் யாரோ ஒருவர் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்காமல் நாமும் வாங்கி கொடுக்க முன்வந்து நம்முடைய மனநிலையை தகவமைத்துக் கொள்ளும்போது மனிதம் சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.</div><div><br></div><div>நூல் : பாலும் மீன்களுமே வாங்கிகொண்டிருந்தவள்.</div><div>ஆசிரியர் : அய்யப்பமாதவன்</div><div>வெளியீடு : ஜீரோ டிகிரி</div><div>விலை : ரூ.100/-</div><div><br></div><div>விமர்சனம்: ஸ்ரீ மலையப்பன்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr6RsGDVPkYWsz5xgQzwLH-ZhfX0AvUnLbd7zoxQsK94WGCenma-0uSQvJpApqCdxsmOAwBAeqeOeOAaYCf0ZN6KJ4P93hANIVabt-mkjd4jImxG04DBMWeGqhJAFXAKP3lgXL65lJVa60/s1600/1575788017367113-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr6RsGDVPkYWsz5xgQzwLH-ZhfX0AvUnLbd7zoxQsK94WGCenma-0uSQvJpApqCdxsmOAwBAeqeOeOAaYCf0ZN6KJ4P93hANIVabt-mkjd4jImxG04DBMWeGqhJAFXAKP3lgXL65lJVa60/s1600/1575788017367113-0.png" width="400">
</a>
</div></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-161194075909694560.post-33461590354744551042019-12-05T11:50:00.001+05:302019-12-05T11:51:33.046+05:30ஜோன் ஆஃப் ஆர்க் - நூல் விமர்சனம்<div><i style="font-weight: bold;"><b><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjig0Q9vrQbdPkbFVgyZXTi1DPFrEygLj2Y-z7DvHRdyNxhOjEEJE1y-MNHKq2Yaiyaunw5TzzzMubMkjeySULk5-2Cpss52ZnOJna_Ucu1f5itL5scevQe94X5QXUOo9RswA7JrPEs7SN7/s1600/1575526847025281-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjig0Q9vrQbdPkbFVgyZXTi1DPFrEygLj2Y-z7DvHRdyNxhOjEEJE1y-MNHKq2Yaiyaunw5TzzzMubMkjeySULk5-2Cpss52ZnOJna_Ucu1f5itL5scevQe94X5QXUOo9RswA7JrPEs7SN7/s1600/1575526847025281-0.png" width="400">
</a>
</div>*ஜோன் எனும் பணிப்பெண்*</b></i></div><div><i><b><br></b></i></div><div><i><b>பிரான்ஸ் நாட்டில் தொம்ரெமி என்ற சாதாரண கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து பிரிட்டிஷ் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஒற்றை ஆளாக சென்று வென்று சார்லஸ் மன்னனுக்கு முடிசூட்டிய வீரப் பெண்மணி தான் இந்த நூலின் தலைவி *ஜோன் ஆஃப் ஆர்க் அவளது மொழியில் சொல்லப்போனால் ஜோன் எனும் பணிப்பெண்*.</b></i></div><div><i><b><br></b></i></div><div><i><b>இந்த நூல் நம்முள்ளே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. உதாரணமாக ஒரு விஷயத்தை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறேன். ஒரு 16 வயதே ஆன சிறுமி மிகப்பெரிய படையை ஒற்றை ஆளாக வழிநடத்தி செல்வது என்பது அவள் கொண்ட மனோதிடத்தினால் மட்டுமே இருக்கலாமே அன்றி ஜோன் சொல்வதை போல அது கடவுளின் சித்தம் என்றெல்லாம் என்னால் உறுதியான முடிவுக்கு வர முடியவில்லை. </b></i></div><div><i><b><br></b></i></div><div><i><b>இது ஒருபுறமிருக்க இந்த காலத்திலேயே பெண்கள் எந்த சாதனை செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் ஆண் சமுதாயம் இருக்கும்போது அன்றைய காலகட்டத்தில் அதுவும் 1420 களில் ஒரு பெண் தனியாக இத்தனை பெரிய போராட்டத்தை நடத்தி அதில் வெற்றி கொள்வது என்பதெல்லாம் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த ஆண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளாமல் போனதே ஜோன் எனும் பெரிய வீரமங்கையை நாம் இழந்ததற்கு காரணமாக இருக்க முடியும்.</b></i></div><div><i><b><br></b></i></div><div><i><b>இத்தனை பெரிய சிந்தனை நமக்கு எழும் அளவிற்கு இந்த நூலின் ஆசிரியர் *ரஞ்சனி நாராயணன்* ஜோன் ஆஃப் ஆர்க் பற்றிய ஒவ்வொரு குறிப்புகளையும் தேடித்தேடி எடுத்து புத்தகத்திற்குள் வைத்து இந்த புத்தகத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் ஜோன் ஆஃப் ஆர்க் விசாரணை நீதிமன்றத்தில் நீதிபதி பதில் சொல்லும் விதம் அத்தனை அழகானது. ஒரு 19 வயது பெண் இப்படி எல்லாம் பதில் சொல்வாளா என்று ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. இறுதியாக அத்தனை தூரமான தண்டனையை அந்த சிறு வயதுப் பெண்ணிற்கு அன்றைய கிறிஸ்தவ போதகர்கள் வழங்கியது வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கொடூரமான தீர்ப்பு. அவள் கழுவிலேற்றி தீக்கிரையாக்கப்படும் அந்த வரிகளை புத்தகத்தில் கடக்கும் போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகிறது. அதோடு மதத்தின் மீதும் அதன் மூடநம்பிக்கைகளின் மீதும் பெருத்த கோபமும் வருகிறது. </b></i></div><div><i><b><br></b></i></div><div><i><b>*ஜோன் பணிப்பெண் போர்வையில் வந்த புனிதப் பெண் என்பதை ரஞ்சனி நாராயணன் தன்னுடைய எழுத்தின் மூலம் நமக்கு புரிய வைக்கிறார்.* </b></i></div><div><i><b><br></b></i></div><div><i><b>நூல் : ஜோன் ஆஃப் ஆர்க்</b></i></div><div><i><b>ஆசிரியர் : ரஞ்சனி நாராயணன்</b></i></div><div><i><b>வெளியீடு : கிழக்கு பதிப்பகம்</b></i></div><div><i style="font-weight: bold;"><b>விலை : ரூ. 225/-</b></i></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-161194075909694560.post-18648243998462494262019-11-27T21:09:00.001+05:302019-11-27T21:09:39.598+05:30காற்று வாசித்த கவிதை - நூல் அறிமுகம்<div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCCylg-lj1Dn3N6jlCAlYPdyEEbRmm1DawPta7E5AoaRe3Uh_a4y-MyfbV7JaR08453XX9tMf0flxfnpusDME3g34GzB_qE9hVqO4flCYShGY-83M-1b0XUZ0QdNi3bJ9TUsRFbQnOkYkb/s1600/1574869170761817-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCCylg-lj1Dn3N6jlCAlYPdyEEbRmm1DawPta7E5AoaRe3Uh_a4y-MyfbV7JaR08453XX9tMf0flxfnpusDME3g34GzB_qE9hVqO4flCYShGY-83M-1b0XUZ0QdNi3bJ9TUsRFbQnOkYkb/s1600/1574869170761817-0.png" width="400">
</a>
</div><br></div><div>ஒருமுறையேனும் பொள்ளாச்சி இலக்கிய வட்ட கூட்டத்திற்கு போய் வரவேண்டும் என்று பலமுறை நினைத்துக்கொள்வேன். இன்றுவரை அதற்கான வாய்ப்பு அமையவில்லை. </div><div><br></div><div>இன்று என்னுடைய புத்தக அலமாரியை வெகுநேரமாக பார்த்துகொண்டு நின்றேன். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்திலிருந்து 2016 ஆவது ஆண்டு வெளிவந்த கோகிலா வேலுச்சாமி அவர்களின் "காற்று வாசித்த கவிதை" கண்ணில்பட்டது. கடந்த ஐந்தாறு மாதங்களில் தொடர்ச்சியாக நான் சிறுகதைகளையும் நாவல்களையும் மட்டுமே வாசித்து வந்திருக்கிறேன்.</div><div><br></div><div>கவிதை புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் அலாதியான ஒன்று. கவிதை வாசிப்பது என்பது ஒரு கலை. யாரும் இல்லாத ஒரு அமைதியான இடத்தில் ஒரு மௌனியின் நிலையில் அமர்ந்து மெல்ல புத்தகத்தைப் பிரித்து ஒவ்வொரு கவிதையாக, சூடான தேநீரை மிடறு மிடறாக ரசித்து பருகுவதை போல்தான் ஒரு கவிதை புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிதைகளையும் வார்த்தை வார்த்தையாக அனுபவித்து ரசித்து ருசித்து படிக்க வேண்டும். அப்படிப் படிப்பதையே நான் எப்போதும் விரும்புவேன்.</div><div><br></div><div>கோகிலா அவர்களின் முதல் தொகுப்பு இது. மிகச்சிறந்த கவிதைகளை அவர்கள் செய்யாவிட்டாலும் அவரது வார்த்தை பிரயோகங்கள் அருமையாக இருக்கிறது. அவரது வார்த்தைகளின் மூலம் அவருடைய சமூக கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய பார்வையிலிருந்து கோகிலா அவர்களின் கவிதைகளை பார்க்கும் போது அவர் ஹைக்கூ பக்கம் இந்த கவிதைகளை திருப்பினால் நிச்சயமாக நமக்கு நிறைய பயனுள்ள கவிதைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழிபெயர்த்து இருந்தார் அந்த கவிதை மிக அருமையாக இருந்தது. இந்த புத்தகத்திற்கான விமர்சனத்தை எழுதும் இந்த தருணத்தில் இன்னும் வேறு சில கவிதை நூல்களை அவர் படைத்திருக்கலாம். அப்படி எதேனும் இருப்பின் அதையும் படிக்க விரும்புகிறேன். இந்த தொகுப்பு நிச்சயமாக தொடக்க வாசிபாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும். இப்படியான இளம் படைப்பாளர்கள் மேலும் மேலும் நிறைய கவிதைகளை படைக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. </div><div><br></div><div>இந்த தொகுப்பில் என்னை கவர்ந்த இரண்டு கவிதைகள் : </div><div>1. பிரார்த்தனை இல்லா</div><div> பாதயாத்திரை</div><div> எறும்புக்கூட்டம்.</div><div><br></div><div>2. குழந்தை பசியாறியதும்</div><div> ஊர்கூடி ஒப்பாரி</div><div> கள்ளிப்பால் விருந்து</div><div><br></div><div>வாழ்த்துக்கள் கவிஞர் கோகிலா அவர்களுக்கு.</div><div><br></div><div>நூல் : காற்று வாசித்த கவிதை</div><div>ஆசிரியர் : கோகிலா வேலுச்சாமி </div><div>வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்</div><div>விலை : ரூ.50/-</div><div><br></div><div>விமர்சனம் : </div><div> ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன், </div><div> புதுக்கோட்டை </div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-161194075909694560.post-53459284026708072502019-11-25T16:39:00.001+05:302019-11-25T16:56:07.621+05:30 கிளியோபாட்ரா - நூல் அறிமுகம் <p dir="ltr">கிளியோபாட்ரா - நூல் அறிமுகம் </p>
