சனி, 29 ஆகஸ்ட், 2015

வெகுதொலைவில் இல்லை - கவிதை

உனையின்றி உண்டதில்லை உணவு குழவியில்
உனையின்றி புனைந்ததில்லை கவிதை காதலுக்காய்
உனையின்றி ஆகவில்லை கவிஞர் கிறுக்கனுட்பட
உன்னுள் சிறு கலக்கம் காண்கிறேன்
என்னிலும் அக்கலக்கம் தொற்றிகொண்டது
அடியேன் காரணம் கண்டறியேன்!

என்னுள் நானே சிந்தித்துக் கொண்டேன்
என்னுள் ஊடுருவிப் பாய்ந்ததோர் ஒளிவெளிச்சம்
தென்றலாய் வருடியதது மின்னலாய் வெட்டியது
இடியாய் முழங்கியதது மழையாய் பொழிந்தது
சிட்டாய் சிறகடித்தது வினாக்கள்
இதோ இதுவாய் இருக்குமோ ?

வண்டு நுழைந்த செவிகள் போல் -
உங்கள் மனத்தடத்தின் ஒலிகளும் எஞ்செவிகளில்
அதோ அதுவாய்த்தான் இருக்குமோ ?
இருக்கலாம் என்றே சிந்தை சொல்கிறது
சிந்தை சிந்தித்ததை சிந்துகிறேன் சிதறாமல்
சின்னவனின் சிந்தனையில் சிந்தியதிதுதான் !!!

மனிதருள் அன்பு குறைத்ததுதான்
கலக்கத்தின்  காரணமோ? - வெண்ணிலவே
உன்னுள் அக்கலக்கம் என்றுதான் மறையும்
உறுதியாய்ச் சொன்னால் அது ...........................
(தலைப்பை படிக்கவும் )

6 கருத்துகள்:

நூல் விமர்சனம் - அஞ்ஞாடி

அஞ்ஞாடி! இந்த நூலினை படிப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் நான் மதிக்கும் தமிழாசிரியர்களில் ஒருவரான இயற்கையோடு கலந்தாலும் என...