வெள்ளி, 27 நவம்பர், 2015

பல்ப் எரிந்தபோது....

1. மெய் மறந்து.....

உன்  பெயரை எழுத துவங்கினேன்
மை தீர்ந்தது
காகிதம் பறந்தது
இருந்தும்
எழுதிகொண்டிருக்கிறேன்
இரண்டு மணி நேரமாய்
உன் பெயரை

2.  உள்ளே நீ...

ஆசிரியரிடம் பாராட்டு
கவனம் சிதறாமல்
படித்தற்க்காய்
எனக்கு மட்டுமே தெரியும்
புத்தகத்தின் உள்ளே
உன் புகைப்படம் என்று...

3. மறந்தேன்....நினைத்தேன் ....விழித்தேன் 


கணநேரம் சிந்தையிலிருந்து மறைந்தாய்
தாக்கியது மின்சாரம்
திடுக்கிட்டு விழித்தேன்
நினைவு திரும்பியது
உன் கடைகன்பார்வையால்
நினைவிழந்திருக்கிறேன்
வாழ்நாள் முழுதும்
காத்திருக்கிறேன்
நினைவிழக்க....



புதன், 18 நவம்பர், 2015

ஆசையே அலைபோலே...

     

ஆசையை வெறுக்கும் புத்தன் அல்ல எவரும் இங்கே. அடுத்ததாக கடவுள் என்ற கோட்பாட்டிற்குள்ளும் போகவிருப்பமில்லை. இருப்பினும் தொடர் பதிவை மைதிலி அக்கா அவர்களின் அன்பு கோரிக்கையோடு தொடர்கிறேன்.

    


௧.உழைத்துப் பிழைக்க நினைக்கும் மனிதனுக்கு உடனடியாக  வேலை வேண்டும்.

௨.குழந்தைகளை கொண்டாட நினைக்கும் பெற்றோர் சிறிதேனும் குழந்தைகளாய் மாற வேண்டும்.

௩.புரிந்துகொள்ளும் உள்ளம், உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனம், விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் யாவரும் பெற்றிட வேண்டும்.

௪.சிறுவன் என்ற எண்ணம் தவிர்த்து சிந்தனையை தூண்டும் ஒவ்வொருவரையும் மதிக்க கற்றல் வேண்டும்.

௫.இயற்கையை ரசிக்க பெற்றோர் தன் பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும்.

௬.சம்பாதிக்கும் பணம் அனைத்தும் அடுத்தவர் மகிழ்ச்சியை கெடுக்காவண்ணம் செலவு செய்யப்படவேண்டும்.

௭.சாதி, மதம் இல்லாத விண்ணப்ப படிவம் வேண்டும்.

௮.மக்களை நேசிக்கும் தேசத் தலைவன் வேண்டும்.

௯ .குப்பைகள் காணமுடியாத தேசம் வேண்டும்

௧௦.கடைசி ஆசை - இதில் ஒன்றாவது நிறைவேற வேண்டும்.




புதன், 4 நவம்பர், 2015

மாரி மனம்மாறி...

கருப்பன் அவன் காவலாளி
ஊரிலேயே உயரமானவன்
பறந்து விரிந்த தோல்கள்
முடியும் அடர்த்தி
வயது ஒரு தொண்ணூறு
எப்போதும் சிரித்த முகம்
எதற்கும் கலங்காதவன்
இடிவிழுந்தும் பிழைத்தவன்

சந்தித்தவர்கள் லட்சோபலட்சம்
பாசக்காரன்  அனைவருக்கும்
அவன் தோலேரி விளையாடாத பிள்ளையில்லை
முதலாளி மாரியப்பன்
மூன்றாம் தலைமுறைக்காரன்
முடிவெடுக்க தெரியாதவன்
முரடன்... முட்டாளும்கூட

முதலாளிக்கு பெண்ணுண்டு
ரமாதேவி என்றபேரில்
கருப்பனுக்கு ஒரேமகன்
காத்தவராயன் அவன்
காதலில் மிதந்தார்கள்
ராயரமா ஆனார்கள்

சந்திக்க ஒரே இடம்
கருப்பண்ணசாமி கோயில்
விழிகள்  பேசியதும்
கைகள் குலவியதும்
கருப்பண்ணசாமி முன்தான்

கருப்பனுக்கு தெரிந்தது
காதல்  கலவரங்கள்
அகத்திலே பரவியது
அணையாத காட்டுத்தீ
தீயினால் அழிவது
காடன்றி வேறுயில

மனம்தேற்றி தலையசைத்தான்
காதலர்கள் இணையராக
ஊர்விட்டு ஊர்சேர்க்க
ஊர்சிதம் செய்தார்கள்
முதலாளி மாரியப்பன்
முரடன் ஆயிற்றே
முன்கோபி என்செய்வான்
பதறியது கருப்பனகம்

காட்டுதீ பரவியது
எட்டுப்பட்டி எங்கெங்கும்
ஈட்டியும் அருவாளும்
போனயிடம் சானையடி
கொதித்தது ஊரெங்கும்
கொன்றுவிட இருவரையும்

நண்பர்கள் மூவிருவர்
நல்லமனூர் வேடுவர்கள்
வெட்டருவா ஏந்திகொண்டு
வயிறுபிழைக்க வந்தார்கள்
கருப்பனை பார்த்தவர்கள்
கண்டகாட்சி அனைத்தையும்
முதலாளியிடம் கூறிடவே
முரடன் மாரியப்பன்
முடிவெடுத்தான்  முட்டாளாய்

வெட்டச்சொல்லி ஆணையிட
வேகம்கொண்ட வேடுவர்கள்
விவேகமற்ற வீனர்களாய்
வீரகாரம் பேசிக்கொண்டு
வெட்டிவிடப்  போனார்கள்
வயதான கருப்பனையும்

நேரே சென்றவர்கள்
கால்வேறு கைவேறாய்
கழுத்தறுத்துப் போட்டார்கள்
கைகாலை கட்டியெடுத்து
முதலாளி மாரியப்பன்
காலில் போட்டார்கள்

பணம்கொடுத்த மாரியிடம்
வந்திருந்த கன்னியப்பன்
வெட்ட மனமில்லை
கருப்பனை பார்த்தவுடன்
வெட்டச்சொன்ன காரணமென்ன
மகளுக்காய் மரத்தினை

முட்டாள் மாரியப்பன்
புத்தனாய் பதில்சொன்னான்
முதிர்ந்த மரம் நல்ல மரம்
மணமகன் ராயனுக்கு
கட்டில் செய்யப்போகுமரம்
கெட்டிமரம் கருப்பன்மரம்

குழவியை தாலாட்ட
தொட்டில் செய்யப்போகும்மரம்
அப்பத்தா ரமாதேவி
அன்பாய் வைத்தமரம்
அங்கேயே வைக்கிறேன்
(என்) பெயர்சொல்ல அடுத்தமரம்....
















நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...