<p dir="ltr">பொதுவாக வரலாற்று நூல்கள் படிக்க படிக்க மிகவும் ஆர்வமாக இருக்கும். அப்படித்தான் கிளியோபாட்ரா வின் வரலாற்றை படிக்கும் சந்தர்ப்பம் இந்த நூலின் ஆசிரியர் முகிலின் வாயிலாக கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.<br>
<br>
இந்த உலகின் மாபெரும் இரண்டு அரசர்களான ஜூலியஸ் சீசரும் , மார்க் ஆண்டனியும் ஒரு பெண்ணின் முன்னாள் வீழ்ந்து கிடந்திருக்கிறார்கள் என்றால் ஒரு அரசி தன்னுடைய அழகால் மட்டும் அவர்களை வீழ்தியிருக்க முடியாது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை அவளுடைய அழகை கொண்டுதான் ரோம் என்னும் பெரும் சாம்ராஜ்யத்தின் இரு வீரர்களை அடக்கிவிட்டால் என்பது உண்மையாக இருந்தால் அவள் எவ்வளவு பெரிய பேரழகியாக இருந்திருக்க வேண்டும் என்றும் பிரம்மிக்க தோன்றுகிறது. நிச்சயமாக 2000 வருடத்திற்கு முன்னால் ஒரு பெண் இவ்வளவு தைரியமாக இருந்திருக்கிறார் என்றால் அவளை நான் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. 2000 வருடங்களாக அவளுடைய பெயர் ஏதோ ஒரு ரூபத்தில் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது இதோ இன்று என் மூலமாக உச்சரிக்கப்படுகிறது. </p>
<p dir="ltr">கிளியோபாட்ராவின் தந்தையான பன்னிரண்டாம் தாலமிக்கு நாம் ஒருவகையில் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனெனில் தன்னுடைய இரண்டு மகள்களையும் கல்வி கற்க அனுமதித்திருந்தார். ஒருவேளை கல்வி கற்றதனால் தான் என்னவோ புத்தி சாதுரியத்தால் இரண்டு மாபெரும் வீரர்களை தன்னுடைய மனோ தைரியத்தாலும் ராஜா தந்திரத்தாலும் கிளியோபாட்ரா வீழ்த்தியிருக்கக்கூடும். கல்வி கற்காமல் போயிருந்தால் வரலாறு மாறி இருக்குமோ என்னமோ. </p>
<p dir="ltr">இன்னும் கொஞ்சம் விளையாட்டாக அதிகப்படியாக சொல்லபோனால் அலெக்சாண்டர் என்ற மாபெரும் வீரன் இல்லாமல் போயிருந்தால் தாலமி இல்லாமல் போய் இருப்பார், ஜூலியஸ் சீசர், மார்க் ஆண்டனி, புரூட்டஸ், கிளியோபாட்ரா, அகஸ்டஸ் போன்ற எவரும் இல்லாது போயிருப்பர். </p>
<p dir="ltr">போகட்டும் புத்தகத்தில் உள்ள சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்: </p>
<p dir="ltr">1. அலெக்ஸாண்டர் எகிப்து படையெடுப்பின்போது எகிப்தை வெற்றி கொண்டு அங்கே அலெக்ஸாண்ட்ரியா என்ற அழகான நகரத்தை நிறுவியிருக்கிறார்.</p>
<p dir="ltr">2. அலெக்ஸாண்டிரியாவில் பன்னிரண்டாம் தாலமியால் ஒரு அழகான அருங்காட்சியகம் அவற்றோடு கூடிய நூலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது இந்த நூலகத்தில் தான் கிளியோபாட்ராவும் அவளது அக்காவான பெரினைசும் கல்வி கற்றிருக்கிறார்கள். </p>
<p dir="ltr">3. எகிப்தியர்கள் தங்களுடைய சொந்த சகோதரர்களே திருமணம் செய்துகொள்ளும் வழக்கத்தினை கொண்டிருந்திருக்கிறார்கள்.</p>
<p dir="ltr">4. ரோமில் செல்வந்த குடும்பத்தில் பிறந்த மார்க் ஆண்டனி கேபினியஸ் என்ற துணைத்தளபதி மூலம் தற்செயலாகத்தான் ரோம் படையில் சேர்ந்து இருக்கிறார்.</p>
<p dir="ltr">5. அலெக்ஸாண்டிரியாவில் கிளியோபாட்ரா குளிப்பதற்காக 700 கழுதைகள் வளர்க்கப்பட்டு இருக்கிறது. பணியாளர்கள் காலையில் எழுந்து கழுதைப்பால் சேகரிக்க வேண்டுமாம். தொட்டியில் நிரப்பப்பட்ட பாலில் கிளியோபாட்ரா குளிப்பாறாம்.</p>
<p dir="ltr">5. எகிப்து நாட்டை அரசாட்சி செய்ய தன்னுடைய பதினொரு வயது சகோதரன் பதிமூன்றாம் தாலமியை மணந்து முதன்முதலில் அரியணை ஏறினால் கிளியோபாட்ரா.</p>
<p dir="ltr">6. கிளியோபாட்ரா ஜூலியஸ் சீசரிடம் நெருங்கி பழகும் போது ஜூலியஸ் சீசருக்கு வயது 52 கிளியோபாட்ராவுக்கு 23 வயதுதான். ஜூலியஸ் சீசர் மூலமாக கிளியோபாட்ராவுக்கு சீசரியன் என்ற மகன் பிறந்தான்.</p>
<p dir="ltr">7. தன்னுடைய தினசரி உணவில் விஷம் கலந்து இருக்கிறதா என தெரிந்துகொள்ள ஒரு அடிமையை வைத்து அவள் முதலில் சாப்பிட்ட பிறகு தான் அதை கிளியோபாட்ரா சாப்பிடுவாராம்.</p>
<p dir="ltr">8. ஜூலியஸ் சீசர் குறுங்கத்தியால் 23 இடங்களில் குத்தி கொல்லப்பட்டார். இதை உறுதி செய்தவர் மருத்துவர் <br>
அண்டிஸ்டியஸ். முதலில் குத்தியவர் சிம்பர் என்ற உறுப்பினர். ஜூலியஸ் சீசர் இறந்த பிறகு கிளியோபாட்ரா மனம் கொதித்து போய் ரோமில் இருந்து வெளியேறினார். </p>
<p dir="ltr">9. எகிப்தியன் கோப்ரா வகை சேர்ந்த கொடிய விஷம் உள்ள நஜா வகை பாம்பை தன்னுடைய மார்பின் மீது கடிக்க விட்டு இறந்து போனால் என்பது சொல்லப்படும் செய்தி. </p>
<p dir="ltr">இப்படி கிளியோபாட்ரா என்ற மாபெரும் பேரழகியின் வாழ்க்கையை கூறுவதாக அமைந்திருக்கிறது இந்த புத்தகம். மிக அரிய தகவல்களை இந்த நூல் நமக்கு வழங்குகிறது. கிளியோபாட்ராவை பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள எலிசபெத் டெய்லர் 1963 ல் நடித்த கிளியோபாட்ரா படம் யூடியூபில் நமக்கு கிடைக்கிறது. </p>
<p dir="ltr">எல்லா வரலாறுகளும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை வழங்குகின்றன. கிளியோபாட்ராவும் அதற்கு விதிவிலக்கல்ல. </p>
<p dir="ltr">நூல் : கிளியோபாட்ரா <br>
ஆசிரியர்: முகில் <br>
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்<br>
விலை : ரூ.175/-</p><p dir="ltr"><br></p><p dir="ltr"> அன்புடன் ,</p><p dir="ltr"> ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்</p><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBopzZ4xzQNTtQMYkOR2xAn0JVWlExq22wGdaeIWaQ10DcznVCfUvDVTiQ681JfE9H9-phlTyzrQJO0CitVHnpwCeHsrhq5cISVWIqZffVNMiOq2GpwoLecxrpPnRJ1MUNAdvq4Ro5-Cff/s1600/1574680163328742-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBopzZ4xzQNTtQMYkOR2xAn0JVWlExq22wGdaeIWaQ10DcznVCfUvDVTiQ681JfE9H9-phlTyzrQJO0CitVHnpwCeHsrhq5cISVWIqZffVNMiOq2GpwoLecxrpPnRJ1MUNAdvq4Ro5-Cff/s1600/1574680163328742-0.png" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQAhN-AOsKzo0tT3DeiwI564_c2NSBfhLO2UH6MbvoHbBiXy_PDRG5GHUHlPdPlyuMznemHjO5aNbNx_C8EnuvWezS_zvFbjBQ5pv-DLIObKSRsbd_47PjCXN9t5QQ5kRVCmIX0sG_KDSA/s1600/1574680154821954-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQAhN-AOsKzo0tT3DeiwI564_c2NSBfhLO2UH6MbvoHbBiXy_PDRG5GHUHlPdPlyuMznemHjO5aNbNx_C8EnuvWezS_zvFbjBQ5pv-DLIObKSRsbd_47PjCXN9t5QQ5kRVCmIX0sG_KDSA/s1600/1574680154821954-1.png" width="400">
</a>
</div><br><p></p>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-161194075909694560.post-71147074613903078992019-11-11T13:52:00.001+05:302019-11-11T13:52:29.500+05:30முன்னோடி - நூல் அறிமுகம்<p dir="ltr"><i>சமீபத்தில் படித்து முடித்திருப்பது கலில் ஜிப்ரான் அவர்களின் முன்னோடி என்ற புத்தகம். தமிழில் மொழிபெயர்த்து இருப்பது கவிஞர் இளவல் ஹரிஹரன். அருமையான கவிதைகள் மற்றும் குட்டி குட்டி கதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. படிப்பதற்கு மிகவும் அலாதியான புத்தகம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது உங்களுக்குள்ளேயே ஒரு கவிதை எழுதும் திறன் மிகச் சாதாரணமாக வந்து விடும், மனம் மிகுந்த அமைதியையும் தனிமையையும் தேடும். </i></p>
