திங்கள், 11 நவம்பர், 2019

முன்னோடி - நூல் அறிமுகம்

சமீபத்தில் படித்து முடித்திருப்பது  கலில் ஜிப்ரான் அவர்களின் முன்னோடி என்ற  புத்தகம்.  தமிழில் மொழிபெயர்த்து இருப்பது கவிஞர் இளவல் ஹரிஹரன். அருமையான கவிதைகள் மற்றும் குட்டி குட்டி கதைகள்  இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. படிப்பதற்கு மிகவும் அலாதியான புத்தகம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது  உங்களுக்குள்ளேயே ஒரு கவிதை எழுதும் திறன் மிகச் சாதாரணமாக வந்து விடும், மனம் மிகுந்த அமைதியையும் தனிமையையும் தேடும்.

கலில் ஜிப்ரான் கவிதைகளை உங்களால் எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்றால் நிச்சயமாக முடியும். கவிதைகளின் ஜீவன் உங்கள் உயிரோடு கலந்து  மிகுந்த மன அமைதியை  ஏற்படுத்தவல்ல  வார்த்தைகள்  கதையிலும் கவிதையிலும் நிறைந்திருக்கிறது .

மிகுந்த தீர்க்கதரிசனமான வார்த்தைகளை மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி எழுத்தின் தரம் மாறாமல்  கவிதைகளின் சாரம் குறையாமல் ஒரு அருமையான மொழிபெயர்ப்பை கவிஞர் இளவல் ஹரிஹரன் தந்திருக்கிறார். கவிதைகளை முழுமையாக உள்வாங்காமல் இத்தகைய வார்த்தைகள் வந்து விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

மனித வாழ்வின் எதார்த்தத்தை இந்த நூல் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. மனிதனின் ஆசை, பொறாமை, வஞ்சம், கோபம், வாழ்வில் நிலையில்லாத தன்மை  இப்படி பல்வேறு தலைப்புகளில் கதைகளும் கவிதைகளும் இருக்கிறது.  கலில் ஜிப்ரான் எழுத்துலகின் ஒரு தீர்க்கதரிசி என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.  நிச்சயமாக இந்த புத்தகத்தின் தலைப்பு போல் அவர் நமக்கு முன்னோடியாக தான் இருக்கிறார்.

நூல் : முன்னோடி
ஆசிரியர் : கலில் ஜிப்ரான்
தமிழில் : கவிஞர் இளவல் ஹரிஹரன்
பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம்
விலை : ரூ. 40

5 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...