<p dir="ltr"><i>கலில் ஜிப்ரான் கவிதைகளை உங்களால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்றால் நிச்சயமாக முடியும். கவிதைகளின் ஜீவன் உங்கள் உயிரோடு கலந்து மிகுந்த மன அமைதியை ஏற்படுத்தவல்ல வார்த்தைகள் கதையிலும் கவிதையிலும் நிறைந்திருக்கிறது .</i></p>
<p dir="ltr"><i>மிகுந்த தீர்க்கதரிசனமான வார்த்தைகளை மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுத்தின் தரம் மாறாமல் கவிதைகளின் சாரம் குறையாமல் ஒரு அருமையான மொழிபெயர்ப்பை கவிஞர் இளவல் ஹரிஹரன் தந்திருக்கிறார். கவிதைகளை முழுமையாக உள்வாங்காமல் இத்தகைய வார்த்தைகள் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.</i></p>
<p dir="ltr"><i> மனித வாழ்வின் எதார்த்தத்தை இந்த நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மனிதனின் ஆசை, பொறாமை, வஞ்சம், கோபம், வாழ்வில் நிலையில்லாத தன்மை இப்படி பல்வேறு தலைப்புகளில் கதைகளும் கவிதைகளும் இருக்கிறது. கலில் ஜிப்ரான் எழுத்துலகின் ஒரு தீர்க்கதரிசி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. நிச்சயமாக இந்த புத்தகத்தின் தலைப்பு போல் அவர் நமக்கு முன்னோடியாக தான் இருக்கிறார். </i></p>
<p dir="ltr"><i><b>நூல் : முன்னோடி</b></i><br>
<i><b>ஆசிரியர் : கலில் ஜிப்ரான்</b></i><br>
<i><b>தமிழில் : கவிஞர் இளவல் ஹரிஹரன்</b></i><br>
<i><b>பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்</b></i><br>
<i><b>விலை : ரூ. 40<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp932wutI0Sw32h10EAi_y-yBrDAbweyJBUBE9DGPdqFyx7OTCEFCOY7KuP5ilxcmbcVMhQ1wOeSPO3q_DFfdXLzkOv5vyn8QRRvhhn-BACK-YXvRle5VCti2qV7FXSmMVf67aaPcrMCDP/s1600/1573460528093693-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp932wutI0Sw32h10EAi_y-yBrDAbweyJBUBE9DGPdqFyx7OTCEFCOY7KuP5ilxcmbcVMhQ1wOeSPO3q_DFfdXLzkOv5vyn8QRRvhhn-BACK-YXvRle5VCti2qV7FXSmMVf67aaPcrMCDP/s1600/1573460528093693-0.png" width="400">
</a>
</div></b></i></p>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-161194075909694560.post-35788626851892367322019-11-04T16:27:00.001+05:302019-11-04T16:27:25.687+05:30பாரதி நினைவுகள் - நூல் அறிமுகம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpgjiTQTO5EC3Hfu14Y9KhVAHCf9BvmIk-o-UsGGgc0sdh1X_yGDKe1Ud80ir_yFckaZ1-a_cjuT63T3khyphenhyphenJftHoIl0GwNUMXwijGJK056c6cWRLBnaVbtuDHKhsMA-ZVX0dkKZQKxklpZ/s1600/1572865029167902-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhpgjiTQTO5EC3Hfu14Y9KhVAHCf9BvmIk-o-UsGGgc0sdh1X_yGDKe1Ud80ir_yFckaZ1-a_cjuT63T3khyphenhyphenJftHoIl0GwNUMXwijGJK056c6cWRLBnaVbtuDHKhsMA-ZVX0dkKZQKxklpZ/s1600/1572865029167902-0.png" width="400">
</a>
</div><div><i style="font-weight: bold;">கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் ஷாஜகான் சார் அவர்களின் முகநூல் பதிவிலிருந்து ஒரு செய்தியைப் பார்த்தேன் , "பாரதியார் நினைவுகள்" புத்தகத்தின் ஒரு அத்தியாயத்தை அவர் பதிவாகி எழுதி அந்தப் புத்தகம் வேண்டுமானால் நான் </i></div><div><i>ராஜாமகள் அவர்களை இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும் என்று சொல்லி இருந்தார். உடனே நான் ராஜா மகள் அவர்களை இன்பாக்ஸில் தொடர்புகொண்டு பாரதி நினைவுகள் புத்தகத்தையும் பூனைகுட்டிகாரன் புத்தகத்தையும் குரியர் மூலமாக பெற்றேன். இப்போதுதான் அந்த புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது. </i></div><div><i><br></i></div><div><i>இந்தப் புத்தகத்தின் வாயிலாக பாரதியாரை மிக அண்மையில் நெருங்கி அவரை புரிந்துகொள்ள முடிகிறது. அவரைப் புரிந்து கொண்டேன் என்பதைவிட பாரதியாரின் மனைவி செல்லம்மாள் அவர்களை சிறிதாவது புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு அமைந்ததை எண்ணி மகிழ்கிறேன். செல்லம்மாள் அவர்கள் பாரதியார் பாடும் பாடல்களின் முதல் ரசிகை என்பது நமக்கு தெரியவருகிறது. இந்தப் புத்தகத்தின் ஒரு இடத்தில்கூட பாரதியார் அவர்கள் ஒரு பாடலை பாடுகிறார் அது செல்லம்மாள் அவர்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. எத்தனை ரசிகையாக இருந்தால் அந்த கண்ணீர் வந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆரம்ப காலகட்டத்தில் பாரதியார் கலகலப்பாகவும் மிகுந்த உற்சாகம் உடையவராகவும் இருந்திருக்கிறார், பிற்பாடு பலநாட்கள் மௌன விரதங்களை மேற்கொண்டிருக்கிறார். இந்த நூலின் ஆசிரியர் யதுகிரி அம்மாள் பாரதியாரின் இந்த மௌன விரதத்தை பற்றிச் சொல்லும்போது " அவர் மேற்கொண்ட மௌன தவமே அவர் இத்தனை காவியமான கவிதைகளை எழுதுவதற்கு காரணமாக அமைந்திருக்கும் என்று பிற்பாடு தாம் உணர்ந்ததாக கூறுகிறார். இந்தக் கூற்றை நாம் இப்போது ஆராயும்போது இக்கால கவிஞர்களும் மிக ரசனையான கவிதைகள் எழுத மலைகளுக்கும், கடற்கரைக்கும் சென்று வருவதை காண்கிறோம். மௌனம் மிகச் சிறந்த கவிதைகளை ஜனிக்கும் என்பது பாரதியார் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. </i></div><div><i><br></i></div><div><i>மிக முக்கியமாக இந்தப் புத்தகத்தின் வாயிலாக பாரதியார் அவர்கள் மிகச்சிறந்த குரல் வளத்தை கொண்டவர் என்றும் அருமையாக பாடல் பாடுபவர் என்றும் நாம் அறிய முடிகிறது அதேசமயம் செல்லம்மா கேட்டாலும், தங்கம்மா கேட்டாலும், சகுந்தலா கேட்டாலும், யதுகிரி கேட்டாலும் மிகுந்த வாஞ்சையோடு அவர் அவர்களுக்காக பாடல்களைப் பாடியிருக்கிறார். ஒருசமயம் முருகேசன் பிள்ளை என்பவரது மகன் ராஜ்பகதூர் வெளிநாட்டிலிருந்து கடல்மார்க்கமாக வந்துகொண்டிருந்தபோது இறந்துவிட்டானென ஒரு தந்தி வருகிறது. மகன் வருவான் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த முருகேசன் பிள்ளை இந்த செய்தி கேட்டு மூர்ச்சையாகி பின்னர் படுத்த படுக்கையாகி விடுகிறார். அந்த தம்பதியினரை தேற்றுவதற்காக பாரதியார் பாடல்களைப் பாடுகிறார். அந்த பாடல்களை கேட்டு சிறிது நேரமாவது அந்த தம்பதியினர் ஆசுவாசம் கொள்கின்றனர். மனிதர்கள் மீது மனிதன் கொண்டவர் பாரதியார் என்பது இதன் மூலம் திண்ணமாகிறது. </i></div><div><i><br></i></div><div><i>இப்படி யதுகிரி அம்மாள் தனக்கு அருகாமையில் இருந்த தன்னோடு வாழ்ந்த பாரதியாரை நமக்கு தன்னுடைய எழுத்தின் மூலம் காட்டி இருக்கிறார். பாரதியார் பொருளாதாரத்தில் மிகுந்த தாழ்ந்த நிலையில் இருந்தார் என்பது நாம் அறிந்ததே. இந்த புத்தகத்தில் கூட ஒரு இடத்தில் தமிழைப் போற்ற வேண்டும் வாழ வைக்க வேண்டும் என்றால் அதை உயிராய் போற்றும் தமிழ் கவிதைகள் தமிழ் மண்ணின் மைந்தர்கள் அடையாளம் கண்டு வாழ்த்தி வாழ வைக்க வேண்டும். நிச்சயமாக அந்த காலத்தில் பாரதியாருக்கு அப்படி யாரேனும் ஒருவர் உத்வேகம் கொடுத்திருந்தால் இன்னும் பல கவிதைகளை நான் பெற்றெடுக்க முடியும் பல நாள் பாரதியாரே நாம் உயிரோடு வைத்திருந்திருக்க முடியும். தன் குடும்பத்தை காக்க பாரதியார் மிகுந்த சிரமப்பட்டு இருக்கிறார். </i></div><div><i><br></i></div><div><i>இந்தப் புத்தகத்தின் வாயிலாக நாம் பெற வேண்டிய அறிவு என்னவெனில் இக்காலத்தில் வாழ நல்ல எழுத்தாளர்களை வறுமையில் வாடும் எழுத்தாளர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களுக்கு உத்வேகம் அளித்தது மேலும் எழுத வைத்து தமிழை காக்க வேண்டும் என்ற சபதம் எடுக்க வேண்டும். </i></div><div><i><br></i></div><div><i>பாரதியாரைப் பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்வதற்கான ஒரு நல்ல புத்தகம் இந்த "பாரதி நினைவுகள்" . இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு பாரதியாரின் அத்தனை படைப்புகளையும் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது, அது வாசிப்பில் வேறு கோணத்தை எனக்கு வழங்குவதாக அமையுமென்று நான் நம்புகிறேன். பாரதியின் படைப்புகளை படியுங்கள் பாரதியாரை கொண்டாடுங்கள்!!! </i></div><div><i><br></i></div><div><i>நூல்: பாரதி நினைவுகள் </i></div><div><i>ஆசிரியர் : யதுகிரி அம்மாள் </i></div><div><i>பதிப்பகம்: கோதை </i></div><div><i>விலை : ரூ. 120/-</i></div><div><i><br></i></div><div><i>அன்புள்ள, </i></div><div><i style="font-weight: bold;">ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்.</i></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-161194075909694560.post-1741400129617407182019-11-02T21:59:00.001+05:302019-11-02T22:10:00.795+05:30இவான் - நூல் விமர்சனம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Yo5WjKE7TAzxeJNh7GQin3wNeHSNyo4SLDCenjq3A7uSDacmM-y90mi1Kzk6H7Nbfr7BPeNPo4Yh8jRp0kkrgQGwRrCmseyLaQFxbkJ2h33k4Hv_wDbIqvtKNEtQFbcMjz_i_jeQWTD4/s1600/1572712234751718-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Yo5WjKE7TAzxeJNh7GQin3wNeHSNyo4SLDCenjq3A7uSDacmM-y90mi1Kzk6H7Nbfr7BPeNPo4Yh8jRp0kkrgQGwRrCmseyLaQFxbkJ2h33k4Hv_wDbIqvtKNEtQFbcMjz_i_jeQWTD4/s1600/1572712234751718-0.png" width="400">
</a>
</div><div><br></div><div><b>வீதி வாசிக்கிறது </b>குழுவின் மூலமாக பரிசு பெற்ற முதல் புத்தகம் இது. வீதி வாசிக்கிறது குழுவிற்கு மிக்க நன்றி. </div><div><br></div><div>இந்த கதையானது ரஷ்யாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த போரின் போது ஒரு சிறுவனது குடும்பம் அனுபவித்த இன்னல்களையும் அதன் மூலம் அந்த சிறுவன் தன்னுடைய நாட்டிற்காக தன்னை எவ்வாறு தகவமைத்துக் கொண்டான் என்பதைப் பற்றிய குறுநாவல். </div><div><br></div><div>போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் தன்னுடைய குடும்பத்தை போரினில் இழந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் அந்த இழப்பினால் மிகுந்த வேதனையுடன் தன் குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக தானே ஒரு கொரில்லா போர் வீரனாக மாறி எதிரி நாட்டுக்கு செல்வதற்காக தன்னை எந்த வகையில் எல்லாம் தயார்படுத்திக் கொண்டான் என்பது கதை.</div><div><br></div><div> நிச்சயமாக இது ஒரு உண்மை கதை. இதில் நீங்கள் மிகுந்த கவனம் கொள்ள வேண்டியது என்னவெனில் 12 வயது சிறுவன் இந்த அளவிற்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள முடியும் எனில் அவன் தன்னுடைய குடும்பத்தின் மீது எவ்வளவு பாசம் கொண்டவனாக இருப்பான் என்பதும் என்பதும் அதேசமயம் மனதிற்குள் எவ்வளவு வேகம் உடையவனாக இருந்திருக்கிறான் என்பதையும் நாம் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டும் . </div><div><br></div><div>கதை தொடங்கும்போது அவன் தன்னுடைய நாட்டின் ஒரு எல்லைப்பகுதியில் இருக்கும் ஒரு ஆற்றங்கரையோரம் தன்னுடைய நாட்டு வீரர்களாலேயே பிடிக்கப் படுகிறான். அங்கிருக்கும் உயர் அதிகாரி நான் உன்னை யாரென்று கேட்கும் பொழுது அவரை அதிகாரம் செய்பவனாக பதிலளிக்கிறான். ராணுவத்தில் இருக்கும் மிக உயரிய அதிகாரிகளை அவன் தெரிந்தவனாக இருக்கிறான் எத்தனை முறை பள்ளிக்கு அனுப்பி விட்டாலும் போர் செய்வதிலேயே குறியாக இருக்கிறான். இறுதியாக அவனுக்கு போர் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. உளவு பார்க்கும் வேலையை அவனுக்கு ஒதுக்குகிறார்கள் எந்த தயக்கமும் இன்றி அதை ஏற்றுக் கொள்கிறான். </div><div><br></div><div>ஆற்றின் ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு இரண்டு உயர் அதிகாரிகள் அவனை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவன் எதிரி நாட்டை வேவு பார்ப்பதற்காக அழைத்துச் செல்லப்படுகிறான். அங்கேயே அவனை விட்டு விட்டு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ராணுவத்தின் சகல தைரியம் பொருந்திய ஒருவனாலேயே அந்த இடத்தில் தாக்குப்பிடிப்பது கடினம். ஆனால் இவான் எல்லாவற்றையும் கடந்து என்ன செய்தான் என்பதே கதை. </div><div><br></div><div>இந்த நாவலை ரஷ்ய மொழியில் விளாதிமிர் பகமோலவ் எழுதி இருக்கிறார். தமிழில் முகம்மது செரீபு மொழிபெயர்த்திருக்கிறார்.</div><div><br></div><div> மொழிபெயர்ப்பைப் பொறுத்தவரை மிகவும் மோசமான மொழிபெயர்ப்பு என்று தான் சொல்வேன். இந்த மாதிரியான அதுவும் உணர்ச்சிவசமிக்க நாவலை மொழிபெயர்க்கும் போது கூடுதல் கவனம் தேவை. அதை ஒரு துளி கூட சரியாக செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. கூகுள் மொழிபெயர்ப்பான்கூட இன்னும் நன்றாக மொழிபெயர்த்திருக்கும். அவ்வளவு எழுத்துப்பிழைகள். புத்தகத்துக்கு உள்ளே எழுத்துப்பிழை என்றால்கூட பரவாயில்லை புத்தகத்தின் பின்னட்டையில் அதுவும் முதல் வரியில் எழுத்துப் பிழை. இதே நாவலை வேறு யாரும் மொழிபெயர்த்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை அப்படி ஏதும் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே. </div><div><br></div><div> பேசப்பட வேண்டிய ஒரு குறுநாவல் அனைவரும் படிக்கவேண்டிய நாவல் </div><div>" இவான் ".</div><div><br></div><div><b><i>நூல் : இவான்</i></b></div><div><b><i>ஆசிரியர் : விளாடிமிர் பகமோலவ்</i></b></div><div><b><i>தமிழில் : முகமது செரீப்</i></b></div><div><b><i>விலை : ரூ. 130/-</i></b></div><div><br></div><div><b>விமர்சனம்</b>: <b>ஸ்ரீமலையப்பன்</b></div><div><br></div><div><br></div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-161194075909694560.post-67662889069903106972019-10-22T10:18:00.001+05:302019-10-22T10:21:54.481+05:30தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்<div>*தமிழகத்தில் சமூக சீர்திருத்தம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixgPOv5A2fHUx71mdwZ2NH56Zm46kn8d6cA_5kr8bJh_9qUOLEqheHTP-seJP0j-GH-_gwJkV3XL2hkmyAG4Xs-eMUmLjshKSw1I0CUPJwWPPiag6lM1Gf1IK6-4LMAJUmSeCYPfsgqviE/s1600/1571719717707142-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixgPOv5A2fHUx71mdwZ2NH56Zm46kn8d6cA_5kr8bJh_9qUOLEqheHTP-seJP0j-GH-_gwJkV3XL2hkmyAG4Xs-eMUmLjshKSw1I0CUPJwWPPiag6lM1Gf1IK6-4LMAJUmSeCYPfsgqviE/s1600/1571719717707142-0.png" width="400">
</a>
</div> இரு நூற்றாண்டு வரலாறு*. </div><div><br></div><div>மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது . நூலை திறந்தவுடனேயே கலைஞர் அவர்களின் நூல் மதிப்புரை நம்மை வரவேற்கிறது. அவரது உரை இந்த நூலை உடனடியாக வாசிக்க தூண்டுவதாக தூண்டுவதாக அமைந்திருக்கிறது. சமூக இயக்கங்கள் மீது அவர் சொல்லிய ஒரு கருத்து கம்யூனிச இயக்கம் என்றால் இயக்கம் என்றால் அது ஏதோ திராவிட இயக்கத்திற்கு முரண்பாடானது அல்ல, அதே போல திராவிட இயக்கம் என்றால் அது கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு முரணான ஒன்றல்ல என்று சொல்லும் போதே பெரியாரோ திராவிட இயக்கமோ இல்லாது போயிருந்தால் இந்த கருணாநிதி கம்யூனிஸ்டாக தான் இருந்திருப்பான் என்று அவர் கூறியது நிறைய கேள்விகளை எழுப்பியிருக்கிறது.</div><div><br></div><div>அடுத்ததாக பேராசிரியர் அருணன் அவர்கள் ஐந்தாம் பதிபிற்கான முகவுரையில் ஒன்றை அருமையாக சொல்லிவிட்டுப் போகிறார் "இறந்த காலம் ஆனது முழுமையாக ஒருபோதும் இறந்து போவதில்லை.அது தனது சாரத்தை நிகழ்காலத்தில் எப்படியோ தக்கவைத்துக் கொள்கிறது. அதனாலேயே கடந்த காலத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் நிகழ்காலத்தை உருப்படியாக உள்வாங்க முடியாது.இன்றைய காலத்தின் படிப்பினைகள் எதிர்காலத்திற்கான பாதையையும் செப்பனிட்டு தருகிறது. இப்படி முக்காலமும் ஒன்றை ஒன்று தொட்டு நிற்கிறது" . அதுபோலவே பெரியாரியவாதிகள் அம்பேத்கரிய வாதிகளும் கம்யூனிசவாதிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்று சொல்கிறார் இன்றளவும் இதில் ஒன்றுபட்டிருக்கிறோமா என்ற கேள்வியை விமர்சனத்தின் வாயிலாக உங்கள் முன் வைக்கிறேன். </div><div><br></div><div>முதலாவதாக அருணன் அவர்கள் சமூக சீர்திருத்தம் என்பதற்கு என்பதற்கு வரையறையை நமக்கு தருகிறார் , "சமூக சீர்திருத்தம் என்பது அடித்தளமான பொருளியல் துறையில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது" என்கிறார். சமூக சீர்திருத்தத்தின் வரலாறு என்பது மனிதகுல வரலாறு என்கிறார். நம்முடைய தமிழ்நாட்டை பொருத்தளவில் சமூக சீர்திருத்தம் என்பது இன்று வரையும் கூட கூட சாதிய ஒடுக்குமுறைக்கும் பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிரான செயல்பாடுகளாக தான் இருக்கிறது. </div><div><br></div><div>அடுத்த அத்தியாயத்தில் சமூக மாற்றம் என்பது 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட துவங்கிய காலகட்டத்தில் இங்கே இருந்த ஜமீன்தார்களும் , பெரிய நிலப்பிரபுக்களும் பஞ்சாயத்தின் பேரிலும், சாதி ஒடுக்குமுறைகள் பெயரிலும் மக்களை அடிமைப்படுத்தி இருந்தார்கள். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு அவர்களுக்கு நாம் என்னதான் அடிமைப்பட்டு கிடந்தாலும் இது உள்ளூரில் நடந்த சமூக பிரச்சனைகளில் இருந்தும் இருந்தும் தமிழக மக்களே வெளியே வர உதவியாக இருந்ததாக அருணன் அவர்கள் குறிப்பிடுகிறார். </div><div><br></div><div> ஒடுக்கப்பட்ட மக்கள் மனுநீதி மூலம் எவ்வளவு இன்னல்களை சந்தித்திருக்கிறார்கள் எனும் ஆதார விளக்கங்கள் இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் நமக்கு ஒன்று தெளிவாகிறது உயர் சாதியாக தன்னை நினைத்துக்கொள்ளும் எவரும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமைகளாக நடத்த விரும்பினார்கள் அதுமட்டுமல்லாது எந்த சாதியினராக இருந்தாலும் தன் வீட்டு பெண்களை தங்களைவிட அடிமை நிலையில் இருக்க வைக்கவே ஆணாதிக்க சமூகம் அனைத்து சாதியிலும் இருந்திருப்பது நமக்கு தெளிவாகிறது. </div><div><br></div><div>இப்படி இருக்க 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் சமூக சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர்கள் கிறிஸ்தவ போதகர்கள் இவர்கள் மூலமாகத்தான் தமிழகத்தில் சமூக மாற்றம் என்ற கருத்தை துளிர்விட்டு இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. </div><div><br></div><div>இந்து மதத்தில் இருந்துகொண்டு முதன்முதலில் உயர் சாதியை வன்கொடுமைகளை எதிர்த்தவர்கள் பற்றி நூலில் நிறைய செய்திகளை சொல்லியிருக்கிறார். </div><div><br></div><div>அடுத்ததாக வந்த பிரம்ம சமாஜம் முக்கியமாக கல்வி வளர்ச்சிக்கும், பெண்கல்விக்கும், சதி ஒழிப்பிற்கும் மிக முக்கியமான இயக்கமாக தமிழகத்தில் இருந்திருக்கிறது. </div><div><br></div><div>வைகுண்ட சாமிகளும், வள்ளலாரும் அயோத்திதாச பண்டிதரும், இரட்டைமலை சீனிவாசன், மாயூரம் வேதநாயகம்பிள்ளை , தியாசபிகல் சொசைட்டி உறுப்பினர்கள் ஜி சுப்ரமணிய ஐயர் போன்றவர்கள் சமூக சீர்திருத்தத்திற்கு எவ்வளவு கருத்துக்களை கூறி இருக்கிறார்கள் என இந்தப் புத்தகத்தைப் படிப்பது வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. </div><div><br></div><div>வள்ளலாருக்கு என்றே ஆறு அத்தியாயங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தன்னுடைய இளமை காலத்தில் வள்ளலார் அவர்கள் இந்து சமயத்தை தழுவி இருந்தாலும் தன்னுடைய 6 திருமுறைகளில் கருத்துக்களை கூறி இருந்தாலும் அவருடைய 41-வது வயதில் இருந்து அவர் இறக்கும் வரையில் சாதிகளையும் மதத்தினையும் கடுமையாக சாடியிருக்கிறார் ஆனால் இன்றோ அவை அத்தனையும் ஆன்மீகம் பரப்பும் இடங்களாக தான் இருந்து வருகிறது. </div><div><br></div><div>மிக முக்கியமாக சுப்ரமணிய ஐயர் விதவைகள் மறுமணத்தை முழுமையாக ஆதரிக்கிறார். தன்னுடைய பெண்ணிற்கு மறுமணம் செய்து வைத்து அந்த காலத்திலேயே மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தி வைத்தார். தியாசபிகல் சொசைட்டி பொருத்தவரையில் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக வலியை ஏற்படுத்தியது மிகப்பெரும் செயலாகும். </div><div><br></div><div>பத்தொன்பதாம் நூற்றாண்டை பொருத்தளவில் நேரடியாக மிகப்பெரிய சமூக சீர்திருத்த மாற்றத்தை கொண்டுவர பிடித்தவரா மாதவையா அவரைப் பற்றிய குறிப்புகளும் புத்தகத்தில் நிறைய இருக்கின்றன. அதேபோல இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பங்கு மிகப் பெரியது. நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம் பற்றியும் நிறைய செய்திகளைத் தருகிறது இந்நூல். </div><div><br></div><div>இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சியின் வாயிலாக சிறிதுசிறிதாக சமூக சீர்திருத்த மாற்றம் தமிழகத்தில் வளரத்தொடங்கியதாக நூல் குறிப்பிடுகிறது. அதைத்தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற சமூகப் போராளியாக மகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய குறிப்புகளை இன்னும் அதனை தெளிவாக விளக்குகிறது. பாரதியாரின் பல்வேறு சமூக சிந்தனைகள் பற்றி அன்றைய காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றி ஆசிரியர் ஒவ்வொன்றாக எடுத்துக் கூறி விளக்குகிறார். </div><div><br></div><div>அடுத்ததாக நீதிக்கட்சியின் தொடக்கம் மற்றும் தமிழக சாதிக் கட்டமைப்புகளை அதை எதிர்த்த செய்திகளையும் தோடு அடுத்ததாக தென் இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் போராளியான சிங்கார வேலன் பற்றி நான்கு அத்தியாயங்களில் அவர்செய்த அரும்பெரும் பணிகள் பற்றி எடுத்துச் சொல்கிறார். </div><div><br></div><div>அடுத்ததாக ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரே உள்ளொளியாக இருந்த காந்திஜி அவர்கள் சாதி பிரச்சனை பற்றியும் காந்திஜி மகளிர் விடுதலைக்கு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் விவரிக்கிறார். </div><div><br></div><div>அடுத்ததாக சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும் பங்காற்றிய இரு பெரும் தலைவர்களான பெரியார் பற்றியும் அம்பேத்கர் பற்றி அதேபோல முத்துராமலிங்க தேவர் பற்றியும் அவர்கள் செய்த அரும் பெரும் பணிகள் பற்றியும் நிறைய செய்திகளை அடுக்கிக்கொண்டே வருகிறார் ஆசிரியர். </div><div><br></div><div>இதில் சாதி கட்டமைப்புகளால் எவ்வாறு மக்கள் பாதிக்கப்பட்டார்கள் அவர்களை அந்த கொடிய தீமையிலிருந்து வெளியே கொண்டுவர இந்த தலைவர்கள் எல்லாம் எந்த அளவிற்கு தியாகம் செய்து பாடுபட்டு வந்தார்கள் என்று சொல்வதோடு அவர்கள் தங்களுடைய கொள்கையிலிருந்து சிலவேளைகளில் வெளியே வந்து அவர்கள் பாதுகாத்த அத்தனையும் தவிடு பொடியான வரலாறையும் சொல்கிறார். </div><div><br></div><div> இந்த நூல் இன்றைக்கும் பொருந்துவதாக இருக்கிறது அதற்குக் காரணம் யார் எதற்காகப் போராடினார்கள் எந்த கொள்கைக்காக போராடினார்கள் அதே கட்சியினரோ இல்லை அந்தக் கொள்கையை கடைபிடித்தவரோ இன்று அந்தக் கொள்கை பிடிப்பவராக இல்லாமல் போனதே அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சமூக மாற்றம் நிகழாமல் இருப்பதற்கு காரணமாக அமைகிறது. மேலும் சமூக மாற்றம் என்பது உடனடியாக நிகழ்வது அல்ல என்பதும் நாம் அறந்ததே!!! </div><div><br></div><div>இந்த மாதிரியான நூல்களை இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் நிச்சயமாக படிக்க வேண்டும். அதற்கு அந்தந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய கலை இலக்கிய அமைப்புகள் இதை மாணவர்களுக்கு கொடுத்து படிக்கவைத்து விளக்கம் கொடுக்க வேண்டும். நம்முடைய வீதி இலக்கிய கூட்டத்திலும் மீண்டும் ஒரு முறை இந்த நூல் திருப்பதி ஐயாவாள் முழுமையாக விமர்சிக்க படவேண்டும் என்பது என்னுடைய அவா! !! </div><div><br></div><div>நூல்: தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் </div><div>ஆசிரியர்: அருணன் </div><div>பதிப்பகம்: வசந்தம் </div><div>பக்கங்கள்: 385 </div><div>விலை : ரூ. 250/-</div><div> அன்புடன்</div><div> ஸ்ரீமலையப்பன் பாலச்சந்திரன்</div>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-161194075909694560.post-43766489610610223832019-10-21T10:43:00.001+05:302019-10-21T10:43:36.898+05:30எல்லோரிடமும் ஒரு கதை<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzOkHEDdyUEOfgmJWAKy94wvD4F8fI6OaKI8jKQP166U0ONLIj7P91ykldQcMRviPX71oI_zxvXl49MkhZGp7ya63R09rxbMxqvEeTBnSAVYfXeB-uZiOxF2Jux7xszl_VuC0TggCXpfd8/s1600/1571634807368024-0.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzOkHEDdyUEOfgmJWAKy94wvD4F8fI6OaKI8jKQP166U0ONLIj7P91ykldQcMRviPX71oI_zxvXl49MkhZGp7ya63R09rxbMxqvEeTBnSAVYfXeB-uZiOxF2Jux7xszl_VuC0TggCXpfd8/s1600/1571634807368024-0.png" width="400">
</a>
</div><p dir="ltr"><u>"</u>எல்லோரிடமும் ஒரு கதை" ஆங்கிலத்தில் சவிதா ஷர்மா எழுதிய நாவலை தமிழில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் மொழிபெயர்த்திருக்கிறார்கள். கதையில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு நம் உணர்வுகளை கட்டிப் போட்டிருக்கிறார் சவி சர்மா அவர்கள். இந்த நூறு அறிமுகமாகி அறிமுகமாகி 100 நாட்களில் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் தாண்டி விற்பனையில் சாதனை புரிந்திருக்கிறது. <br>
<br>
ஒரு பெண் எழுத்தாளராக விரும்புகிறாள், அவளுக்கு கதை கிடைக்கவில்லை அந்த சமயத்தில் காபி கபேவில் ஒரு இளைஞனை சந்திக்கிறாள் அவனை கொண்டு ஒரு கதைக்கரு அவளுக்கு கிடைக்கிறது அவனோடு பயணிக்கிறாள், அவன் பயணம் செய்வதையே பெரிதும் விரும்புகிறான் அதைப்பற்றி எழுத நினைக்கிறார் நினைக்கிறார், இவளுக்கு அவன்மீது தன்னை அறியாமல் காதல் பிறக்கிறது அவனுக்கும் இவள் மீது காதல் பிறக்கிறது இருந்தாலும் இவளை விட்டுவிட்டு அவன் பயணம் செய்வதையே விரும்புகிறான். திரும்பவும் இவர்கள் பார்த்துக் கொண்டார்களா கொண்டார்களா என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான முடிச்சுகளோடு கதையை முடிக்கிறார் சவி ஷர்மா. <br>
<br>
மொழியாக்கம் செய்ததில் மாலதி கிருஷ்ணன் அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த புத்தகத்தில் இருந்து இருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன் மகிழ்ச்சி அடைகிறேன் அடைகிறேன். </p>
<p dir="ltr">1. மக்களுக்கு கதைகள் தேவை.காதலின், நம்பிக்கையின், வாழ்க்கைப் போராட்டத்தின், ஞானத்தின், சில சமயம் வலியின் கதைகள் தேவை. <br>
2. ஒவ்வொருவருக்கும் சொல்ல ஒரு கதை உண்டு உண்டு. ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளர். சில புத்தகங்களில் எழுதப்படும், சில மனதிற்குள் அடைந்துவிடும். </p>
<p dir="ltr">3. காதல் சக்தி வாய்ந்தது. நாம் கற்பனையில் செய்ய முடியும் முடியும் முடியும் என்று எண்ண முடியாததையும் முடியாததையும் செய்ய வைக்கும். </p>
<p dir="ltr">4. எல்லா நம்பிக்கைகளும் விட்டுப் போனாலும், சில பந்தங்களை உடைக்க முடியாது, நாம் யார் என்னவாக இருந்தோம், என்னவாக ஆக கூடும் என்பதை <u>எடுத்துக்காட்டும். </u>அனைத்திற்கும் நடுவில் இயல்பானது நம்மை வந்தடையும். </p>
<p dir="ltr">5. ஒரு ஆண் செய்யக் கூடியவற்றில் மோசமானது ஒரு பெண்ணை தன் மேல் மேல் தன் மேல் மேல் காதல் கொள்ள வைத்து அவளை பதிலுக்கு காதலிக்காமல் இருப்பதுதான். </p>
<p dir="ltr">இப்படி பல்வேறு அருமையான சொற்றொடர்களை அமைத்திருக்கிறார் சவி ஷர்மா இப்படிப்பட்ட வரிகளை அருமையாக மொழிபெயர்த்த மாலதி கிருஷ்ணன் அவர்களுக்கும் நம்முடைய நன்றியை சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும்போது இந்த கதை உங்களை சுற்றிக்கொள்ளும் அது ஒரு கதை சொல்லும். ஆம் சவி ஷர்மா சொல்வதைப்போல எல்லோரிடமும் ஒரு கதை இருக்கத்தான் செய்கிறது. </p>
<p dir="ltr">நூல் : எல்லோரிடமும் ஒரு கதை<br>
ஆசிரியர்: சவி ஷர்மா <br>
தமிழில்: மாலதி கிருஷ்ணன் <br>
பதிப்பகம்: வெஸ்ட்லேண்ட் <br>
விலை: 150 <br>
பக்கம்: 157</p>ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-161194075909694560.post-85320859316882194032019-10-19T15:19:00.001+05:302019-10-19T15:19:57.050+05:30மரங்களும் மனிதர்களும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நூல் விமர்சனம்:<br />
திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம் அவர்கள் மரங்களும் மனிதர்களும் என்ற நூலில் மரத்தின் தலைப்புகளில் 10 சிறுகதைகளை எழுதியிருக்கிறார் ஒவ்வொன்றும் மரத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவினை குறிப்பதாக இருக்கிறது.<br />
<br />
கதையின் தலைப்புகளே வேப்பமரம், புளியமரம், பலாமரம், முருங்கை மரம், ஆலமரம், அரசமரம்என்று மரங்களின் பெயர்கள் வரிசையாக இருக்கிறது. மரங்களோடு நமக்கு இருக்கும் உறவுகளை அவற்றுடன் நாம் பகிர்ந்துகொள்ளும் உணர்வுகளை சார்ந்து கதைகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய மொழிநடை இல்லையென்றாலும் நம்மால் கதையோடு சிறிதேனும் பயணிக்க முடிவதாக நடை அமைந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.<br />
<br />
மரங்களோடு நமக்கு இருக்கும் உறவு என்பது ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. மாறாக நாம் இப்போது வாழும் காலத்தில் மரங்கள் மீதான விழிப்புணர்வு சற்று குறைந்து இருக்கிறது. இதை எடுத்துக்காட்டும் விதமாக இரண்டு மூன்று கதைகள் அமைந்திருக்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு படிப்பினையை நமக்கு வழங்குவதாக நமக்கு வழங்குவதாக இருக்கிறது, இருந்தாலும் கதை சொல்லப்பட்ட விதத்தில் சற்று தொய்வு இருப்பதாகவே தோன்றுகிறது.<br />
<br />
மரத்தையும் குழந்தைகளையும் நாம் வேறுவேறாக நினைப்பதில்லை என்பதை என்பதை ஒவ்வொரு கதையுமே எடுத்துச் சொல்கிறது. வாசிப்பதற்கு மிக எளிதான புத்தகம் புத்தகம். புதிய வாசகர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல புத்தகம் இது. இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய செய்தி என்னவெனில் மரம் இல்லையேல் மனிதர்கள் இல்லை மரங்களை நம்மை விட வேறு யாரும் பார்த்துக் கொள்ளவும் முடியாது பாதுகாக்கவும் முடியாது என்பதை புரிந்து கொண்டால் மரங்களும் வளரும் நல்ல மனங்களும் வளரும்!!!<br />
<br />
நூல் : மரங்களும் மனிதர்களும்<br />
ஆசிரியர்: சாந்தகுமாரி சிவகடாட்சம் பதிப்பகம் : சாந்தி சிவா பப்ளிகேஷன்<br />
விலை :100 ரூபாய்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJZUHlg96IBOwdy26oJr4EmH8pDpFydfDjPSKje94LMiQWc8634jSOtwZqSPW-ayBmHkBdZSzrzczK3uQWlwuG6Myh4zdYt9POWg_CRXsJtqU1EP8gkWDuWFdTjpkWMRjOUtxfnCZF16Qr/s1600/New+Doc+2019-10-18+22.22.22_2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1094" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJZUHlg96IBOwdy26oJr4EmH8pDpFydfDjPSKje94LMiQWc8634jSOtwZqSPW-ayBmHkBdZSzrzczK3uQWlwuG6Myh4zdYt9POWg_CRXsJtqU1EP8gkWDuWFdTjpkWMRjOUtxfnCZF16Qr/s320/New+Doc+2019-10-18+22.22.22_2.jpg" width="218" /></a></div>
</div>
ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-161194075909694560.post-72385703249132928212019-02-26T21:18:00.000+05:302019-02-26T21:42:37.366+05:30முத்தன் பள்ளம்" - "கண்ணீரும் கனவுகளும்"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
#புத்தக_விமர்சனம்<br />
<br />
"முத்தன் பள்ளம்" -<br />
"கண்ணீரும் கனவுகளும்"<br />
<br />
இது ஒரு சீரியசான நாவல் அல்லது ஒரு வரலாற்று நூல் அல்லது வெளிப்படையாக சொல்லப்பட்ட புனையப்படாத ஒரு ஊரின் உண்மைக் கதை அல்லது உண்மை நிலை இப்படி எப்படி வேண்டுமானாலும் இதற்கு பெயர் வைத்துக்கொள்ளலாம்.<br />
<br />
ஒரு தேர்ந்த வரலாற்று அறிஞர் ஒரு அரசை பற்றியோ, ஒரு சமுகத்தை பற்றியோ, ஒரு அரசனைப் பற்றியோ, வாழ்ந்த மக்களை பற்றியோ, இயற்கை சூழல்கள் பற்றியோ, இப்படி எத்தனை பற்றிகளை பற்றி விவரிப்பாரோ அத்தனை பற்றிகளைப் பற்றியும் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து அலசி ஆராய்ந்து அரங்கேற்றியிருக்கிறார்.<br />
<br />
கந்தர்வக்கோட்டை காந்தி சிலை முக்கத்தில் இருந்து போக்கிமான் பூச்சி விளையாட்டின் மூலம் புறப்படும் பயணம் முத்தன் பள்ளத்தை பற்றி மட்டும் சொல்வதற்காக அல்ல முத்தன் பள்ளத்தின் மூலமாக அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் அதன் வரலாறுகளை சிறப்பம்சங்களை குறைகளை சொல்வதாக பகுதி 1 அமைந்திருக்கிறது. பகுதி ஒன்னு முறையே அக்கச்சிபட்டி, மல்லிகை நத்தம், பெரியகோட்டை, ஒட்டப்பாலம், சொக்கம் பேட்டை, வேலாடிப்பட்டி, மஞ்சம்பட்டி, வெள்ளாள விடுதி, கல்லாக்கோட்டை இப்படியே இறுதியாக முத்தன் பள்ளம் நோக்கி போக்கிமான் பூச்சி சொல்ல சொல்ல எழுத்தாளர் செல்வதாக கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.<br />
<br />
இப்படி போக்கிமான் பூச்சி ஒவ்வொரு ஊருக்குள்ளும் எழுத்தாளரை கொண்டு செல்லும்போது அவர் கண்ணில் தென்படும் அத்தனை பதாகைகளும் ஊரை மட்டுமல்ல நாவலில் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு விட்டது என்றே எனக்குப் படுகிறது.<br />
<br />
போக்கிமான் பூச்சி, பதாகைகளை காட்டாமல் வேறு எதையாவது அடையாளமாக காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. இருப்பினும் மேற்கோள் காட்டி இருக்கும் அத்தனை பதாகைகளும் தற்கால அரசியலை, அரசியல்வாதிகளை, நடிகர்களை, சுயநலவாதிகளை, சாதிகளை, கட்சிகளை பதம் பார்த்து தான் செல்கிறது. இந்த ஒன்றிற்காக பதாகைகளையும் போக்கிமான் பூச்சியயையும் வரவேற்கலாம்.<br />
<br />
அடுத்ததாக பகுதி இரண்டில் போக்கிமான் பூச்சி காலடி எடுத்து வைக்கும் இடத்தில் முத்தன் பள்ளம் இருக்கிறது. அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டியை விட அங்கு வாழும் மக்களின் நிலை மிக மோசமாக மோசத்திலும் மோசமான ஒன்றாக இருப்பது கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கவலையளிக்கிறது.<br />
<br />
முத்தன் பள்ளம் ஏதோ திடீரென்று விண்வெளியில் இருந்து பறந்து வந்து அவதரித்த ஊர் அல்ல. அதன் வரலாறு மிகப்பெரியது. அதை எழுத்தாளர் மிக கவனமாக கையாண்டு இருக்கிறார். முத்தன் பள்ளம் உருவாக அதன் பின்னால் இருக்கும் பாட்டன் , அவரின் முந்தைய வரலாறு, பாட்டனின் பாட்டன் வரலாறு என்று அத்தனைக்குள்ளும் பயணித்து ஒரு வரலாற்றுப் பெட்டகமாக குறிப்பாக முத்தரையர்கள், பல்லவர்கள், பல்லவராயர்கள், சோழர்கள், நாயக்கர்கள் என அத்தனை அரசர்களும் முத்தன் பள்ளம் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்கள்.<br />
<br />
இதில் முத்திரையர்களின் வீரம் முழுமையாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது புதுக்கோட்டை சமஸ்தானத்தை பற்றியும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் முத்தன் பள்ளம் உருவாக எவ்வாறான உதவிகளை செய்தார் என்றும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.<br />
<br />
இதற்கிடையில் பாட்டனின் உழைப்பு, முத்தாயியின் மீது அவருக்கு இருந்த காதல் மிக லாவகமாக சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவே அந்த ஒரே இரவில் காதல் வந்ததா என்று கொஞ்சம் நம்பத்தான் முடியவில்லை இருந்தாலும் அந்த பத்தாவது பகுதி மிகுந்த சுவாரசியமாக இருந்தது.<br />
<br />
இறுதியாக போக்கிமான் பூச்சி முத்தன் பள்ளத்தை நோக்கி விரைந்து இறுதியாக ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்து இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு மனிதனின் தொடைக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்டது மிகுந்த வேதனை தான். இறுதிப்பக்கங்கள் என்னை மிகவும் இதயம் நொறுங்க வைத்துவிட்டது.<br />
<br />
இறுதியாக சமகாலத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் முத்தன் பள்ளத்தின் மீதும் அங்கு வாழும் மக்களின் மீதும் அவர்கள் படும் துயரத்தின் மீதும் கொஞ்சமேனும் இரக்கப்பட வேண்டும் இல்லையேல் அவர்கள் ஆட்சியிலிருந்து இறக்கப்படவேண்டும்.<br />
<br />
ஒற்றை வரியில் இந்த முத்தன் பள்ளம் நாவலைப் பற்றி சொன்னால் போக்கிமான் பூச்சியின் மூலம் அண்டனூர் சுரா என்ற Common மேன் கண்டுபிடித்த பழங்கால வரலாற்று சொர்க்கபூமி.<br />
<br />
#இந்த_ஆண்டில்_இதுவரை_5<br />
#புத்தக_விமர்சனம்</div>
ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-161194075909694560.post-50643654439104743122019-02-25T12:08:00.000+05:302019-02-25T12:08:50.893+05:30மரப்பசு - புன்சிரிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
#மரப்பசு_விமர்சனம்<br />
<br />
இறுதியாக 20 நாட்களுக்கு பிறகு மரப்பசு படித்து முடித்துவிட்டேன். தி.ஜா அவர்கள் இந்த கதையை ஒவ்வொரு புள்ளியிலும் மெருகேற்றியிருக்கிறார்.<br />
<br />
ஆரம்பத்தில் இந்த நாவலை படிக்க எனக்கு பிடிக்கவில்லை ஏனென்றால் ஒவ்வொரு பத்து பக்கத்தை தாண்டும்போதும் கொஞ்சம் சலிப்போடு கடந்து வந்தேன். காரணம் பேசப்பட்ட கதை என்பது நான் சந்திக்காத சந்திக்க விரும்பாத ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தது. இறுதியாக இந்த கதை எனக்குள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியிருக்கிறது.<br />
<br />
பெண்களுக்கான சுதந்திரம் என்பது இந்த நாட்டில் இருக்கிறதா என்ற கேள்வியை வைத்தால் நிச்சயமாக அது ஒரு ஹைபோதெடிக்கள். ஒரு பெண் இந்த சமூகத்தில் இன்னும் குறிப்பாக இந்திய திருநாட்டில் சுய சிந்தனையின் படி வாழ விரும்பினால் அவளுக்கு பெயர் வேறு என்று இந்த சமூகம் அர்த்தம் சொல்லி வைத்திருக்கிறது. அந்த நிலையில் ஒரு பெண் சுய சிந்தனையோடு வாழ முடிவெடுத்தால் என்னென்னவெல்லாம் நிகழுமோ அதுவே இந்த நாவல்.<br />
<br />
மாறாக என்னுடைய சிந்தனையில் இந்த கதையில் வரும் அம்மணி போன்றே நாட்டிலுள்ள அனைத்து பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.<br />
ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பச் சூழல் என்பது வேறு சமூகம் என்பது வேறு.<br />
<br />
அப்படி இருக்க ஏன் இப்படி ஒரு நாவலை செய்திருக்க வேண்டுமென்று யோசித்தால் அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு நாவல் சமூகத்தில் தேவைப்பட்டிருக்குமோ என்னவோ? இந்த காலகட்டத்திற்கு இந்த நாவல் தேவையா என்றால் மூட நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு பெண்களை பொருளாக எண்ணம் கொள்ளும் ஆண்களுக்கு இந்த புத்தகம் நிச்சயம் தேவைப்படும்.<br />
<br />
இதையெல்லாம் மீறி எனக்கு அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் போன்ற பாலச்சந்தர் படங்கள் இந்த நாவலை படிக்கும் போது என் கண்முன்னே ஓடியது. காரணம் பாலச்சந்தர் தன் படங்களில் ஒவ்வொரு சீனுக்கும் அப்படி ஒரு உழைப்பைகொடுத்திருப்பார். பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பேசும் பாலச்சந்தர் கதாபாத்திரங்கள் போல ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த நாவலிலும் பேசுவது போல் எனக்கு தோன்றிற்று. பாலச்சந்தர் படம் போன்றே இந்த நாவலை பிளாக் அண்ட் ஒயிட்டில் காட்சிப்படுத்திக்கொண்டேன்.<br />
<br />
ஒவ்வொரு பக்கத்திலும் வசனநடை, எதுகை மோனை கொண்ட சொற்கள், ஏராளமான கற்பனை நிறைந்த உவமைகள், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொற்கள். அப்பப்பா!! தி.ஜா, தி.ஜாதான். கோபாலி, அம்மணி, மரகதம், பச்சையப்பன், ப்ரூஸ், கண்டு மாமா, அம்மணி பெரியம்மா, பெரியப்பா இப்படி ஒவ்வொன்றும் மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு கதாபாத்திரத்தை ஒரு வாசகனுக்கு கடத்திவிட முடியும் என்றால் நிச்சயமாக அந்த நாவல் நல்ல நாவல் தானே.<br />
<br />
தி.ஜா போன்ற பெரிய எழுத்தாளர்களுக்கு, ஜாம்பவான்களுக்கு விமர்சனம் சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என்றால் தெரியவில்லை. மாறாக ஒரு வாசகனாக ஒரு எழுத்தாளன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கதையும் விமர்சிக்கப்படும் போது அந்த நாவல் அந்தக் கதை இன்னும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைப் சென்றடையும் என்றால் நான் செய்யும் விமர்சனம் தகுதிக்குரியதே!!!<br />
<br />
பல்வேறு பதிப்பகங்கள் இந்த நாவலை பதிப்பித்திருக்கிறது. காலச்சுவட்டில் கொஞ்சம் நல்ல பிரண்டாக இருப்பதைப் பார்த்தேன் வாங்கிப் படியுங்கள்.<br />
<br />
ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் ஒரு பெண்ணுக்கு உங்களால் எந்த வகையிலும் துன்பம் நேராமல் இருந்தால், கொஞ்சமே கொஞ்சம் மகிழ்ச்சியை அவர்களுக்கு உங்களால் கொடுக்க முடியுமென்றால், அவர்களுடைய சுதந்திரத்திற்கு எவ்விதத்திலும் நீங்கள் தடையாக இல்லாமல் இருந்தால் நிச்சயம் ஒரு மரப்பசு தேவையில்லை.<br />
<br />
ஒற்றை வரியில் மரப்பசு பற்றி சொல்ல வேண்டும் என்றால் அம்மணி போன்றே ஒரு புன்சிரிப்போடு இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்.<br />
<br />
#இந்த_ஆண்டில்_இதுவரை_4<br />
#விமர்சனம்<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjolQcvsB3mJ5FxWqQRvq9H4azPKCIeqwpjawj8rRbKCOi3eDnUXOua3r4Q55aa7fDjEr2nYyKxU8bHCbl9UhmvWpHb1iiXtfZnSbFhxe-PNtN6t4bgtkDVYEz2_f6cXlWMPdc0EVhDv4mp/s1600/IMG_20190205_190849.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjolQcvsB3mJ5FxWqQRvq9H4azPKCIeqwpjawj8rRbKCOi3eDnUXOua3r4Q55aa7fDjEr2nYyKxU8bHCbl9UhmvWpHb1iiXtfZnSbFhxe-PNtN6t4bgtkDVYEz2_f6cXlWMPdc0EVhDv4mp/s320/IMG_20190205_190849.jpg" width="240" /></a></div>
</div>
ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-161194075909694560.post-33445054072545468362019-02-02T13:43:00.001+05:302019-02-02T13:43:12.738+05:30பெயரற்றது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div dir="ltr">
சமீபத்தில் படித்து முடித்திருக்கும் புத்தகம் திருமிகு சயந்தன் அவர்கள் எழுதிய "பெயரற்றது". இதில் மொத்தம் 8 சிறுகதையில் இருக்கின்றன. அனைத்து சிறுகதைகளுமே ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வின் முரண்களையும் அவர்கள் படும் துன்பத்தையும் வேதனைகளையும் சொல்வதாக இருக்கிறது. </div>
<br />
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
இன்னும் கூடுதலாக ஈழத்தின் நடையிலேயே இருப்பது புத்தகத்திற்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைகிறது. மாறாக சில சிறுகதைகளில் சொல்லப்படக்கூடிய வார்த்தைகள் எனக்கு கொஞ்சம் புரியாமல் இருந்தது அது கதையை விட்டு என்னை வெளியே நடத்திச் சென்றுவிட்டது.</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
இருக்கும் 8 கதைகளில் என்னை மிகவும் கவர்ந்த கதைகள் சின்ராசு மாமா கதை மற்றும் 90 சுவிஸ் பிராங்குகள் இரண்டு கதைகளுமே சிறிது நேரம் என்னை மற்ற வேலைகளை செய்ய விடாமல் செய்தது அதிலும் சின்ராசு மாமா கதையில் வரும் அந்த குழந்தையின் சடலம் கடலில் மிதப்பது போன்ற ஒரு சொல்லாடலில் என்னையும் மீறி கண்ணீர் வடித்தேன்.</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
இதில் ஈழத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்க்கை அங்கு விடுதலைப்புலிகளின் செயல்கள் அங்கே இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அது அப்பாவி மக்களை எப்படி அங்கிருந்து புலம் பெயர செய்கிறது என்பதை ஒவ்வொரு கதையிலும் மிகவும் விரிவாகவும் அதேசமயம் மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிவந்து விடமாட்டோமா என்ற ஏக்கத்தை அழுத்தமாக எழுத்தாளர் கதைகளில் படைத்துள்ளார்.</div>
<div dir="ltr">
இன்னொரு முறை வாசித்தால் மட்டுமே எனக்கு மேலும் இதிலிருந்து கூடிய கதைகள் விளங்கும் என்று நினைக்கிறேன். வெளியிட்டு இருப்பது தமிழினி பதிப்பகம் விலை ரூபாய் 90.</div>
<div dir="ltr">
<br /></div>
<div dir="ltr">
இந்த புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாக வழங்கிய Devatha Tamil அம்மாவிற்கு மகனின் நன்றிகள்...</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRn1nISvL-M5x4ftvdcMwJmYroTwJzX1Ffr5oTXBLTLDk77ZLxocfqrVmp7zerSCkOEmwQSKyQNf8zMmcFcOlHOsMcY5yOlJGq-Bwf2KX-ITmyKAK878pnxN4zCba4yB4K9EfDKqZZRASz/s1600/IMG_20190202_125823.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1200" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRn1nISvL-M5x4ftvdcMwJmYroTwJzX1Ffr5oTXBLTLDk77ZLxocfqrVmp7zerSCkOEmwQSKyQNf8zMmcFcOlHOsMcY5yOlJGq-Bwf2KX-ITmyKAK878pnxN4zCba4yB4K9EfDKqZZRASz/s320/IMG_20190202_125823.jpg" width="240" /></a></div>
</div>
ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-161194075909694560.post-194142325583287062019-01-21T22:06:00.000+05:302019-01-21T22:06:14.207+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="_3x-2" data-ft="{"tn":"H"}" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 12px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div data-ft="{"tn":"H"}" style="font-family: inherit;">
<div class="mtm" style="font-family: inherit; margin-top: 10px;">
<div style="font-family: inherit; position: relative;">
<div class="_1ktf" data-ft="{"tn":"E"}" style="font-family: inherit; margin-left: -12px;">
<a ajaxify="https://www.facebook.com/photo.php?fbid=2054168387993993&set=a.555027221241458&type=3&eid=ARDqCv2U_1azdFc0tLfJh0-JW5DXZYWI8mSwWZk3faczu4pxyk-rMnw9P9Y6jG1uLxzvfrfRhWtGWW1N&size=1511%2C2015&source=72&player_origin=unknown" class="_4-eo _2t9n _50z9" data-ft="{"tn":"E"}" data-ploi="https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/50309744_2054168394660659_9129734134824960000_o.jpg?_nc_cat=103&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=57b9e5971740e040968360fecc8db837&oe=5CFA69E2" data-plsi="https://scontent.fmaa2-2.fna.fbcdn.net/v/t1.0-9/50879404_2054168397993992_3341030256122265600_n.jpg?_nc_cat=110&_nc_ht=scontent.fmaa2-2.fna&oh=282a9fd4ccec110e3a58c84d7ac4d23d&oe=5CFC5D8D" data-render-location="timeline" href="https://www.facebook.com/photo.php?fbid=2054168387993993&set=a.555027221241458&type=3&eid=ARDqCv2U_1azdFc0tLfJh0-JW5DXZYWI8mSwWZk3faczu4pxyk-rMnw9P9Y6jG1uLxzvfrfRhWtGWW1N" rel="theater" style="box-shadow: rgba(0, 0, 0, 0.05) 0px 1px 1px; color: #365899; cursor: pointer; display: block; font-family: inherit; position: relative; text-decoration: none; width: 516px;"></a></div>
</div>
</div>
</div>
</div>
<br />
<div class="_5pbx userContent _3576" data-ft="{"tn":"K"}" id="js_3vf" style="-webkit-text-stroke-width: 0px; background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; font-style: normal; font-variant-caps: normal; font-variant-ligatures: normal; font-weight: 400; letter-spacing: normal; line-height: 1.38; margin-top: 6px; orphans: 2; text-align: start; text-decoration-color: initial; text-decoration-style: initial; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: 2; word-spacing: 0px;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOv_ZBcNwhe6X0IEJfoKL2ngxr5KDsrOYqHhCnRPlz54QWRTdfRDiIz6H0Ju303or0UUX-jNW8E0Pxxgv6NyoLuL0M5AdpVp_MdHNiZJnDn87GlPmBFilYlV8p0sINp4wkdDomtTSWgaMF/s1600/50879404_2054168397993992_3341030256122265600_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOv_ZBcNwhe6X0IEJfoKL2ngxr5KDsrOYqHhCnRPlz54QWRTdfRDiIz6H0Ju303or0UUX-jNW8E0Pxxgv6NyoLuL0M5AdpVp_MdHNiZJnDn87GlPmBFilYlV8p0sINp4wkdDomtTSWgaMF/s320/50879404_2054168397993992_3341030256122265600_n.jpg" width="240" /></a></div>
<div style="font-family: inherit; margin: 0px 0px 6px;">
அடுத்ததாக கையில் எடுத்திருப்பது சயந்தன் அவர்களின் "பெயரற்றது"</div>
<div style="display: inline; font-family: inherit; margin: 6px 0px 0px;">
<a class="_58cn" data-ft="{"type":104,"tn":"*N"}" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_3?source=feed_text&epa=HASHTAG" style="color: #365899; cursor: pointer; font-family: inherit; text-decoration: none;"><span class="_5afx" style="direction: ltr; font-family: inherit; unicode-bidi: isolate;"><span aria-label="hashtag" class="_58cl _5afz" style="color: #365899; font-family: inherit; unicode-bidi: isolate;">#</span><span class="_58cm" style="font-family: inherit;">புத்தகம்_நம்பர்_3</span></span></a></div>
</div>
</div>
ஸ்ரீமலையப்பன்http://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.com0